search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்டு டிரம்ப்"

    • அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
    • ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பங்கேற்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

    இதற்கிடையே, அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்ட் டிரம்ப் தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    நவம்பர் 5-ம் தேதியை (அதிபர் தேர்தல்) நினைவில் வைத்து கொள்ளுங்கள். அது நமது நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என்னை மீண்டும் அதிபராக தேர்வு செய்யவில்லை என்றால் ரத்தக்களறி ஏற்படும் என தெரிவித்தார்.

    மெக்சிகோவில் கார்களை தயாரித்து அமெரிக்கர்களுக்கு விற்கும் சீனத் திட்டத்தை விமர்சித்தபோது அவர் இவ்வாறு கூறினார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தக் கார்களை அவர்களால் விற்க முடியாது. நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், அது ஒட்டுமொத்த ரத்தக்களறியாக இருக்கும் என்றார்.

    இதுகுறித்து அதிபர் ஜோ பைடன் கூறுகையில், அவர் மற்றொரு ஜனவரி 6-ம் தேதியை விரும்புகிறார். அமெரிக்க மக்கள் இந்த நவம்பரில் அவருக்கு மற்றொரு தேர்தல் தோல்வியைக் கொடுக்கப் போகிறார்கள். ஏனெனில் மக்கள் அவரது பயங்கரவாதம், வன்முறை மீதான அவரது பாசம் மற்றும் பழிவாங்கும் தாகம் ஆகியவற்றை நிராகரித்து வருகின்றனர் என தெரிவித்தார்.

    • வாஷிங்டனில் 62 சதவீத வாக்குகள் பெற்று நிக்கி ஹாலே வெற்றி.
    • 2020 அதிபர் தேர்தலில் வாஷிங்டனில் ஜோ பைடன் 92 சதவீத வாக்குள் பெற்றிருந்தார்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த வருட இறுதியில் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

    அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார்? என்பதற்காக தேர்தல் அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படும். ஒட்டு மொத்தமாக அதிக செல்வாக்கு பெரும் நபர் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.

    தற்போது டொனால்டு டிரம்ப், நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. ஏற்கனவே அதிபராக இருந்த டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவு அதிகமாக இருந்த போதிலும், நிக்கி ஹாலே பின் வாங்காமல் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் வாஷிங்டன் தேர்தலில் நிக்கி ஹாலே வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிராம்பிற்கு எதிராக நிக்கி ஹாலே பெறும் முதல் வெற்றி இதுவாகும். தொடர்ந்து வெற்றிபெற்று வந்த டொனால்டு டிரம்பிற்கு இது முதல் தோல்வியாக அமைந்துள்ளது.

    வாஷிங்டன் ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்குகிறது. இங்கு நிக்கி ஹாலே 63 சதவீத வாங்குகள் வாங்கியுள்ளார். 2020 தேர்தலின்போது வாஷிங்டனில் டிம்பிற்கு எதிராக ஜோ பைடன் 92 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கொலம்பியா, மிச்சிகன், நெவாடா, தெற்கு கரோலினா, லோவா போன்ற இடங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு 244 பிரதிநிகள் ஆதரவும், நிக்கி ஹாலேவுக்கு 43 பிரதிநிதிகள் ஆதரவும் உள்ளன.

    • குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்தலில் டிரம்ப், நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.
    • தெற்கு மாகாணத்தில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். இந்த ஆண்டு அவரது பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது.

    அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

    இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தல் களம் களைகட்டத் தொடங்கியுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்ய தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தெற்கு மாகாணத்தில் நடந்த வாக்குப்பதிவில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    ஏற்கனவே நியூ ஹாம்ப்ஷையர் மற்றும் லோவா காகசஸ் மாகாணங்களில் நடந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது- டிரம்ப்.
    • டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால் பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன்- ஹாலே

    அமெரிக்காவில் இந்த வருடம் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் யார்? என்பதில் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே போட்டி நிலவி வருகிறது.

    இந்த நிலையில் நான் அதிபரானால், இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் கூட்டணியை வலுப்படுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிக்கி ஹாலே கூறியதாவது:-

    டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்வானால், பல விசயங்கள் பற்றி நான் கவலைப்படுகிறேன். அவற்றில் ஒன்றுதான் மற்ற நாடுகள் இடையிலான கூட்டணி.

    நான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால், நேட்டோ உடனான கூட்டணியை மட்டும் வலுப்படுத்த மாட்டேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உடனான கூட்டணியையும் வலுப்படுத்துவேன். எங்களுடன் அனைவரையும் சேர்த்துக் கொள்வோம். இது அமெரிக்காவின் அதிக நண்பர்களை பற்றியது. குறைப்பதை பற்றி அல்ல."

    இவ்வாறு நிக்கி ஹாலே தெரிவித்தார்.

    முன்னதாக,

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. தங்களுடைய ஆயுத இருப்புகள் குறைந்து வருவதால் நேட்டோ உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் கேட்டிருந்தது. இதுதொடர்பாக டொனால் டிரம்ப் அளித்த ஒன்றில் அவர் கூறியதாவது:

    ஒரு பெரிய நாட்டின் அதிபர் என்னிடம் நாங்கள் நேட்டோ அமைப்பிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காத நிலையில் ரஷியா எங்களை தாக்கினால் நீங்கள் எங்களை காப்பீர்களா? என கேட்டார்.

     நீங்கள் செலுத்த வேண்டிய நிதியை செலுத்த தவறும் பட்சத்தில் நான் உங்களை காக்க முடியாது. இன்னும் சொல்ல போனால் இவர்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என ரஷியாவிடம் கூறிவிடுவேன். நிதி பங்களிப்பில் உங்கள் பங்கை நீங்கள் செலுத்தியாக வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • நான்கு பேர் போட்டியிட முன்வந்த நிலையில் இருவர் பின் வாங்கினர்.
    • டிரம்ப்- நிக்கி ஹாலே இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

    அமெரிக்காவில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

    குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதாக தெரிவித்தார். அதேவேளையில் விவேக் ராமசாமி, ரான் டி சான்டிஸ், கரோலினா மாநில கவர்னர் நிக்கி ஹாலே ஆகியோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர்.

    இதனால் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது யார்? என்பதற்கான தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நான்கு பேரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    தேர்தலுக்கான நாள் நெருங்கி வந்த நிலையில் டொனால்டு டிரம்புக்கு எதிராக போட்டியிடப் போவதில்லை என விவேக் ராமசாமி அறிவித்து ஒதுங்கிக் கொண்டார். இதனால் மூன்று பேருக்கு இடையில் போட்டி நிலவியது.

    டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாத்தில் ஈடுபட அவருக்கு எதிராக ரான் டி சான்டிஸின் தேர்தல் பிரசாரம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் சான்டிஸும் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

    இதனால் டொனால்டு டிரம்ப்- நிக்கி ஹாலே ஆகியோருக்கு இடையில் நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் நியூ ஹாம்சயர் மாநிலத்தில் குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்று வந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளார்.

    இது அவருக்கான முதல் வெற்றியாக கருதப்படும் நிலையில், நிக்கி ஹாலேவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    டொனால்டு டிரம்ப் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட இரண்டு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
    • முன்னாள் அதிபரான அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் அதிபர் டிரம்ப் களம் இறங்கியுள்ளார். அவருக்கு கட்சியினரிடம் அதிக ஆதரவு உள்ளது.

    அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிட உள்ளார். அவரும் டிரம்ப் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது

    இந்நிலையில், அமெரிக்க துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது கமலா ஹாரிஸ் கூறியதாவது:

    டொனால்டு டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது. இதனால்தான் நான் நாடு முழுவதும் பயணம் செய்து பிரசாரம் செய்கிறேன்.

    டிரம்ப் அதிபராவது பற்றி நாம் அனைவரும் பயப்பட வேண்டும். இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல. நாம் பயப்படும்போது அதற்கு எதிராக நாம் போராட வேண்டும். ஜனநாயக கட்சியினரை மீண்டும் போராட அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

    • குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் உள்ளார்.
    • ஒருவேளை தடைவிதிக்கப்பட்டால், அமெரிக்கா வரலாற்றில் இது முதல் முறையாகும்.

    2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

    கொலராடோவின் உச்சநீதிமன்றம், ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் போட்டியிட டிரம்புக்கு தடைவிதித்தது. ஜனவரி 6, 2021 அன்று, அமெரிக்க பாராளுமன்றம் மீதான தாக்குதலின் காரணமாக கொலராடோ உச்ச நீதிமன்றம் இந்த தடையை பிறப்பித்தது.

    இதனை எதிர்த்து டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டிரம்ப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் மூன்று நீதிபதிகளை நியமித்துள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாய்மொழி வாதங்களை கேட்பதாக தெரிவித்துள்ளது.

    அதேபோல் 77 வயதான டிரம்பின் பெயர், மாநிலத்தின் முதன்மை வாக்குச்சீட்டில் தோன்றுவதைத் தடுக்கும் மைனின் உயர் தேர்தல் ஆணையர் எடுத்த முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

    குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் முன்னணியில் இருக்கும் டிரம்பின் வழக்கறிஞர்கள், ஜனநாயகக் கட்சியின் மைனே வெளியுறவுச் செயலர் ஷென்னா பெல்லோஸ் அளித்த தீர்ப்பை ரத்து செய்யுமாறு மைனே உயர் நீதிமன்றத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர் "ஒருதலைப்பட்சமான முடிவெடுப்பவர்" என மேல்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

    • சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு டொனால்டு டிரம்புக்கு தடைவிதித்தது.
    • அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது.

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி டிரம்ப் தனது தோல்வியை ஏற்க மறுத்ததால் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டிரம்ப் மீது பல்வேறு மாகாண கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. சமீபத்தில் கொலராடோ மாகாண கோர்ட்டு அளித்த தீர்ப்பில், அந்த மாகாணத்தில் டிரம்ப், அதிபருக்கான குடியரசு கட்சி முதன்மை தேர்தலில் போட்டியிட தடைவிதித்தது.

    இந்த நிலையில் மற்றொரு மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மைனே மாகாண செயலாளர் ஷென்னர் பெல்லோஸ் கூறும்போது, "குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் மைனே மாகாணத்தில் டிரம்ப் போட்டியிட தடைவிதிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை அமெரிக்க அரசியலமைப்பு பொறுத்துக் கொள்ளாது. பாராளுமன்ற வன்முறைகள், டிரம்பின் அறிவுறுத்தலின் பேரிலும், ஆதரவுடன் நிகழ்ந்துள்ளன" என்றார்.

    • மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்புக்கு தகுதியற்றவர்.
    • அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம் பெறாது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான பாராளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது. மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது. அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

    போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை அவர்கள் வெளியிடவில்லை.

    • கடந்த தேர்தல் தோல்வியின் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர்.
    • மேல்முறையீடு செய்யும் வகையில் ஜனவரி 4-ந்தேதி வரை தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது.

    கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க அதிபருக்கான போட்டியில் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே அதிபர் பதவியில் இருந்து 2-வது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார்.

    இருந்த போதிலும் டொனால்டு தனது தோல்வியை ஏற்க மறுத்து வந்தார். அவரது ஆதரவாளர்களும் டொனால்டு டிரம்ப் தோல்வியை ஏற்க மறுத்தனர். மேலும், அமெரிக்க பாராளுமன்றத்தில் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் டொனால்டு டிரம்பிற்கு பங்கு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வகையில் கொலராடோவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவில், டொனால்டு டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

    மேலும், குடியரசு கட்சி சார்பில் யார் வேட்பாளர் என்பதற்கான தேர்தல் நடைபெறும்போது, வாக்குச்சீட்டில் அவரது பெயர் இடம் பெறக்கூடாது. ஒருவேளை பெயர் இடம் பெற்றாலும் அவருக்கு வாக்களித்திருந்தால் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனத் தெரிவித்துள்ளது.

    இருந்தபோதிலும் அதிபருக்கான முக்கியமான தேர்தலில் தடைவிதிக்கப்படவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்துள்ள டொனால்டு தரப்பினர், மேல்முறையீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

    மேல்முறையீடு செய்யும் வகையில் இந்த தீர்ப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • அடுத்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக டிரம்ப் அறிவிப்பு
    • குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் நிக்கி ஹாலே, விவேக் ராமசாமி, ரான் டிசாண்டிங், கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபரும் குடியரசு கட்சியை சேர்ந்தவருமான டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். இதற்காக குடியரசு கட்சி வேட்பாளரை தேர்வு செய்யும் போட்டியில் டிரம்ப் தனக்கான ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் உள்ளார்.

    அதேபோல் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டி களத்தில் தென்கரோலினா மாகாண முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிங், நியூஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகியோரும் உள்ளனர்.

    இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியில் யாருக்கு அதிக ஆதரவு இருப்பது தொடர்பாக தனியார் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. மாகாண வாரியாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார். அவருக்கு 61 சதவீத குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நிக்கி ஹாலே, ரான் டிசாண்டிங் ஆகியோருக்கு தலா 11 சதவீதம் பேரும், விவேக் ராமசாமிக்கு 5 சதவீதமும், கிறிஸ் கிறிஸ்டி 2 சதவீதமும் ஆதரவு உள்ளது. 8 சதவீதம் பேர் தங்களது ஆதரவை முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தனர்.

    டிரம்ப் மீது பாராளுமன்ற வன்முறை வழக்கு உள்பட பல்வேறு வழக்கு விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. அதில் அவர் ஆஜராகி வருகிறார். ஆனாலும் குடியரசு கட்சியினர் மத்தியில் டிரம்புக்கு அமோக ஆதரவு உள்ளது.

    • முடக்கி வைத்திருந்த நிதியை ஈரானுக்கு அளித்ததால் பைடன் மீது விமர்சனம்
    • குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது கொடியது

    ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

    ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார். சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டாலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

    கொடியது. குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய அதிபராக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம். தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது'' என்றார்.

    ×