என் மலர்
நீங்கள் தேடியது "Market"
- தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
- ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.
சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தபோது நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது.
இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை, மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
பள்ளிகள் கோடை விடுமுறை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடை களுக்கு கிராக்கி நிலவுகிறது.
இதேப்போல் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால் ஜவுளி சந்தையில் இன்று சில்லரை வியாபாரம் 35 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் மொத்த விற்பனை 25 சதவீதம் நடந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
- வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.
- பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என்ற அளவுக்கு விலை குறைந்திருந்தது.
நெல்லை:
சாம்பாரில் தொடங்கி பொரியல், அவியல், ஆம்லெட், பிரியாணி என சமையலில் வெங்காயம் தவிர்க்க முடியாத உணவு பொருளாக இருந்து வருகிறது.
வெங்காயம்
அதேசமயம் வெங்காயம் உற்பத்தி என்பது குறைந்து வருகிறது. எனவே வரத்தை பொறுத்து வெங்காய விலை அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறது.
நெல்லை மார்க்கெட்டுகளுக்கு வழக்கமாக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
ஆனால் கடந்த சில நாட்களாக வரத்து இல்லாததால் மிகக் குறைந்த அளவே வருகிறது. இதனால் திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவு உற்பத்தியானதால் விலை குறைந்து காணப்பட்டது.
குறிப்பாக பெரிய வெங்காயம் 5 கிலோ ரூ. 100 என வியாபாரிகள் கூவி கூவி விற்கும் அளவுக்கு விலை குறைந்திருந்தது. அதேபோல் சின்ன வெங்காயமும் ரூ. 30 முதல் ரூ. 40 ஆக இருந்து வந்தது.
விலை உயர்வு
இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மார்க்கெட்டில் சின்ன வெங்காய விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு ரூ. 40-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ரூ. 67-க்கும், நேற்று ரூ. 75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஒரு கிலோ ரூ. 100 வரை விற்கப்படுகிறது. இதேபோல் டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட நெல்லை மாநகர மற்றும் மாவட்ட பகுதியில் வெங்காயத்தின் விலை ரூ. 100- ஐ தொட்டு உள்ளது.
இந்த விலை உயர்வை கேட்டு இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து பாளை மார்க்கெட் வியாபாரி செய்யது அலி கூறும்போது,
பருவமழை காரணமாக தென்காசி மாவட்டத்தில் இருந்து வரும் வெங்காயத்தின் வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனால் தாராபுரம், துறையூர் பகுதிகளில் இருந்து வாங்கி வருகிறோம். அதன்படி பாளை மார்க்கெட்டிற்கு நாள்தோறும் சுமார் 100 மூட்டைகளில் சின்ன வெங்காயம் வரும்.
ஆனால் இன்று 20 மூட்டை தான் வந்துள்ளது. எனவே வரத்து குறைவால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
அதேசமயம் பெரிய வெங்காயம் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 15 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
- மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது.
உடுமலை :
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே உடுமலை நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு விற்பன செய்து மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது. இதில் ஆடு மாடுகள் மேய்ந்து பிளாஸ்டிக் உண்பதால் அவற்றுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குப்பை கிடங்கால் துர்நாற்றம் ஏற்பட்டு சந்தைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை உடனு க்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்கள் பொரி, பழங்கள், பூக்களை வாங்கி சென்றனர்
- கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கோவை:
நாளை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டா– டப்படுகிறது. இதனை–யொட்டி பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பூக்கள், பழங்கள், பொரி, அவல், கடலை, சுண்டல் படைத்து வழிபடுவார்கள்.
இதேபோல் அனைத்து நிறுவனங்களிலும் ஆயுதபூஜை பண்டிகை கொண்டாடப்படும். இதற்கு தேவையான பொருட்களை கடந்த சில தினங்களாக மக்கள் வாங்கி வந்தனர்.நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் உள்ள கடை வீதிகள், மார்க்கெட்டுகளில் இன்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் வழக்கத்தை விட இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.மக்கள் அங்கு சாமி கும்பிடுவதற்கு தேவையான எலுமிச்சம் பழம், பொரி, அவல், கடலை, பனஓலை, மாவிலை, வாழைகுலை, தேங்காய் மல்லி, செவ்வரளி, முல்லை, ரோஸ் என பல்வேறு வகையான பூக்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதுதவிர ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்ட பழ வகைகளும் வாங்கினார்கள். ஆயுதபூஜை பண்டிகை காரணமாக அனைத்து பொருட்களின் விலையும் மற்ற நாட்களை விட சற்று உயர்ந்து காணப்பட்டது.
கோவை பூ மார்க்கெட்டில் விற்பனையாகும் பூக்களின் விலை கிேலாவில் வருமாறு:-
மல்லிகைப்பூ ரூ.800 முதல் 1000 வரை விற்பனையானது. ஜாதி மல்லி ரூ.600, செவ்வந்தி ரூ.400, ரோஜா ஒரு கிலோ ரூ.360, அரளி ரூ.350, தாமரை பூ ஒன்று ரூ.20, கோழி பூ ரூ.100, மருகு ஒரு கட்டு ரூ.30, மரிகொழுந்து ஒரு கட்டு ரூ.30, நந்தியா வட்டம்ரூ.200, சம்பங்கி ரூ.350, செண்டுமல்லி ரூ.80, வாடாமல்லி ரூ.80-க்கும் விற்பனையானது.
இதுதவிர பனை ஓலை ஒன்று ரூ.5, வாழை குலை ஒன்று ரூ.20, எலுமிச்சை ஒரு கிலோ ரூ.120க்கும், வெள்ளை பூசணி ஒரு கிலோ ரூ.40, தேங்காய் ரூ.25 முதல் 30 வரையும், பொரி 1 பக்கா ரூ.20க்கும், மாலை இலை 1 கட் ரூ.20க்கும் விற்பனையானது.
சாத்துகுடி ரூ.100, ஆரஞ்சு ரூ.150, மாதுளை ரூ.200, ஆப்பிள் ரூ.150, திராட்சை ரூ.120, கொய்யா ரூ.100-க்கும் விற்பனையானது.இதேபோன்று கோவையில் உள்ள கடைவீதியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு மக்கள் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூஜை பொருட்களையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.
இதேபோல் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளிலும் காலை முதலே மக்கள் கூட்டமாக காணப்பட்டது. அங்கு மக்கள் ஆயுதபூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதன் காரணமாக பல இடங்களிலும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
- தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
- வாரசந்தையில் குவியும் கோழி கழிவுகளால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சியில் வருவாய் இனங்களாக உள்ள வாரச்சந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தோறும் கூடுகிறது.
இங்கு தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பல ஆயிரம் பேர் வந்து செல்லும் பெரிய சந்தை ஆகும்.
இந்நிலையில் சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கறிக்கோழி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதால் கடை வியாபாரிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் வியாபாரிகளின் வருகை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதால் .சந்தையை சுத்தப்படுத்த வேண்டுமென குத்தகைதாரர்கள் பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் சந்தை பேட்டையில் உள்ள கழிவறை கட்டிடத்தில் இருந்து முறையற்ற மின்சார இணைப்பை கறி கோழி கடைகளுக்கு வழங்கி வருவதாகவும் புகார் தெரிவித்து வருகின்றனர் .
இதுபற்றி வாரசந்தையின் குத்தகைதாரர் பெரியசாமி கூறுகையில், வாரச்சந்தை பகுதியில் குத்தகை காலம் முடிந்தும் இயங்கி வரும் கறிக்கோழி கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் முறையற்ற மின்சார இணைப்பை துண்டித்து, கடைகளை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும். சந்தை பகுதி வளாகத்தை தூய்மை படுத்தி தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் .
- ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.
- 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.
திருப்பூர்:
திருப்பூர் கோவில்வழி அமராவதிபாளையத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க வருவர்.ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.
கோவில்வழி - பெருந்தொழுவு சாலையில் 2 கி.மீ., தூரத்திற்கு மாடுகளுடன் ஆட்டோ, வேன்கள் அணிவகுத்து நின்றன. 810 மாடுகள் வந்ததால் மாலை, 4 மணி வரை சந்தை சுறுசுறுப்பாக நடந்தது.சிறிய ரக கன்றுக்குட்டிகள் 8,000 ரூபாய்க்கும், நல்ல தரமான முதல் ரக மாடுகள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.
இது குறித்து மாட்டுச்சந்தை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், மாடுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள கேரளா வியாபாரிகள் முன்வருவதால் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.6 மாதத்துக்கு பின் தற்போது தான் 800 மாடு வந்தது. ஒரே நாளில் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என்றனர்.
- போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
- வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது
ஊட்டி
குன்னூர் நகரின் முக்கிய வீதிகளாக மவுண்ட்ரோடு, வி.பி., தெரு, டி.டி.கே., சாலை உள்ளன.
இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும் பகுதியாகும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த சாலைகளில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன.
அவ்வாறு சுற்றி திரியும் கால்நடைகள் சாலைகளில் செல்லும் வாகனங்களையும் மறித்து விடுகிறது. சில நேரங்களில் குறுக்கே வந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதேபோல் குன்னூர் மார்கெட் பகுதி, குன்னூர் கேஷ்பஜார், சாமண்ணா பூங்கா, வி.பி., தெரு, கிருஷ்ணாபுரம் உட்பட பகுதிகளிலும் மாடுகள் உலா வருகிறது.
மார்க்கெட் பகுதியில் சுற்றிதிரியும் கால்நடைகள், அங்குள்ள கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறி மற்றும் பழங்களை சேதப்படுத்தி வருகிறது.
அத்துடன் அங்கு நிறுத்த படும் வாகனங்களையும் கீழே தள்ளி சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளது சில சமயங்களில், நகரின் மையப்பகுதியான பஸ் ஸ்டாண்டில் கூட கூட்டமாக சுற்றி திரிகின்றன. எனவே சாலைகள் மற்றும் குன்னூர் மார்க்கெட்டில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
- வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.
இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் பஸ்கள் அந்த வழியாக இயக்கப்படாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. பின்னர் பல முறை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள் போதிய ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் மார்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பேரூராட்சிக்கு கிடைத்து வரும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பழங்குடியின மக்களும் இங்கு உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சரிடம், கடை இழந்து பாதிப்புக்கு ள்ளாகும் வியாபாரிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்க ளிடம், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதி அளித்து விட்டு, இது குறித்து அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனை செய்வதற்காக கோத்தகிரி பேரூராட்சி விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
- காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர்.
- வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தையில் உடுமலை மற்றும் கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உடுமலை மட்டுமன்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் காய்கறிகள் வாங்குவதற்காக தினம்தோறும் உழவர் சந்தைக்கு வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பொது மக்கள் வரும் வாகனங்கள் ரோட்டிலேயே தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. மேலும் வடக்கு பகுதியில் செல்லும் ரோட்டில் ரோட்டை அடைத்து இரண்டு புறமும் தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்படுவதால் வாகனங்கள் அந்த வழியாக உடனடியாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்ததை சரி செய்ய போலீசாரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு உடுமலை வெங்கட கிருஷ்ணா ரோட்டில் வாகனங்களை ரோட்டிலும் ஓரங்களிலும் தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது இதனால் இந்த வழியாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு வாகனங்கள் இடையூறாக இருக்கிறது. மேலும் இந்த வழியாகத்தான் சந்தைக்கு செல்ல வேண்டும். பெரும்பாலானோர் இந்த வழியைத் தான் பயன்படுத்துகின்றனர். மேலும் சந்தை நாட்களில் இந்த ரோட்டில் வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்வதால் ரோட்டை கடக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் நேரங்களில் காவலர்களை நிறுத்தி போக்குவரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேரளா வியாபாரிகள் அதிகளவில் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்கின்றனர்.
- இன்றும் நாளையும் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்காசி:
ஓணம் பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் கேரளாவில் இருக்கும் வியாபாரிகள் அதிகளவில் தமிழகத்தில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி சந்தையில் காய்கறிகளின் விலை சீராக இருந்து வந்த நிலையில் தற்போது ஓணம் பண்டிகையின் எதிரொலியாக ரூ.12-க்கு விற்பனையான தக்காளி ரூ. 34-க்கும், ரூ.15-க்கு விற்பனையான வெங்காயம் ரூ.24, உருளைக்கிழங்கு ரூ.40, கேரட் ரூ. 70, பீன்ஸ் ரூ. 100, வெண்டை ரூ.45,அவரை ரூ. 28, புடலை ரூ. 25, பாகற்காய் ரூ. 25, சுரைக்காய் 10 முறையே விலை அதிகரித்து விற்பனையாகி வருகிறது. ஓணம் பண்டிகையை கொண்டாட இன்னும் 2 தினங்கள் மட்டுமே இருப்பதனால் இன்றும் நாளையும் காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள வியாபாரிகள் அதிகளவில் பாவூர்சத்திரம் காய்கறி சந்தையை நோக்கி வந்த வண்ணம் இருப்பதால் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வியாபாரமும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.






