search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்டர்"

    • விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.
    • பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.

    ஜோகன்ஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவில் ஈஸ்டர் பண்டிகைக்காக சென்ற 45 பேர் பஸ் விபத்தில் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அண்டை நாடான போட்ஸ்வானாவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மோரியா நகரில் உள்ள ஒரு தேவாலயத்துக்கு ஈஸ்டர் பிரார்த்தனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 46 பேர் ஒரு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்

    அந்த பஸ் மலைப்பாதை யில் உள்ள ஒரு பெரிய பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கீழே பாய்ந்ந்தது.

    சுமார் 165 அடி உயரத்தில் இருந்து விழுந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.இதனால் பஸ்சில் பயணம் செய்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். பஸ்சும் சுக்குநூறாக நொறுங்கியது. விழுந்த வேகத்தில் தீப்பிடித்ததால் அதில் இருந்தவர்களால் உடனடியாக வெளியில் வரமுடியவில்லை.

    என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் பெண்கள் உள்பட 45 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். பஸ்சில் பயணித்த 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக தீக்காயங் களுடன் உயிர் தப்பினார்.

    சம்பவம் பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்கள் உடல்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி சிதைந்து காணப்பட்டது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். நீண்ட நேரம் போராடி அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
    • புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம்.

    சென்னை:

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். அவரை சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு உயிரை துறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு தியானிப்பார்கள்.

    இயேசு சிலுவையில் உயிரை விடுவதற்கு முன்பு 7 வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகள் குறித்து ஆலயங்களில் தியானிக்கப்படும். அவர் சிலுவையில் முதலாவதாக பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே! என்று கூறினார். இவை உள்ளிட்ட 7 வார்த்தைகள் குறித்து தியானிக்கும் மும்மணி தியான ஆராதனை நாளை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடைபெறுகிறது.

    கத்தோலிக்க திருச்சபைகளில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அதேபோல சி.எஸ்.ஐ., மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்து, இ.சி.ஐ. உள்ளிட்ட எல்லா திருச்சபைகளிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    புனித வெள்ளி அன்று கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருப்பது வழக்கம். மும்மணி தியான ஆராதனை முடிந்த பிறகு தான் கிராஸ் பன், மோர் அல்லது கஞ்சி போன்றவற்றை சாப்பிடுவார்கள். முன்னதாக இன்று பெரிய வியாழன் அனுசரிக்கப்படுகிறது. தனது சீடர்களுடன் இயேசு கடைசி இராப்போஜனம் விருந்து மேற்கொள்ளும் நிகழ்ச்சியை நினைவுப்படுத்தி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து இயேசு சிலுவையில் அடித்து கொல்லப்படுகிறார். சிலுவையில் உயிரைவிட்ட அவர் 3-வது நாள் உயிர்த்தெழுந்து வருவதை தான் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    • மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர்.
    • கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னை:

    இயேசு 40 நாட்கள் உபவாசம் இருந்து ஜெபித்து வந்த காலத்தை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு இயேசு ஜெருசலேம் நகரில் கோவேறு கழுதையின் மீது பவனியாக அழைத்து செல்லப்பட்டார்.

    அப்போது குருத்தோலை களை பிடித்தவாறு ஜெருசேலம் மக்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்று பாடல் பாடி அவரை வரவேற்றனர். அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை பவனி நடை பெற்றது.

    சென்னையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளில் சிலுவையை செய்து கையில் பிடித்தவாறு கிறிஸ்தவர்கள் ஆலயத்தை சுற்றியும், தெருக்கள், வீதிகளிலும், பவனியாக சென்றனர்.

    சென்னையில் உள்ள கத்தோலிக்க திருச்சபைகள், தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) ஆலயங்கள், மெத்தடிஸ்ட், லுத்தரன், பெந்தே கோஸ்தே, இ.சி.ஐ. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், எழும்பூர் தூய இருதய ஆண்டவர் ஆலயம், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயம், மாதவரம் புனித அந்தோணியார் ஆலயம், சின்னமலை தேவாலயம், கத்தீட்ரல் பேராலயம், புதுப்பேட்டை புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆல யங்களிலும் இன்று குருத்தோலை பவனி நடந்தது.

     குருத்தோலை பவனியில் சென்ற கிறிஸ்தவர்கள் ஓசன்னா... ஓசன்னா.. என்ற பாடலை பாடியபடி சென்ற னர். பின்னர் ஆலயங்களில் பேராயர்கள், பாதிரியர்கள், போதகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.

    • சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
    • பல்வேறு ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    சென்னை:

    கிறிஸ்தவ தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. தவக் காலத்தின் இறுதி வாரம் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து இயேசு சீடனின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியாழனாக அனுசரிக்கப்பட்டது.

    அடுத்த நாள் நேற்று முன் தினம் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்பட்டு சிலுவைப் பாதை ஊர்வலம் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நாடு முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சென்னையில் முக்கிய தேவாலயங்களான சாந்தோம், பெசன்ட் நகர், சின்னமலை, ராயபுரம், எழும்பூர், திரு இருதய ஆண்டவர் ஆலயம், கதீட்ரல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    ஏராளமானோர் மெழுகு வர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சாந்தோம் ஆலயத்தில் மயிலை மறை மாவட்ட கத்தோலிக்க பேராயர் ஜார்ஜ் அந்தோனி சாமி கதீட்ரல் ஆலயத்தில் சி.எஸ்.ஐ. பிஷப் ஜார்ஜ் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

    • மதுரையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடந்தன.

    மதுரை

    கிறிஸ்தவ பண்டிகை களில் குறிப்பிடத்தக்கது ஈஸ்டர். இது கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக கொண்டாடப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் ஈஸ்டர் பண்டிகை நேற்று முதல் தொடங்கியது. கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு திருப்பலி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவர்கள் பிப்ரவரி 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கினர். இந்த நிகழ்வு ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவுடன் நிறைவுக்கு வந்தது.

    இதையொட்டி நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் திருப்பலி மற்றும் ஆராத னைகள் நடத்தப்பட்டன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி, ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    அண்ணாநகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞானஒளிவு புரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல்நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தத்தை லூர்து, உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நள்ளிரவு திருப்பலி நிறைவேற்றினர்.

    செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லீஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவால யங்களிலும் திருப்பலி நடத்தப்பட்டது. சி.எஸ்.ஐ மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராத னைகள் நடந்தன.

    இவற்றில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பம்- குடும்பமாக கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையையொட்டி மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் 'குருவானவர் கிறிஸ்துவின் ஒளி இதோ' என்று பங்குத்தந்தை அறிவித்ததும், கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி நின்றது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வாக அமைந்தது.

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் சிறப்பு பிரார்த்தனையில் திரளானோர் பங்கேற்பு
    • இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சேலம்:

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்ப டும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்க ளால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்கா லத்தின் இறுதி வாரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-ந் தேதி குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சியுடன் தொடங்கி யது. அதனைதொடர்ந்து பெரிய வியாழன் நடை பெற்றது. ஏசு, சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நான் உங்களிடம் அன்பாக இருப்பது போல் நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாய் இருங்கள் என்ற நிகழ்ச்சியே பெரிய வியா ழனாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

    நேற்றுமுன்தினம் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திவ்ய நற்கருணை, சிலுவை பாதை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-வது நாள் உயிர்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    ஈஸ்டர் கொண்டாட்டம்

    அதன்படி இன்று ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து தேவா லயங்களுக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொண்டனர்.

    சேலம் சூரமங்கலம் இருதய ஆண்டவர் பேரா லயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. அழகாபுரம் புனித மிக்கேல் ஆலயம், சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் தேவாலயத்தி லும் ஈஸ்டரை முன்னிட்டு பண்டிகை சிறப்பு பிரார்த் தனை நடைபெற்றது.

    ஜான்சன்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், செவ்வாய்பேட்டை ஜெயராக்கினி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லர் ஆலயம், சன்னியாசிகுண்டு புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் ஓமலூர், மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை நடைபெற்றது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மேலும், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல்லில் துறையூர் சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இதேபோல் சேலம் சாலையில் உள்ள அசெம்பளி ஆப் காட் திருச்சபையிலும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள், புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம் என மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நேற்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

    • கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்
    • அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி

    நாகர்கோவில், ஏப். 9-

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

    அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இத்தகைய தினம் கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான நாளாகும். இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் இயேசு உயிர்ப்பு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    கோட்டார் சவேரியார் பேராலயத்தில் நேற்று இரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டார்.பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி திருப்பலி நிறைவேற்றினார். அப்போது அங்கிருந்த கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி இயேசு வாழ்த்து பாடினார்.நாகர்கோவில் அசிசி ஆலயத்தில் இன்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி புனித அலங்கார உபகர மாதா ஆலயம் குளச்சல் காணிக்கை மாதா ஆலயம் வெட்டூர்ணிமடம் கிறிஸ்துவ அரசர் ஆலயம் உட்பட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் இன்று காலை நடந்த பிரார்த்தனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஈஸ்டர் பண்டிகையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்கள்.

    இதையடுத்து கடற்கரை கிராமங்கள் களை கட்டி இருந்தது. நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை அனைத்து மீனவ கிராமங்களிலும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    • கடற்கரை கிராமங்களில் போலீசார் கண்காணிப்பு
    • உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும்

    நாகர்கோவில் :

    கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி 22-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒறுத்தல் முயற்சி மற்றும் உபவாசம் போன்றவற்றில் ஈடுபட்டுவந்தனர்.

    புனித வாரம் தொடங்கி யதையொட்டி கடந்த 2-ந்தேதி தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனியும், 6-ந்தேதி புனித வியாழன் பாதம் கழுவும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று புனித வெள்ளி திருச்சி லுவை வழிபாடுகளும் நடந்தது. இன்று நள்ளிரவு அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில் பாஸ்கா திருவிழிப்பு சிறப்பு வழிபா டுகள் மற்றும் திருப்பலி நடக்கிறது.

    இதன் தொடக்க நிகழ்ச்சியாக ஆலயத்தில் பாஸ்கா மெழுகுவர்த்தியில் ஒளியேற்றும் வழிபாடு நடைபெறும்.

    பாஸ்கா மெழுகு வர்த்தியில் அலங்கரிக்கப் பட்ட சிலுவையில் பங்குத் தந்தையர்கள் "அகரமும் நகரமும் காலங்களும் அவருடையன, யுகங்களும் அவருடையன" என எழுத்தாணியால் வரை வார்கள். அதன்பின் மெழுகு வர்த்தியில் இயேசு வின் 5 காயங்கள் பதிவு செய்யப்படும். பின்னர் பாஸ்கா திரியில் ஒளி யேற்றப்படும். தொடர்ந்து மக்கள் ஆலயத்திற்குள் பவனியாக வருவார்கள். ஆலய வாசல் வந்தவுடன் பங்குத்தந்தை கிறிஸ்துவின் ஒளி இதோ என்று பாடுவார்.

    அப்போது மக்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் அனைத்து மெழுகு திரிகளையும் பற்ற வைப்பார்கள். உடனே ஆலயத்தின் அனைத்து விளக்குகளும் ஒளி யேற்றப்படும்.தொடர்ந்து வார்த்தை, வழிபாடு தொடங்கும். பழைய ஏற்பாடு நூலில் இருந்து மூன்று வாசகமும், புதிய ஏற்பாட்டு நூலில் இருந்து இரண்டு வாசகமும் வாசிக்கப்படும். ஐந்து வாசகங்களுக்கும் பதிலுரை பாடல்களும் பாடப்படும். தொடர்ந்து உன்னதங் களிலே என்ற வானவர்கீதம் பாடப்படும். அப்போது இயேசு உயிர்த்தெழுதல் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து திருமுழுக்கு வழிபாடு, புனிதர்களின் மன்றாட்டு மாலை, தண்ணீருக்கு ஆசி வழங்கு தல் ஆகியவை நடைபெறும்.

    அப்போது பங்கு தந்தை பாஸ்கா திரியை மூன்று முறை தண்ணீரில் வைத்து ஆசீர்வதிப்பார். தொடர்ந்து திருமுழுக்கு வாக்குறுதி களை புதுப்பித்தல், நம்பிக்கையாளர் மன்றாட்டு, இறைமக்கள் மன்றாட்டு, நற்கருணை வழிபாடு, பாஸ்கா முகவுரை ஆகியவை நடைபெறும். இறுதியில் உயிர்த்த இயேசுவின் சிறப்பு ஆசீர் வழங்கப்படும். திருப்பலி முடிந்ததும் ஒருவருக்கொருவர் உயிர்ப்பு பெருவிழா நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்.

    கோட்டார் சவேரியார் பேராலயம், நாகர்கோவில் அசிசி ஆலயம், புன்னை நகர் புனித லூர்து அன்னை ஆலயம், குளச்சல் காணிக்கை அன்னை ஆலயம், கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா ஆலயம், தக்கலை எலியாசியார் ஆலயம், கண்டன்விளை புனித குழந்தை ஏசுவின் தெரசாள் ஆலயம் உள்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கடற்கரை கிராமங்களில் இருந்து வேலைக்காக வெளியூர் சென்றவர்கள் பலரும் சொந்த ஊர் திரும்பி உள்ளனர். இதனால் கடற்கைரை கிராமங்கள் களை கட்டி உள்ளன.

    மேலும் அங்கு அசம்பாவிதங்கள் நடை பெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது.
    • தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள்.

    திருப்பூர் :

    ஏசு சிலுவையில் அறையப்பட்ட நாளான வெள்ளிக்கிழமையை புனித வெள்ளியாகவும், அவர் உயிர்தெழுந்த 3-ம் நாளான ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் பெருவிழாவாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஈஸ்டர் திருநாளின் முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாகவும், அதைத்தொடர்ந்து அந்த வாரம் முழுவதும் புனித வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

    புனித வெள்ளிக்கிழமைக்கு முன்பு வரும் வியாழக்கிழமை பெரிய வியாழனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் தேவாலயங்களில் ஆண்டவரின் கடைசி இரவு உணவு திருப்பலியும், பாதம் கழுவும் சடங்கு போன்றவையும் நடந்தது. நேற்று புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. ஏசு சிலுவையை சுமந்து செல்லும்போதும், அந்த சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் (இறக்கும்) நேரத்திலும் 7 திருவசனங்களை அவர் கூறினார் என்று புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. அந்த வசனங்களை அடிப்படையாக வைத்து தேவாலயங்களில் பிரசங்கங்கள், ஆராதனைகள் நடந்தன.

    திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள புனித கத்தரீனம்மாள் தேவாலயத்தில் பங்கு தந்தை ஹைசிந்த் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சிலுவைப்பாதை வழிபாடு, சிறப்பு பிரார்த்தனை, கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. குமார் நகர் புனித சூசையப்பர் தேவாலயம், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் ஆயர் ஆனந்த குமார் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

    இதுபோல் ஆசர்நகர் சி.எஸ்.ஐ. தூய லூக்கா தேவாலயம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் புனித வெள்ளியையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள், பெந்தேகோஸ்தே திருச்சபைகளிலும், மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    ஏசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெழுந்த 3-ம் நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது. நாளை அதிகாலையும் தேவாலயங்களில் கூட்டு திருப்பலிகள், சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். தவக்காலத்தில் விரதம் இருந்த கிறிஸ்தவர்கள் தங்கள் விரதத்தை முடித்து விருந்துண்டு மகிழ்வார்கள். மேலும் நண்பர்களுக்கும் விருந்தளித்து ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடுவார்கள்.

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
    இயேசுநாதர் நற்போதனைகள் மனிதர்களை வாழவைக்கும் மந்திர சொற்களாக அமைந்தன. இதனைக்கண்டு இயேசுநாதர் மீது பொறாமை கொண்டவர்கள், அவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி கொல்கதா மலையில் சிலுவையில் அறைந்தனர்.

    இந்த நாளை கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக கடை பிடித்து வருகிறார்கள். அதுபோல் இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார். இந்த நாள் வெற்றி திருநாளாகவும், மகிழ்ச்சி திருநாளாகவும் ஈஸ்டர் பண்டிகை என்ற பெயரில் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி நேற்று நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்-அவினாசி ரோட்டில் உள்ள பங்களா பஸ் நிறுத்தத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை ஈஸ்டர் பண்டிகையையொட்டி பல்வேறு கட்டங்களாக சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஆயர் வில்சன் குமார் தேவசெய்தி வழங்கினார். ஈஸ்டர் பண்டிகையையொட்டி அதிகாலையில் இருந்தே பலர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு சென்றனர்.

    இதுபோல் சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் தேவாலயத்திலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், குமார்நகர் புனித சூசையப்பர் ஆலயம் உள்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இந்த ஆராதனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 
    புனித வெள்ளியையொட்டி திருப்பூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    இயேசுவை சிலுவை அறைந்த நாள் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இயேசுவை சிலுவையில் அறைவதற்கு 40 நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடை பிடித்து வருகிறார்கள். இந்த தவக்கால உபவாச நாட்களை கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறார்கள். தவகால உபவாச நாட்களில் அசைவம் சாப்பிடாமல் இருப்பார்கள். யார் மீதும் கோபப்படாமல் அன்பு காட்டுவார்கள். தவக்காலத்தின் போது தான் குருத்தோலை ஞாயிறு, புனித வியாழன் போன்ற விசேஷ நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. தவக்காலத்தில் புனித வெள்ளி முக்கிய தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று திருப்பூரில் உள்ள கத்தோலிக்க, சி.எஸ்.ஐ. உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் புனித வெள்ளி சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன.

    திருப்பூர் பங்களா பஸ்நிறுத்தம் அருகே உள்ள சி.எஸ்.ஐ.தூய பவுல் ஆலயத்தில் நேற்று காலை புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நடைபெற்றது, இதை ஆயர் வில்சன்குமார் நடத்தி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.இதே போல் திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள டி.இ.எல்.சி.அருள்நாதர் ஆலயத்தில் ஆயர் அசோக்குமார் தலைமையில் புனித வெள்ளி சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதே போல் குமார் நகரில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதற்காக சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இந்த சிறப்பு ஆராதனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சிகளில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகள் மற்றும் திருப்பலிகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகளில் திரளானவர் கள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் நடந்த சிலுவைப்பாதை வழிபாட்டில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
    கிறிஸ்தவர்களின் மிக முக்கிய வழிபாடுகளில் ஒன்றாக திகழ்வது சிலுவைப்பாதை வழிபாடு.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வு நடந்த தினம் ஆண்டுதோறும் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.

    இந்த நாளில், ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன்பு, அந்த சிலுவையை சுமந்து கொண்டு ஜெருசலேம் நகரில் இருந்து கொல்கதா மலைக்கு சென்றதையும் அப்போது அவர் அடைந்த துன்பம், வேதனைகளை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடு ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நேற்று புனித வெள்ளியையொட்டி ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பகல் 11.30 மணிக்கு சிலுவைப்பாதை வழிபாடு தொடங்கியது.

    பங்குத்தந்தையும், ஈரோடு வட்டார முதன்மை குருவுமான ஜான் குழந்தை சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை சுந்தரம் சிலுவைப்பாதை வழிபாட்டினை வழிநடத்தினார். 14 சிலுவை பாடுகளை தியானித்து பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர். மாலை 6 மணிக்கு, சிலுவை முத்தம் வழிபாடு நடந்தது.

    இன்று (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு பாஸ்கா பெருவிழா, கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் புதுப்பித்தல் விழாவும் தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு கிறிஸ்து ஏசுவின் உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்ட திருப்பலியும் நடக்கிறது. இதுபோல் ஈரோட்டில் உள்ள அனைத்து கிறித்தவ தேவாலயங்களிலும் நேற்று புனிதவெள்ளி சிறப்பு நிகழ்வுகள் நடந்தன.
    ×