என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hospital"
- மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
- தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பெருந்துறை:
ஈரோடு மாமரத்துபாளையம் அருகே கங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் துளசிமணி (46). கூலித் தொழிலாளியான துளசிமணிக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் துளசிமணி கடந்த 19-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சித்தோடு அருகே சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட துளசிமணி படுகாயம் அடைந்தார்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் துளசிமணியை பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 21-ந் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
இதையடுத்து துளசி மணியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உடல் உறுப்புகளை பெறுவதற்காக காத்திருந்த உறுப்பு மாற்ற ஆணையத்தின் விதிமுறைப்படி 21-ந் தேதி மாலையில் துளசிமணியின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து துளசிமணியின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் மற்றும் தோல் ஆகியவை பாதுகாப்பாக எடுக்கப்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் கல்லீரல் தானம் பெறுவதற்காக காத்திருந்த ஒருவருக்கும், 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுநீரக சிகிச்சைக்காக காத்திருந்த ஒருவருக்கும், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நோயாளிக்கும் சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டது. அதேபோல தானமாக பெறப்பட்ட 2 கண்களையும் ஈரோடு அகர்வால் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை கங்கா மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் வழங்கிய துளசிமணியின் குடும்பத்தாருக்கு அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.வள்ளி சத்யமூர்த்தி நன்றி தெரிவித்ததுடன் துளசி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தினார். அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்யப்படுவது 9-வது முறை என மருத்துவக் கல்லூரி சேகர் தெரிவித்தார்.
- இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
- சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
- கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
பெருந்துறை:
பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கை உடைக்கப்பட்ட நிலையில் கோவை அரசு கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்ற த்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். கோவை மத்திய சிறையில் உள்ள தனது மகன் சவுக்கு சங்கருக்கு பாதுகாப்பு இல்லாததால் அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்த சிறைத்துறை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை சவுக்கு சங்கரை கோவை போலீசார் சென்னைக்கு அழைத்து செல்ல முடிவு செய்துள்ளனர். அதன்படி சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து சென்னைக்கு பலத்த போலீஸ் பாது காப்புடன் அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சவுக்கு சங்கர் தன்னுடைய கை வலிப்பதாகவும், உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீஸ் நிலையத்து க்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கர் அங்கிருந்து நேரடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு டாக்டர் சாந்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 9.45 மணி அளவில் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என்று சவுக்கு சங்கரை பார்த்து கேள்வி எழுப்பினர். அப்போது அவரை பேசவிடாமல் போலீசார் தடுத்து அழைத்து சென்றனர். சவுக்கு சங்கருக்கு தொடர்ந்து குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. அதனை ஒரு காவலர் கையில் தூக்கி பிடித்த படி சென்று கொண்டிருந்தார்.
- அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவமனையில் இல்லை.
- உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க மருத்துவமனைக்கு உத்தரவு.
சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் போதிய வசதிகள் இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்களும் மருத்துவமனையில் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உரிய மருத்துவர்கள், சிகிச்சைக்கான கருவிகளை அமைக்க மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது.
- மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் அருகே வேடம்பட்டில் மருத்துவ கழிவு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறிய விஷக்காற்றால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 20 பெண்கள் உட்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் அடுத்த வேடம்பட்டில் தனியாருக்கு சொந்தமான மருத்துவ கழிவு அரவை தொழிற்சாலை உள்ளது. இன்று அதிகாலை 1 மணி அளவில் இப்பகுதியில் இருந்து வெளியேறிய நச்சு காற்றால் அருகில் இருந்த வேடம்பட்டு காலனி பொதுமக்கள் இக்காற்றை சுவாசிக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு அதிகாலை 1 மணி முதல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வேடம்பட்டை சேர்ந்த அங்காளவள்ளி, ஜெயலட்சுமி, சவுமியா, மாரியம்மாள், சுசிலா, ரேணுகா, மதன், கடலூர் சுரேஷ், உள்ளிட்ட 17 பேரும், காணை அரசு மருத்துவமனையில் 13 பேர்களும் என மொத்தம் 20 பெண்கள் உள்பட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் வேடம்பட்டு கிராமத்தில் பதட்டம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இப்பிரச்சனை தொடர்பாக வேடம்பட்டு காலனி மக்கள் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
- வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கிராமம், கிராமமாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நேற்று பிரசாரத்துக்கு செல்ல தயாராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். வெயிலின் தாக்கத்தால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுபற்றி டாக்டர்கள் கூறுகையில் போதிய அளவு தண்ணீர் குடிக்காததால் ஏற்பட்ட பாதிப்பால் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்றனர்.
- அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூர்:
நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் எம்.பி.க்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து செல்வராஜ் எம்.பி. தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது செல்வராஜ் எம்.பி. நல்ல நிலையில் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
- காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து பதுங்கி வருகின்றனர்.
- ஹமாஸ் அமைப்பின் இந்த சுரங்கங்கள் இஸ்ரேலுக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.
டெல் அவிவ்:
காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர்.
காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.
காசாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.
இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனைக் கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.
- திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.
- தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில் 10 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள். வெளிமாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் இங்கு லட்சக்கணக்கில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. திருப்பூர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 6 லட்சம் தொழிலாளர்கள் இ.எஸ்.ஐ.க்கு பணம் செலுத்தி வருகிறார்கள்.
இ.எஸ்.ஐ. பங்களிப்பில் முதன்மை இடத்தில் திருப்பூர் உள்ளதால், இங்குள்ள தொழிலாளர்களின் வசதிக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வர வேண்டும் என்பது தொழில்துறையினர், தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு திருப்பூர் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் பூண்டி ரிங் ரோட்டில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 7½ ஏக்கர் பரப்பளவில் ரூ.81 கோடியே 34 லட்சம் மதிப்பில் 100 படுக்கை வசதி, 32 பணியாளர் குடியிருப்புகளுடன் மகப்பேறு சிகிச்சை மையம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுமான பணி தொடங்கியது.
இந்நிலையில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவமனை தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி, காணொலிக்காட்சி மூலமாக இன்று மதியம் 3 மணிக்கு திருப்பூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைத்து தொழிலாளர்களுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த மருத்துவமனை மூலம் மருத்துவ சேவைகள் தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைக்கும். இதன் மூலமாக திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிங்காநல்லூர் சென்று சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இங்கேயே சிகிச்சை பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் பனியன் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டுவர அடித்தள மிட்டது எம்.எல்.எப்., தொழிற்சங்கம்தான் என்று ம.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ. திருப்பூர் துரைசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டு வருவதற்கு அடித்தளமிட்டது எம்.எல்.எப். தொழிற்சங்கம் தான். கடந்த 2005-ம் ஆண்டு மே மாதம் 1-ந் தேதி திருப்பூர் டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற எம்.எல்.எப். தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து மத்திய அரசு அப்போது 3 படுக்கையுடன் கூடிய மருத்துவமனை அமைக்க அனுமதி வழங்கியது. அதன் பிறகு இந்த மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கான இடத்தை தமிழக அரசு தராமல் காலம் தாழ்த்தி வந்தது.
இதையடுத்து தற்போது தமிழக அரசால் இடம் வழங்கப்பட்டு மத்திய அரசால் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை பிரதமர் மோடி நேரில் வந்து திறந்திருக்க வேண்டும் அல்லது தொழில்துறை, மருத்துவ துறை மந்திரிகளில் யாராவது ஒருவர் நேரில் வந்து திறந்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் கலந்துக் கொள்ள திட்டம்.
- உடல்நலக் குறைவால் நடை பயணத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல்நலக் குறைவால் உ.பி.யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நீதிக்கான ஒற்றுமை பயணத்தில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருந்த நிலையில், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தற்போது நடைபயணத்தில் கலந்து கொள்ளவில்லை.
இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில், "உடல் நலம் தேறியதும் யாத்திரையில் பங்கேற்க உள்ளேன். யாத்திரையில் பங்கேற்றுள்ள தனது சகோதரர் மற்றும் கட்சியினருக்கு வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.
- தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
- சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.
அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- கேட் மிடில்டன்னுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- மார்ச் இறுதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். 42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
"இளவரசிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அவர் அடுத்த 10-இல் இருந்து 14 நாட்கள் வரை மருத்துவமனையில் இருப்பார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று ஓய்வு எடுப்பார். தற்போதைய மருத்துவ அறிவுரைகளின் படி அவர் மார்ச் 31-ம் தேதி வரை பொது பணிகளில் ஈடுபட மாட்டார்," என சமீபத்தில் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கேட் மிடில்டன்னுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அதிக பிரபலமானவரும், ராயல் குடும்பத்தில் அதிக புகைப்படம் எடுக்கப்பட்டவருமான கேட் மிடில்டன் சமீப காலங்களில் பொது நிகழ்ச்சிகளில் அதிகளவில் கலந்து கொண்டுவந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்