search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதின்"

    • உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    மாஸ்கோ:

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதலில் 143 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதல் ரஷியாவை உலுக்கியுள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 4 பேர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் நடந்த தாக்குதல், ரத்தம் தோய்ந்த மற்றும் காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல். இதில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களை சுட்டுக் கொன்று பயங்கரவாத செயலில் ஈடுபட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உக்ரைனுக்கு தப்ப முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    எல்லையை கடக்க முயன்ற அவர் களை ரஷிய அதிகாரிகள் பிடித்தனர். பயங்கரவாதியாக இருப்பவர்கள், தாக்குதலுக்கு திட்டமிட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதிகள் கொலைகாரர்கள், தவிர்க்க முடியாத விதியை எதிர்கொள்வார்கள்.

    உயிர்களை காப்பாற்ற அயராது உழைத்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீயணைப்பு வீரர்களுக்கு மீட்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மார்ச் 24-ந் தேதியை (இன்று) தேசிய துக்க நாளாக அறிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது.

    • ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்
    • இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்

    அண்மையில் நடந்து முடிந்த ரஷிய அதிபருக்கான தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷிய வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    இந்நிலையில், நடந்து முடிந்த ரஷிய அதிபர் தேர்தலின்போது செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா சிரியத்யேவா, வாக்குச்சீட்டின் பின்புறம் 'போர் வேண்டாம்' என எழுதியுள்ளார்.

    இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் மாவட்ட நீதிமன்றம், அப்பெண்ணுக்கு 8 நாட்கள் சிறைத் தண்டனையும் 40,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

    • 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.
    • பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இந்நிலையில், ரஷிய அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    ரஷிய கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விளாடிமிர் புதின்-க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான சிறப்பான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட எதிர்நோக்குகிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெறுகிறார்.
    • சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    ரஷியாவில் அதிபருக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. நேற்றுடன் தேர்தல் முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் தற்போது அதிபராக இருக்கும் புதின் மீண்டும் வெற்றி பெற்றார்.

    அவர் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் அதிபராக நீடிப்பார்.

    இதன்மூலம் ரஷியா வரலாற்றில் அதிக வருடம் அதிபராக இருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன்னதாக ஜோசப் ஸ்டாலின் ரஷியாவை அதிக வருடங்கள் ஆண்ட அதிபர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

    மேலும், சோவியத் ரஷியா உடைந்த பிறகு அதிக வாக்குகள் பெற்ற அதிபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

    உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்கள் சண்டை நடைபெற்று வருவது, எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்தது உள்ளிட்ட சம்பவங்கள் புதினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டிய புதின் வெற்றி பெற்றுள்ளார்.

    ரஷியாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

    தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என புதின் தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சி தலைவர்களை போட்டியிடாமல் தடுத்தல், அடக்குமுறை என புதின் மேல் குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் ரஷியா மக்கள் திரளாக திரண்டு அவருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 11.23 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருப்பதாக ரஷிய மத்திய தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.
    • தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன.

    ரஷியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கியது. அங்கு முதல்முறையாக அதிபர் தேர்தல் 3 நாட்கள் தேர்தல் நடத்தப்படுகிறது. 17-ந்தேதி வரை நடக்கும் தேர்தலில் 11.23 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்களாக இருப்பதாக ரஷிய மத்திய தேர்தல் கமிட்டி தெரிவித்துள்ளது.

    தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. சில இடங்களில் வீடுகளுக்கே சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் முறை முதல் முறையாக நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது.

    இன்று தொடங்கிய தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் வாக்குசாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். சில இடங்களில் வாக்குபெட்டிகள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஓட்டுபதிவு நடந்தது. மேலும் போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

    தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நிகிலை கரிடோனோவின் கம்யூனிஸ்டு கட்சி, லியோநிட் ஸ்லட்ஸ்கியின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, விளாடிஸ்லா தவன்கோவின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

    ஆனால் புதினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால் அவர் 5-வது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. புதினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புதினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

    அவரை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த அதிபர் தேர்தலில் (2018-ம் ஆண்டு ) புதின் 76.7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கேரள மாநிலத்தில் உள்ள ரஷிய சிறப்பு தூதரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார்.
    • உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

    மாஸ்கோ:

    ரஷிய எதிர்க்கட்சி தலைவரும், அதிபர் புதினின் தீவிர எதிர்ப்பாளருமான அலெக்சி நவால்னி ஊழல் வழக்கில் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு ஆர்க்டிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    கடந்த வாரம் அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். நவால்னியின் மரணத்துக்கு அதிபர் புதினே காரணம் என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் புதின் அரசு அதை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    இந்த நிலையில் சிறையில் உயிரிழந்த தனது கணவரின் உடலை ஒப்படைக்க புதின் மறுப்பதாக நவால்னியின் மனைவி யூலியா நவால்னயா குற்றம்சாட்டியுள்ளார். பேட்டி ஒன்றில் இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நவால்னியின் தாயார், தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால் அதிகாரிகள் நவால்னி உடலை ஆர்க்டிக் சிறையிலேயே அடக்கம் செய்ய ஒப்புக்கொள்ளும்படி அவரது தாயை அச்சுறுத்துகின்றனர். உடல் சிதைந்து வருவதால், முடிவெடுக்க அதிக நேரம் இல்லை என கூறி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர்.

    என் கணவரின் உடலை எங்களிடம் கொடுங்கள். நீங்கள் அவர் உயிருடன் இருந்தபோது அவரை சித்ரவதை செய்தீர்கள். இப்போது அவர் இறந்த பிறகும் தொடர்ந்து சித்ரவதை செய்கிறீர்கள். இதன் மூலம் இறந்துபோனவரின் உடலை நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
    • எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம் என புதின் தெரிவித்தார்.

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஐந்து நாள் சுற்றுப் பயணமாக ரஷியா சென்றுள்ளார். ரஷியா சென்ற அவருக்கு அந்நாட்டின் சார்பில் வரவேற்று அளிக்கப்பட்டது. பின்னர் ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறுித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். அப்போது இந்திய பிரதமர் மோடி ரஷியாவுக்கு வருமாறு புதின் அழைப்பு விடுத்தார்.

    "எங்களுடைய நண்பர் பிரதமர் மோடியை ரஷியாவில் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்" என ஜெய்சங்கரிடம் புதின் தெரிவித்துள்ளார்.

    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்த பிறகு ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி- ரஷிய அதிபர் புதின் ஆகியோர் அடுத்த ஆண்டு நடைபெறும் வருடாந்திர உச்சி மாநாட்டில் சந்திப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

    இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும் என புதின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில், ரஷியாவின் பெயரை குறிப்பிடாமல் ஒருமனதாக பிரகடனம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இந்திய பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உக்ரைன் மீது போர் தொடங்கிய பிறகு முட்டை விலை கிடுகிடுவென உயர்வு.
    • ஒரு டஜன் முட்டை 1.4 டாலருக்கும் அதிகமான விலைக்கு விற்பனை.

    ரஷிய அதிபர் புதின் வருடத்தின் இறுதியில் மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்.

    அப்போது பென்சன் வாங்கும் முதியவர் ஒருவர் புதினிடம் முட்டை விலை, கோழி இறைச்சி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்தார்.

    பென்சன் வாங்கும் முதியவர் இப்படி தெரிவித்தவும், இதற்காக "நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும் என நான் உறுதியளிக்கிறேன்" என்றார்.

    ரஷியாவில் பணவீக்கம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

    அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இறக்குமதி வரியை 1.2 பில்லியன் முட்டைகளுக்கான வரியில் விலக்கு அளிக்க இருப்பதாக ரஷியா அரசு தெரிவித்துள்ளது.

    • இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
    • இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான்.

    ரஷிய அதிபர் புதின் இந்தியில் பேசுவது போன்று 45 நிமிட வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிட்டுள்ள கருத்துகளும் இந்தியில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதின் இந்தியில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில் ரஷியா அதிபர் புதின் கூறியிருப்பதாவது:-

    இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

    இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தன. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கூடாது என வலியுறுத்தின. ஆனால், இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

    டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டபோது ரஷியா பெயரை குறிப்பிடாமல் பிரகடனம் தயாரிக்கப்பட்டு அனைத்து நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைன் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்.
    • 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்த மக்கள் தொகையை விட தற்போது குறைவு.

    ரஷியாவில் பிறப்பு விகிதம் கடந்த 1990-ல் இருந்து குறைந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக சுமார் இரண்டு வருட போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷியர்கள உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    இதையெல்லாம் கணக்கில் கொண்டு ரஷிய பெண்கள் 8 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதை நடைமுறையாக்க வேண்டும். அடுத்த 10 முதல் 20 வருடங்களில் ரஷியாவின் மக்கள் தொகையை உயர்த்துவதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளா்.

    நம்முடைய பல இனத்தினர் நான்கு, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுடன் வலுவான பல தலைமுறை குடும்பங்களைக் கொண்ட பாரம்பரியத்தை பாதுகாத்து வருகின்றன.

    ரஷிய குடும்பங்களில் ஏராளமான நம்முடைய பாட்டிகள், பாட்டியின் அம்மாக்கள் ஏழு, எட்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டிருந்தனர் என்பது நினைவில் கொள்வோம்.

    இந்த சிறந்த பாரம்பரியத்தை பாதுகாத்து புத்துயிர் பெறுவோம். பெரிய குடும்பங்கள் நடைமுறையாகவும், ரஷியாவின் அனைத்து மக்களுக்கும் ஒரு வாழ்க்கை முறையாகவும் வேண்டும். குடும்பம் என்பது அரசு மற்றும் சமூகத்தின் அடித்தளம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக நிகழ்வு, ஒழுக்கத்தின் ஆதாரம்.

    ரஷியாவின் மக்கள் தொகையைப் பாதுகாத்தல் மற்றும் அதிகரிப்பது வரவிருக்கும் தசாப்தங்களுக்கு மட்டுமல்ல. தலைமுறைகளுக்கும் கூட என்பதுதான் இலக்கு.

    ரஷியாவின் மக்கள் தொகை 2023 ஜனவரில் 1-ந்தேதி கணக்கின்படி 14 கோடியே 64 லட்சத்து 47 ஆயிரத்து 424 ஆகும். 1999-ம் ஆண்டு புதின் பதவி ஏற்றபோது இருந்ததைவிட இது குறைவானதாகும்.

    • ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    • உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன், ரஷியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

    பின்னர் கிம்ஜாங் உன் ரஷியாவின் போர் விமான ஆலையை பார்வையிட்டார். அதே போல் ஏவுகணை தயாரிப்பையும் பார்வையிட்டார்.

    அவர், ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் திறனை அதிகரிக்கக் கூடிய ஒப்ந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    நேற்று ரஷியாவின் பசிபிக் கடற்படை பிரிவில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், அதிநவீன போர்க் கப்பல் ஆகியவற்றை பார்வையிட்டார்.

    இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் கிம் ஜாங் உன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இது தொடர்பாக வடகொரியா அரசு ஊடகம் கூறும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய பாதுகாப்பு மந்திரியுடன் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார் என்று தெரிவித்தது. இதில் அவர்கள் ஆயுத ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.

    அப்போது அவரை ப்ரிமோரி பிராந்திய கவர்னர் ஓலெக் கோஜெமியாகோ சந்தித்து பேசினார். மேலும் அங்குள்ள உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்ஜாங் உன், ரஷியாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் ரெயிலில் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.

    மாஸ்கோ:

    ரஷியா-வடகொரியா நாடுகள் இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இம்மாதம் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், ரஷிய அதிபர் புதினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க உள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது தொடர்பான செய்தியை அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ளது.

    ஜிம்ஜாங் உன், ரஷியாவுக்கு ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்புடன் ரெயிலில் பயணம் மேற் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்கள் எந்த இடத்தில் சந்தித்து பேசுவார்கள் என்று தெளிவான விவரம் கிடைக்கவில்லை.

    ஆனால் பசிபிக் துறைமுக நகரமான விளாடிவோ ஸ்டாக்கில் இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, கடந்த மாதம் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்ஜி ஷோய்கு வடகொரியாவுக்கு பயணம் செய்தார். அப்போது ரஷியாவுக்கு பீரங்கி வெடி மருந்துகளை விற்க வட கொரியாவை வலியுறுத்தினார்.

    இந்த ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தையை தலைவர்கள் அளவில் தொடர கிம்ஜாங் உன் எதிர்பார்க்கிறார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது.

    ரஷியாவுடன் ஆயுத பேச்சுவார்த்தைகளை நடத்தமாட்டோம். ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்கவோ அல்லது விற்கவோ கூடாது என்று வடகொரியா அளித்த பொது உறுதிமொழிகளும், கட்டுபட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்துகிறது என்றார்.

    ரஷியா பாதுகாப்பு மந்திரி, வடகொரியாவுக்கு சென்றபோது புதினும், கிம்ஜாங் உன்னும் அவர்களது கடிதங்களை மாற்றி கொண்டதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் தெரிவித்து இருந்தது.

    அதேபோல் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருவதாக வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு அதிகாரி ஜான் செர்பி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அந்நாட்டுடன் வடகொரியா ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×