search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பந்த்"

    • சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    கடலூர்:

    புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், சிறுமி உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய அரசைக் கண்டித்தும் இந்தியா கூட்டணி கட்சிகள் மற்றும் அ.தி.மு.க. சார்பில் புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்றது.

    இதன் காரணமாக கடலூரில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் புதுச்சேரிக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் கடலூரில் வேலைக்கு செல்பவர்கள், சிகிச்சைக்காக செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான மக்கள் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வாகனங்களில் அவசர அவசரமாக சென்றதை காண முடிந்தது. சென்னைக்கு செல்லும் பஸ்கள் கடலூரில் இருந்து விழுப்புரம் வழியாக இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    • சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம்.
    • போதைப்பொருகள் புழக்கத்தை தடுக்க தவறியதை கண்டித்தும் போராட்டம்.

    புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

    புதுச்சேரியை உலுக்கிய இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போதை மயக்கத்தில் வாலிபர் செய்த இந்த வெறிச்செயல், புதுச்சேரி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

    சிறுமி கொலையை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆங்காங்கே போராட்டம், சாலை மறியல் நடத்தினர்.

    சிறுமி கொலையை கண்டித்தும், போதைப் பொருள் நடமாட்டத்தை புதுவையில் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பந்த் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் இந்த பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்த் போராட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. பந்த் போராட்டத்தால் புதுச்சேரி புதிய பஸ்நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை.

    புதுச்சேரியை பொறுத்தவரை தனியார் பஸ்கள்தான் அதிகளவில் இயக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று தனியார் நிறுவனத்தினர் பஸ்களை இயக்கவில்லை. அதோடு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக பஸ்களும் இயக்கப்படவில்லை.

    தமிழக அரசு பஸ்கள் மாநில எல்லைகளில் பயணிகளை இறக்கி சென்றது. புதுச்சேரி வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர். ஆட்டோக்கள், டெம்போக்களும் இயக்கப்படவில்லை.

    நகர பகுதியில் பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டி கடைகள் வரை அடைக்கப்பட்டிருந்தது. நேருவீதி, அண்ணா சாலை, மறைமலைஅடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் சாலை, படேல் சாலை, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதி ஆகிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    பெரிய மார்க்கெட், சின்னமணிக்கூண்டு, நெல்லித்தோப்பு மார்க்கெட் கடைகளும் இயங்கவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கின. பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.

    போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தவர்கள் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்காக பள்ளி, கல்லூரி வாகனங்களை நிறுத்த மாட்டோம் என தெரிவித்திருந்தனர். இதன்படி பிளஸ்-2 தேர்வு எழுத மாணவர்களை அழைத்து செல்ல ஒரு சில தனியார் பள்ளி பஸ்கள் மட்டும் ஒடியது. பெரும்பாலான தேர்வு எழுதும் மாணவர்களை பெற்றோர் தங்கள் வாகனங்களில் அழைத்து சென்றனர்.

    தனியார் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கவில்லை என்றாலும் அவைகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள் இயங்கினாலும் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது. சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட தொழிற்பேட்டைகளில் ஒரு சில தொழிற்சாலைகளை தவிர பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தது.

    பந்த் போராட்டத்தையொட்டி நகர பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரெயில்நிலையம், பஸ்நிலையம் உட்பட மக்கள் கூடும் இடங்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனால் வியாபாரிகள், ஆட்டோ, டெம்போ, தனியார் பஸ் உரிமையா ளர்கள், தொழிற்சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒட்டுமொத்தமாக பந்த் போராட்டத்தால் புதுவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    • புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.
    • கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்து அறிவிப்பு.

    புதுச்சேரியில் கடந்த 2ம் தேதி கடத்தப்பட்ட 9 வயது சிறுமி கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கண்டித்து, புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

    இந்நிலையில், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக பந்த் அறிவித்துள்ளது.

    அதன்படி, வரும் 8ம் தேதி பந்த் போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

    மேலும், சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரிப்பை கண்டித்தும் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை.
    • வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திரா அரசின் பாசன நீர் மேலாண்மை திட்டப் பணிகளை பார்வையிடுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு சித்தூர் மாவட்டத்தில் உள்ள புங்கனூர் பகுதியில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    சந்திரபாபு நாயுடு பயணத்தை தடுத்து நிறுத்துவோம் என்று ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    அதன்படி புங்கனூர் பகுதிக்கு வந்த சந்திரபாபு நாயுடுவை குறபலக்கோட்டா பகுதியில் தடுத்து நிறுத்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் காத்திருந்தனர்.

    அதே நேரத்தில் அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியினரும் குவிந்தனர். திடீரென அங்கு மோதல் ஏற்பட்டது.

    2 கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கற்கள், செருப்பு சோடா பாட்டில், பீர் பாட்டில் ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர். தொண்டர்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தினர். தடியடியில் 2 கட்சிகளையும் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    ஆவேசம் அடைந்த கட்சித் தொண்டர்கள் போலீசாரின் 2 வாகனங்களை கவிழ்த்து தீ வைத்தனர். தொண்டர்கள் நடத்திய தாக்குதலில் 2 போலீசாருக்கு மண்டை உடைந்தது. 50 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தொண்டர்களை விரட்டியடித்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் போர்க்களமாக காட்சி அளித்தது.

    இந்நிலையில் அங்கு வந்த சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டிக்கு சவால் விடுக்கும் வகையில் தன்னுடைய பிரச்சார வாகனத்தில் இருந்தவாறு பேசினார்.

    அமைச்சர் பெத்தி ரெட்டி ராமச்சந்திரா ரெட்டி நேருக்கு நேர் வந்தால் மோதிப் பார்த்து கொள்ளலாம் என்று சந்திரபாபு நாயுடு சவால் விட்டார்.

    இதனால் பதற்றம் ஏற்பட்டது. சந்திரபாபு நாயுடுவை சுற்றி நின்று சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளித்தனர். பின்னர் சந்திரபாபு நாயுடுவை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

    வன்முறை மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் சித்தூர் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சித்தூர் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக சித்தூர் நகர பகுதி மற்றும் மாவட்டம் முழுவதும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பஸ் லாரி கார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் அனைத்து பஸ்கள் வாகனங்கள் சித்தூர் மாவட்டத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.

    பந்த் காரணமாக கர்நாடகா மற்றும் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் ஓடவில்லை. வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

    ஆந்திர மாநில அரசு பஸ்கள் 56 மற்றும் தமிழக போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 12 அரசு பஸ்கள் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

    இதனால் வேலூர் வழியாக திருப்பதிக்கு வந்த பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் காட்பாடி சென்று அங்கிருந்து ரெயில் மூலம் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றனர்.

    இதுபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். அவர்கள் திருப்பதி ரெயில் நிலையத்தில் அதிகளவில் குவிந்துள்ளனர். ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று மாலைக்கு பிறகு இயல்பு நிலை திரும்பிவிடும் அதன் பிறகு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.
    • வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கலியாகஞ்ச் என்ற இடத்தில் கடந்த வாரம் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தாள். இந்த சம்பவம் மாநில அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு, ஏராளமானோர் காலியாகஞ்ச் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர். அந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக உறுதி செய்யப்படவில்லை.

    வெளிநபர்களை கொண்டு வந்து காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

    இந்நிலையில், பழங்குடியினர் சமூகத்தின் மீது அராஜகம் நடப்பதாக கூறி, மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை 12 மணி நேர பந்த் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் சுகந்த மஜூம்தார் கூறுகையில், 'மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் பயங்கர ஆட்சியை கட்டவிழ்த்து விட்டுள்ளது. வடக்கு வங்காள மாவட்டங்களில் பழங்குடியினர் சமூகத்தின் மீது மாநில நிர்வாகம் மற்றும் ஆளும் கட்சியினர் நடத்தும் அட்டூழியங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை 12 மணி நேர பந்த் நடத்த முடிவு செய்துள்ளோம். இது போன்ற அட்டூழியங்கள், முன்னெப்போதும் இருந்ததில்லை. வேலை நிறுத்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இருக்கும். மாணவர்களின் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் அவசரகால சேவைகள் வழக்கம்போல் இயங்கும்' என்றார்.

    இந்த போராட்ட அழைப்பு தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேற்கு வங்காளத்தின் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளது. 

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    ×