search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus"

    • சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
    • திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் 23ம் தேதி முதல் தினசரி 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தற்பொழுது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேற்படி, தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தடப்பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலைத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் மேற்கண்ட கோரிக்கையின் அடிப்படையில் கீழ்குறிப்பிட்டுள்ளவாறு 23/05/2024 முதல் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

    1. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பேருந்துகள் இயக்கப்படும்.

    2. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 44 பேருந்துகள் ஆற்காடு, ஆரணி வழியாகவும் மற்றும் தற்போது தினசரி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பேருந்துகளுடன் 30 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்.

    ஆக மொத்தம் 85 பேருந்துகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்படும்.

    எனவே, பயணிகள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது.
    • பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பேருந்து, மெட்ரோ, மின்சார ரெயில் உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.

    மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி மூன்றிலும் மக்கள் பயணிக்க முடியும்.

    அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் கொண்டு வரப்பட உள்ளது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரிய நிலையில் அடுத்த மாதம் இந்த திட்டம் செயலுக்கு வர உள்ளது.

    இந்நிலையில் இத்திட்டம் ஜூன் 2வது வாரத்தில் அமலுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொதுப்போக்குவரத்து முறைகளில் பயணம் செய்ய ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி, ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    • பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
    • அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    மூணாறில் இருந்து சென்னை நோக்கி ஆம்னி பஸ் வந்தது. இதில் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் போடி ரெயில்வே கேட் பகுதியில் வந்த போது திடீரென பின் பக்க டயர் வெடித்து தீ பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்தது.

    இதைப் பார்த்ததும் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை ஓரமாக நிறுத்தினார். இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் பேருந்தில் பயணித்த சுமார் 16க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதிர்ஷ்டவசமாக அப்போது சாலையில் மற்ற வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நீண்ட தூரம் செல்லும் ஆம்னி பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது.
    • டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் இயக்கப் படும் பஸ்களுக்கு டீசல் செலவினம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு லிட்டர் டீசலில் 5.7 கி.மீ.தூரம் பஸ்களை இயக்கி சிக்கனம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல் பட்டாலும் 5.68 கி.மீ. இதுவரை இயக்கப்படுகிறது.

    டீசலுக்கு பதிலாக இயற்கை கியாசை பயன்படுத்தி பஸ்களை இயக்கி னால் 'மைலேஜ்' கூடுதலாக கிடைக்கும் என்ற ஆய்வின் படி வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களை இயற்கை கியாசுக்கு மாற்றி இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்தன. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் ஒரு இயற்கை எரிவாயு பஸ்களை அறிமுகம் செய்கிறது. இது வெற்றிகரமாக இருக்கும் பட்சத்தில் அனைத்து போக்குவரத்து கழகத்திலும் இயற்கை எரிவாயு பயன்பாட்டிற்கு மாற்றப்படும்.

    டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றம் செய்து செலவினத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மற்றும் விழுப்புரத்தில் சோதனை முறையில் இயற்கை எரிவாயு பஸ்களை இயக்க அரசிடம் இருந்து அனுமதி வந்ததும் பரீட்சார்ந்த செயல்பாடு தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    டீசல் பயன்பாட்டில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றும் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இயற்கை எரிவாயுவுக்கு மாற்றுவதன் மூலம் பயணமும் வசதியாக இருக்கும். இயற்கை எரிவாயு சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தால் அதிக எண்ணிக்கையிலான அரசு பஸ்கள் டீசலில் இருந்து இயற்கை எரிவாயுவுக்கு மாற்றப்படும். மேலும் டீசலினால் ஏற்படும் காற்று மாசுவை விட இயற்கை எரிவாயு பயன்படுத்தினால் மிக குறைவாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.
    • பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்காக சென்ற 45 பேர் பஸ் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மோரியா நகரில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 46 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்

    அந்த பஸ் மலைப்பாதை யில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கீழே பாய்ந்ந்தது.

    சுமார் 165 அடி உயரத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். பஸ்சும் சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.

    என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பெண்கள் உள்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங் களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சிதைந்து காணப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • அரசு பேருந்தை கடத்தி சென்று விபத்தை ஏற்படுத்திய மர்ம நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து நாள்தோறும் 67 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதில் இரவு நேரங்களில் பணிமனையில் இடம் இல்லாத காரணத்தால் சில பேருந்துகள் பணிமனையின் வெளி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் அறந்தாங்கியிலிருந்து திருவாடனை செல்லக்கூடிய பேருந்து நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வழக்கம் போல் பணிமனையின் வெளி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இதனை அறிந்த மர்ம நபர் ஒருவர் பேருந்தை இயக்கி அங்கிருந்து கடத்தி சென்றுள்ளார். அறந்தாங்கியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இராமநாதபுரம் மாவட்டம் வட்டானம் எனும் இடத்தில் பேருந்து சென்று கொண்டிருக்கையில் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் முனியசாமி (வயது 37) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் பேருந்தை கடத்தி சென்ற மர்ம நபர், தாம் தான் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தினேன் என்று கூறி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். அறந்தாங்கி போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல காணப்பட்டதால் அவருக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. போக்குவரத்து பணிமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்தை கடத்தி சென்று விபத்தை ஏற்படுத்திய மர்ம நபரால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
    • மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

    இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது
    • குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கம் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டி பயன் பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

    இங்கிருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் வண்டலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பஸ் போக்குவரத்து அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் மார்க்கத்தில் மகேந்திரா சிட்டி தொடங்கி சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் வரை சாலையோரத்தில் எந்த பஸ் நிறுத்த நிழற்குடையும் இல்லை.

    இதனால் பயணிகள் சாலையோரத்தில் வெட்ட வெளியில் பஸ்களுக்கு காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் விபத்து அபாயமும் உள்ளதால் பயணிகள் அச்சத்துடன் சாலையில் காத்திருக்கிறார்கள்.

    மகேந்திரா சிட்டி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகளும், மறைமலைநகர், பொத்தேரியை சுற்றி உள்ள பகுதியில் ஏராளமான தனியார் பள்ளி, கல்லூரிகளும் உள்ளன. தினந்தோறும் மாணவ, மாணவிகள் பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சாலையோரம் பஸ்களுக்கு காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மதிய வேளையில் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் தவித்து வருகிறார்கள்.

    இதேபோல் ஊரப்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் வழித் தடங்களிலும் பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி வரை சாலையோரத்தில் பஸ்நிறுத்த நிழற்குடை இல்லை.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, சாலை விரிவாக்கத்தின் போது பஸ் நிலையம் எடுக்கப்பட்டது, சாலை விரிவாக்கம் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பஸ்பயணிகளுக்கு நிழற்குடை, பஸ்நிறுத்தம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? என்று தெரியவில்லை. சாலையோரத்தில் எது பஸ் நிறுத்தம் என்று தெரியாமல் பயணிகள் கூட்டமாக நிற்கும் போது சிறிது தூரம் தாண்டி பஸ்கள் நிறுத்தப்படுகிறது.

    பின்னர் பயணிகள் முண்டியடித்து ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியோர்கள் நிலை மிகவும் கஷ்டமாக இருந்து வருகிறது. மதியம் வெயிலில் வெட்டவெளியில் நிற்கமுடியாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விரைவில் இந்த பகுதியில் பஸ்நிறுத்த நிழற்குடை அமைக்க சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.

    • தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
    • க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.

    சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.

    இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.

    இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம். 

    • பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அரசு பஸ் இன்று காலை காயல்பட்டினத்தை கடந்து ஆறுமுகநேரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பேயன்விளை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையில் அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது அங்கு தாயுடன் நின்றிருந்த ஒரு சிறுமி பஸ்சின் பின்பக்க கண்ணாடி மீது கல்லை வீசி எறிந்துள்ளார்.

    இதில் கண்ணாடி முழுவதுமாக உடைந்து சிதறியது. இதுபற்றி அந்த பஸ் கண்டக்டர் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    • முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து மூலக்கரைப்பட்டிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பழைய பஸ்களாக மாறிவிட்டதால் புதிய பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் சமீபத்தில் மூலக்கரைப்பட்டிக்கு சென்ற அரசு பஸ்சின் பின்புற படிக்கட்டுகள் ஏதும் இல்லாமல் மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்பக்கம் வழியாக மட்டுமே பயணிகள் ஏறுவதற்கு படிக்கட்டுகள் இருக்கின்றன.

    அந்த வழியாக பயணிகள், மாணவ-மாணவிகள் ஏறி உள்ளே செல்லும் நிலையில் அதே வழியாக இறங்கவேண்டிய நிலை இருக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் மக்கள் பயணம் செய்யும் நிலையை தவிர்க்கும் விதமாக உடனடியாக பஸ் படிக்கட்டுகளை சரி செய்ய சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×