என் மலர்
நீங்கள் தேடியது "SUBURBAN RAIL"
- ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
- நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் மார்க்கத்தில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் புறநகர் மின்சார பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நேற்று விடுமுறை நாளில் குறைவான அளவில் சேவை இருந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் அதிகாலை வரையில் கூடுதலாக பஸ் போக்குவரத்து சேவையை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மின்சார ரெயில் வழித் தடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் 22-ந் தேதி வரை இரவு 11.45 மணி முதல் அதிகாலை 4.30 மணிவரை சென்னை கடற்கரை-முதல் தாம்பரம் வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பஸ்களுடன் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- தனியாக செயலி உருவாக்க டெண்டர் கோரிக்கை.
- க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பயணம் செய்யலாம்.
சென்னையில் பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதற்காக, தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் டெண்டர் கோரியுள்ளது.
இந்த செயலியில் க்யூஆர் கோடு மூலம் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.







