search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruppur"

    • கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
    • சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது. திருப்பூர் டவுன் ஹால் செல்வவிநாயகர் கோவில், குலாலர் பிள்ளையார் கோவில் , செரீப் காலனி சித்தி விநாயகர், ஜான் ஜோதி கார்டன் செல்வவிநாயகர், எஸ்.ஆர்.நகர் நவக்கிரக விநாயகர்,

    கருவம்பாளையம் மேற்கு விநாயகர் கோவில், எஸ்.வி.,காலனி, வலம்புரி ரத்தின விநாயகர், ராயபுரம் ராஜவிநாயகர், மண்ணரை செல்வ விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் நடந்த பூஜைகளில் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில், கதித்தமலை வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கொங்கணகிரி கந்தப்பெருமான் கோவில், அலகுமலை பாலதண்டாயுதபாணி கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லடம், தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், ஊத்துக்குளி வட்டார கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதுதவிர வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலை அமைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. 

    • தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி ஒளிபரப்பாகிறது.
    • 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு.

    திருப்பூர் :

    ஆதிமூல சற்குரு ஸ்ரீ வீரபோக வசந்தராயர் மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் நாளை 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அனைவரும் இதனை பார்த்து சுவாமிகளின் திருவருளையும் அம்பாளின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

    • மாதாந்திர மின்சார பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்

    திருப்பூர் :

    திருப்பூர், பல்லடம், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை,பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

    இதுகுறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூர், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை, பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

    வீரபாண்டி, ஆண்டிப்பாளையம்

    வீரபாண்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், (வாய்க்கால்மேடு) குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சினனக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில்.

    ஆண்டிப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர்,லிட்டில் பிளவர் நகர்.

    குமார்நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்குநகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம்,என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர்.

    சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகள்.

    பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பல்லடம் நாரணாபுரம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி, பனப்பாளையம், மாதப்பூர்,கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
    • வீரபாண்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வீரபாண்டி துணைமின்நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை வீரபாண்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பார்க் காலேஜ் ரோடு, லட்சுமிநகர் நால்ரோடு, கரைபுதூர் ரோடு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

    இதேபோல் பணப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட மாதேஸ்வரன் நகர், நல்லூர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம்புதூர், மலையம்மன்பாளையம், கிருஷ்ணாபுரம், சிட்கோ.

    திருப்பூர் துணைமின்நிலையத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. சர்ச் வீதி, இந்திராநகர், இட்டேரி ரோடு, போஸ்டல் காலனி, திரு.வி.க. நகர் 1,2,3 வீதிகள் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பவானியில் உள்ள 3 -வது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
    • சனிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகரில் நாைள 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகிக்கும் ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள 3 -வது குடிநீா்த் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.ஆகவே, திருப்பூா் மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் விநியோகம் வெள்ளிக்கிழமை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    சனிக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது
    • கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் 0.3 சதவீதமாக இருந்த தொற்று பரவல் மெல்ல அதிகரித்து, 2.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் தொற்று வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், தொற்று தடுப்பு பணிகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.முதல் கட்டமாக மருத்துவ கல்லூரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோர் தொடர் உடலக்குறைவு இருந்தால் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளதால், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு, 50 படுக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைக்கான வசதிகள் தயாராக உள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்திய பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அறிகுறி இருப்பவர்கள் சந்தேகம் இருந்தால் டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.

    மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் கூட முதல்தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 3லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது.மருத்துவ கல்லூரி, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது தொற்று பாதித்தவரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்களா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

    கடந்த5 மாதங்களாக திருப்பூர் பின்னலாடை தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் கொரோனா பயமின்றி பயணித்துவருகின்றனர். மேலும் தொற்று தடுப்பு வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை.மெல்லமெல்ல கொரோனா தலை தூக்கும்நிலையில்மீண்டும் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நான்காவது அலை உருவாகாமல் தடுப்பது அவசியமாகிறது.

    கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.பின்னலாடை தொழிலாளர் பணிக்கு வரும்போதும், பணி முடித்து வீட்டுக்குச் செல்லும்போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கவேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நிறுவனங்களின் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.அனைவரும் தவறாமல் முக கவசம் அணியவேண்டும். தொழிலாளர்கள் கைகழுவுவதற்காக நிறுவன வளாகத்தில், சோப், தண்ணீர் வழங்கவேண்டும்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தாதோர், தாமதிக்காமல் உடனே தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு பின்னலாடை உற்பத்தி நிறுவனமும், உடனடியாக தொற்று தடுப்பு அம்சங்களை செயல்படுத்தவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு, கொரோனாவின் கொடிய அலைகளிடமிருந்து பின்னலாடை தொழில் வளர்ச்சியை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

    • 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது.
    • விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய ஆண்டின் இருமுறை பள்ளி பஸ்களின் நிலை குறித்து ஆராய்ந்து சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. நடப்பு கல்வியாண்டு பள்ளிகள் தொடங்கிய நிலையில் தனியார் பள்ளிகளில் பஸ்கள் இயக்கம் பல பகுதிகளுக்கு துவங்கியுள்ளது.இந்நிலையில் பள்ளி பஸ்கள் எந்த நிலையில் உள்ளது. முன்பக்க, பின்பக்க, அவசர கதவுகள் நிலை, இருக்கை முதலுதவி வசதி, படிக்கட்டுகளின் உயரம், வேக கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவை குறித்து திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு வட்டார போக்குவரத்து துறை சார்பில் வரும் 25-ந்தேதி திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் ஆய்வு நடத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தாலுகாவில் 1,300 பள்ளி பஸ் இயங்குகிறது. இவற்றில் வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., எல்லைக்கு உட்பட்ட பஸ்கள் மட்டும் 25 -ந்தேதி ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த வாரத்தில் தாலுகா அளவில் பள்ளி பஸ் ஆய்வு நடக்கவுள்ளது. ஆய்வு விபரங்கள் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கையாக சமர்பிக்கப்பட உள்ளது.

    பள்ளி பஸ் ஆய்வுக்கு முன்னதாக பள்ளிகல்வித்துறை, வட்டார போக்குவரத்து துறை, போலீசார், பள்ளி நிர்வாகங்கள் இணைந்த ஆய்வு கூட்டம் நடத்தப்படும். இதில், பள்ளி பஸ்கள் எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், விரைவில் கூட்டாய்வு கூட்டம் நடக்குமென வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    திருப்பூர் 

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி, வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் அனைத்து தரப்பு நிர்வாகிகள், மாநகர் நிர்வாகிகள்மற்றும் இளைஞர் காங்கிரஸ் , சிறுபான்மை பிரிவு, விவசாயப் பிரிவு , ஐஎன்டியூசி ,தொழிற்சங்க பிரிவு, மனித உரிமை துறை, சிவாஜி மன்றம், எச்எம்எஸ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர், ஜூன்.17-

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது.
    • தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

    திருப்பூர்,

    திருப்பூர் மாநகராட்சி பகுதியை தூய்மை மாநகராட்சியாகமாற்றும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது, 4-வது சனிக்கிழமைகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. என்குப்பை-என் பொறுப்பு-என் நகரம்-எனது பெருமை என்பதற்கேற்ப குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனதரம் பிரித்து வழங்க வேண்டும் என்று பொதுமக்களுக்குமாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) வடக்கு உழவர் சந்தை,தென்னம்பாளையம் தினசரி மற்றும் வார சந்தை பகுதியில்காலை பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் தூய்மைப்பணிமேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள், தன்னார்வலர்கள்இந்த சேவை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றுஆணையாளர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

    திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ. 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #Parliamentelection #LSPolls

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது.  #Parliamentelection #LSPolls

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தண்ணம் பாளையம் சபரி பிரியா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். பனியன் வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீடு திறக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது வீடுகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இது குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீநாத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டது. நகை- பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று போலீசார் கேட்டபோது நகை- பணம் இருந்தது என்று கூறினார். ஸ்ரீநாத் திருப்பூர் விரைந்துள்ளார். அவர் வந்த பின்னரே திருட்டுபோன நகை- பணம் குறித்து விபரம் தெரியவரும்.

    ×