என் மலர்
இந்தியா
- மோன்தா புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவிப்பு.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் ஆந்திர பிரதேச மாநிலம் மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் (காகிநாடா) இடையே நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகுிறது.
ஆப்போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். கனமழை பெய்யும் என வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. ஆந்திர மாநில கடையோர பகுதிகள் இந்த புயலால் பெரிதும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடி டெலிபோன் மூலம் ஆந்திர பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியுள்ளார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேட்டறிந்ததாகவும், பிரதமர் அலுவலகத்துடன் தொழில்நுட்ப அமைச்சர் நர லோகேஷ் ஒருங்கிணைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
அப்போது எங்கெல்லாம் மழை பெய்யும், வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அறிந்து முன்னதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். பயிர்கள் சேதமடைவதை தடுக்க கால்வாய்கள், குளங்கள், ஏரிகளின் கரையோரங்களை வலுப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறையும் புயலின் நிலை குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணா மாவட்டத்தில் இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், குண்டூர், பபட்லா, என்டிஆர், பல்நாடு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் புரட்சி உள்ளிட்ட எதையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
- நாங்கள் உயர்மட்டக்குழுவின் முடிவைப் பற்றி பேச முடியாது.
கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை பிடித்தபோது, இரண்டரை வருடம் சித்தராமையா முதல்வராக இருப்பார், இரண்டரை வருடம் டி.கே. சிவக்குமார் முதல்வராக இருப்பார் என முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி வருகிற நவம்பர் மாதத்துடன் முதல் இரண்டரை வருடம் நிறைவடைகிறது. இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார். டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இதை சிலர் நவம்பர் புரட்சி என அழைக்கின்றனர்.
இதற்கிடையே, சித்தராமையா மகன், தனது தந்தை அரசியல் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார் எனக் கூறியதுடன், மற்றொரு அமைச்சர் குறித்து பேசினார். இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலகினார். டி.கே. சிவக்குமாருடன் மேலும் சிலர் போட்டிக்கு நிற்பார்கள் எனத் தெரிகிறது.
இதனால் கர்நாடக மாநில காங்கிரசில் ஒரு குழப்பமான நிலை நிலவுகிறது. இந்த நிலையில், மேலிடத்தில் (காங்கிஸ் உயர்மட்டக்குழு) இருந்து நாங்கள் அதுபோன்ற எந்த தகவலையும் பெறவில்லை என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பரமேஷ்வரா கூறியதாவது:-
நவம்பர் புரட்சி உள்ளிட்ட எதையும் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நாங்கள் உயர்மட்டக்குழுவின் முடிவைப் பற்றி பேச முடியாது. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தேவையில்லாமல் மீடியாக்கள் முன் கருத்து தெரிவிப்பது, கூடுதல் குழப்பத்திற்கு வழிவகுக்கும். உயர்மட்ட குழுவில் இருந்து தற்போது வரை யாராவது இதுபற்றி பேசியிருக்கிறார்களா?. நாங்கள் உயர்மட்டக்குழுவில் இருந்து எந்தவொரு தகவலையும் பெறவில்லை.
நாங்கள் ஏதாவது தகவலை பெற்றிருந்தால்தான், பதில் கூற முடியும். உயர்மட்டுக்குழு முடிவு செய்யும்வரை, எங்களுடைய கருத்துகள் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்காது.
இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
- ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டுள்ளார்.
- வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர்.
அரியானாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது 3 தங்கைகளின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக சித்தரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்த ராகுல் பாரதியின் தொலைபேசியை ஹேக் செய்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி அவரது சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இந்த ஆபாச காட்சிகளை ராகுலுக்கு அனுப்பி சாஹில் என்ற நபர் ரூ.20,000 பணம் கேட்டது விசாரணையில் தெரியவந்தது.
வாட்சப்பில் இது தொடர்பாக இருவரும் பேசியுள்ளனர். இந்த உரையாடலில், பணம் கொடுக்கவில்லை என்றால் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வைரலாக்கிவிடுவேன் என்று சாஹில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராகுல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் குடும்பத்தினரின் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார்.
- மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் சதாரா மாவட்டம் பால்டன் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
4 நாட்களுக்கு முன்பு அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மரணத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே காரணம் எனவும், அவர் 4 முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் தனது உள்ளங்கையில் குறிப்பு எழுதியுள்ளார்.
பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீட்டு உரிமையாளர் பிரசாந்த் பங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு பெண் டாக்டர் 4 பக்க கடிதத்தை எழுதி வைத்துள்ளார். மேலும் மராட்டிய எம்.பி. ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே பெண் டாக்டர் தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
போலியான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டதாக பெண் டாக்டரின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இது தற்கொலை இல்லை என்றும் பிரேத பரிசோதனையை மாற்ற டாக்டர் ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
- தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம்
- உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்ச் கவனித்தும் எடுத்துக் கொள்ளும் எனத் தெரிவித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தெருநாய் விவகாரம் குறித்து 2 மாதத்திற்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மேற்கு வங்கம், தெலங்கானா மற்றும் டெல்லி மாநகராட்சி ஆகியவை மட்டுமே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.
இதனையடுத்து 2 மாதம் அவகாசம் வழங்கியும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யாததால் தமிழ்நாடு உள்ளிட்ட 25 மாநில தலைமைச் செயலாளர்கள் வரும் 3 ஆம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
- உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார்.
- கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
உச்சநீதிமன்ற 52வது தலைமை நீதிபதியாக கடந்த மே 14, 2025 முதல் பி.ஆர். கவாய் செயல்பட்டு வருகிறார். விதிகளின்படி, தலைமை நீதிபதி 65 வயதில் ஓய்வு பெற வேண்டும். அதன்படி கவாய் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு நீதிபதி கவாயிக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், தனக்கு அடுத்தபடியாக நீதிபதி சூர்யகாந்த்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய மத்திய சட்டத்துறைக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.
நீதிபதி சூர்யகாந்த் தற்போது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியாக பணியில் உள்ளார்.
நீதிபதி சூர்யகாந்த் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், அவர் 15 மாதங்கள் அந்தப் பதவியில் இருப்பார். அவரது பதவிக்காலம் இந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 9, 2027 அன்று முடிவடையும்.
- இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர்.
- இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எரஞ்சிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரேயாஸ் அனந்தகிருஷ்ணன் (வயது26). இவருக்கு 'டேட்டிங்' செயலி மூலமாக மலப்புரம் வண்டூரை சேர்ந்த ஒரு இளம்பெண் அறிமுகமானார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் வெகுநாட்களாக 'டேட்டிங்' செயலி மூலமாக பேசி பழகி வந்தனர். இந்த பழக்கம் அவர்களுக்கிடையே நெருக்கத்தை உருவாக்கி உள்ளது. இதையடுத்து அவர்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அனந்த கிருஷ்ணன், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார்.
அனந்த கிருஷ்ணன் வார்த்தையை நம்பிய அந்த இளம்பெண், அவர் அழைத்ததன்பேரில் பொட்டம்மல் பகுதியில் உள்ள லாட்ஜூக்கு சென்றிருக்கிறார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்தநிலையில் இளம்பெண்ணுடன் பேசுவதை அனந்த கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். மேலும் அந்த பெண்ணும் போன் செய்ய முடியாதவாறு செய்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், லாட்ஜில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அனந்தகிருஷ்ணன் மீது போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி அனந்தகிருஷ்ணனை கைது செய்தனர்.
'டேட்டிங்' செயலியில் பழகிய இளம்பெண்ணை லாட்ஜூக்கு வரவழைத்து வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
- 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.
ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.
ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.
1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.
அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.
இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
- வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
- பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்கள் உட்பட 10 முதல் 15 மாநிலங்களில் பீகாரைப் போல முதல்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை தொடங்க தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. இது பற்றிய அறிவிப்பு இன்று மாலை செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த பணியின்போது வாக்குச்சாவடி-நிலை அதிகாரிகளுக்கு உதவ தன்னார்வலர்களை நியமிக்கலாம் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. இந்தப் பயிற்சிக்காக ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள அரசு ஊழியர்களிடமிருந்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் வாக்குச்சாவடி -நிலை அதிகாரிகளுக்கு கணக்கெடுப்பு படிவங்களை நிரப்ப உதவுவார்கள், தேவைப்பட்டால் மாற்றாகவும் பணியமர்த்தப்படவும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு
- ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்தூருக்கு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை கஃபேவுக்கு செல்ல வெளியே வந்தபோது, இரு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர்.
இதில் ஆஸி. கிரிக்கெட் அணி உறுதிப்படுத்தியுள்ள நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கை மற்றும் காலில் மாவுக்கட்டுடன் குற்றவாளியை போலீசார் அழைத்து வந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த விவகாரத்திற்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து பேசிய மத்தியபிரதேச பாஜக அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம். கிரிக்கெட் வீரர்களுக்கு இங்கு மிகப்பெரிய மோகம் இருப்பதால், அவர்கள் பொதுவெளியில் வருவதற்கு முன்பு பாதுகாப்புப் பணியாளர்கள் அல்லது உள்ளூர் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்பதை இது வீரர்களுக்கு நினைவூட்டும் என்று நான் நினைக்கிறேன். சில நேரங்களில், வீரர்கள் தங்கள் பிரபலத்தை உணர மாட்டார்கள். அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுகிறார் என பாஜக அமைச்சருக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா, "பெண்கள் மெல்லிய ஆடைகளை அணிவதை தனக்குப் பிடிக்காது என்று கூறி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்லூரி மாணவி ஒருதலைக் காதலை ஏற்க மறுத்தார்.
- இதனால் அந்த மாணவி மீது திராவகம் வீசப்பட்டது.
புதுடெல்லி:
டெல்லி அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரியில் சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் அவர் நேற்று காலை கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து நிறுத்தினர்.
அப்போது அந்த மாணவி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்து அவர் விலகி செல்ல முயன்றார்.
அப்போது நொடிப்பொழுதில் தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர் ஒருவர் அந்த இளம்பெண்ணின் முகத்தை நோக்கி வீசினார்.
அப்போது தனது முகத்தை அந்த இளம்பெண் தனது கைகளால் மறைத்துக் கொண்டார். இதில் அவருடைய கைகள் வெந்து கருகின. இதனால் வலியில் அலறி துடித்த அந்த மாணவி சாலையில் சரிந்தார். அதற்குள் மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர்கள் தப்பிச் சென்றனர்.
படுகாயம் அடைந்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் மாணவியுடன் அதே கல்லூரியில் படித்து வரும் ஜிதேந்தர் என்பவர்தான் திராவகத்தை வீசியது தெரிந்தது. ஜிதேந்தர் அந்த மாணவியை கடந்த 7 மாதமாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தக் காதலை மாணவி ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும் அவரை எப்படியாவது காதலில் விழ வைக்க வேண்டும் என்னும் முயற்சி தோல்வியில் முடிய இந்த பயங்கரமான சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
தலைமறைவான ஜிதேந்தர், அவருடைய நண்பர்கள் அர்மான், இஷான் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
- கொரோனா பரவல் எதிரொலியாக இந்தியா-சீனா இடையிலான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.
- 5 ஆண்டுக்குப் பின் இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை மீண்டும் தொடங்கியது.
கொல்கத்தா:
கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.
இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது. இதையடுத்து, இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில், கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை நேற்று தொடங்கியது.
ஷாங்காய்-டெல்லி இடையேயான விமான சேவை நவம்பர் 9-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






