search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chemical wastes"

    • திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர், ஜூன்.17-

    திருப்பூர் மாவட்டம், வழியாக ஓடும் நொய்யல் ஆற்றில் கடந்த 2000மாவது ஆண்டில் சுத்திகரிப்பு செய்யப்படாத சாய தண்ணீர் வருடக் கணக்கில் திறந்து விடப்பட்டதால்,வழியோர விவசாய நிலங்கள் கடுமையாக பாதிப்படைந்து விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து விவசாயிகள் தொடுத்த வழக்கின் காரணமாக திருப்பூரில் செயல்பட்டு வரும் அனைத்து சாய ஆலைகளும் பூஜ்ஜிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென, சாயபட்டறைகளை மூடி நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையம் அமைத்து,சாய தண்ணீரை சுத்திகரிப்பு செய்து மீண்டும் பயன்படுத்தியதால் சாய நீர் நொய்யல் ஆற்றில் நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் மழை பெய்யும் நேரங்களில் சாய நீர் கலப்பது வாடிக்கையாக வருவதாக விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

    அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கும் நிறுவன சாய ஆலைகள் மழை பெய்யும்போது கழிவு நீர் கால்வாய் மற்றும் நொய்யல் ஆற்றில் நேரடியாகவே சுத்திகரிப்பு செய்யாத சாய நீரை கலந்து வருவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

    மேலும் திருப்பூர் நகருக்குள் செயல்படும் பனியன் துணி உற்பத்தி சார்ந்த கெமிக்கல் ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு மற்றும் திரவ கழிவுகள் மழை பெய்யும்போது சாக்கடையில் திறந்துவிடப்பட்டு நொய்யல் ஆற்றில் கலந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று மாலை திருப்பூர் நகரில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த கனமழை யின் போது,திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு ராமமூர்த்தி நகரில் மழை வெள்ளத்துடன் கழிவுநீர் கால்வாயில் அதிக துர்நாற்றத்துடன் ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிவுகளை சாக்கடையில் கலந்துவிட்டனர்.

    ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதேபோன்று கழிவு பொருட்கள், ரசாயன தொழிற்சாலையில் இருந்து கழிநீர் கால்வாயில் கலந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.எண்ணெய் பசைபோல் உள்ள இந்த ரசாயனத்தால் சாலையில் வரும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுவது வாடிக்கையாகி உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஓசூரில் குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜர் நகர் அருகே உள்ள துளசியம்மா நகரில், 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சுற்றி வாகனங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், துளசியம்மா நகர் பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    மேலும் அதற்கு தீ வைப்பதால், அதிலிருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கலந்த புகையால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பாதிப்புக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் அதிகாரிகளுக்கு பல முறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறினர்.

    இதனால், ஆத்திரம் அடைந்த துளசியம்மா நகர் பொதுமக்கள், நேற்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில், அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த போவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    ×