search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் மழைநீரில் திறந்து விடப்பட்ட ரசாயன கழிவுநீர் -  தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
    X

    காேப்புபடம்

    திருப்பூரில் மழைநீரில் திறந்து விடப்பட்ட ரசாயன கழிவுநீர் - தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    • திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர், ஜூன்.17-

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×