search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒளிபரப்பு"

    • இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.
    • தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    மதுரை:

    இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் வருகிற 22-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கோப்பையை இதுவரை சென்னை, மும்பை இந்தியன்ஸ் அணிகளும் தலா 5 முறை வென்றுள்ளன. கடந்தாண்டு நடந்த இறுதிப் போட்டிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்றது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டோனி தலைமையில் இந்த முறையும் கோப்பையை வெல்லும் என்று தமிழக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியா முழுவதும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு உள்ளது.

    இதையொட்டி நாட்டில் உள்ள பெரிய நகரங்களில் பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். ரசிகர் பூங்கா என்ற பெயரில் பெரிய திரைகளை அமைத்து ஐ.பி.எல். போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது.

    தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பட்டியலில் மதுரை நகரமும் இணைக்கப்பட்டது.

    அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ள ஐ.பி.எல். போட்டிகளை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பெரிய திரை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக மும்முரமாக நடந்து வருகிறது.

    நவீன ஒலி, ஒளி அமைப்பில் ராட்சத திரையின் மூலம் போட்டிகளை ரசிகர்கள் காணலாம். இங்கு ஒரே நேரத்தில் 3000 பேர் போட்டிகளை அமர்ந்து பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வருகிற 22-ந் தேதி மாலை தொடக்க விழா நிகழ்ச்சிகளுடன் போட்டி நேரடியாக இந்த பெரிய திரையில் ஒளிபரப்பப்படும்.

    இந்த ஆண்டு 27 நகரங்களில் இது போன்ற பெரிய திரை அமைத்து பி.சி.சி.ஐ. சார்பில் ஐ.பி.எல். போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். போட்டி நடைபெறும் அன்று பிற்பகல் 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ரசிகர்கள் போட்டியை கண்டுகளிக்கலாம்.

    இரவு 10 மணிக்கு மேல் கிரிக்கெட் போட்டியின் சத்தம் நிறுத்தப்பட்டு ஒளிபரப்பப்படும். மேலும் ரசிகர்களின் வசதிக்காக அருகிலேயே உணவு மற்றும் பானங்கள் ஸ்டால்கள் அமைக்கப் படும். இந்தாண்டு மார்ச் 22-ந் தேதி முதல் இறுதிப் போட்டி வரை அனைத்து போட்டிகளையும் ரேஸே் கோர்ஸ் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம் என கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • விழாவை முன்னிறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருக்கிறது.
    • எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன.

    லக்னோ:

    அயோத்தி ராமர் கோவிலில் வருகிற 22-ந்தேதி கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் விழா நடைபெற உள்ளது.

    பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி நாடு முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு இருக்கிறது.

    இதையடுத்து அயோத்தியில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல 44 நுழைவாயில்கள் இருக்கின்றன.

    உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் என்ற சிறப்பை இந்த ஆலயம் பெற இருக்கிறது. இதை இந்திய மக்கள் அனைவரிடமும் கொண்டு செல்வதற்காக நேரடி ஒளிபரப்புக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதற்காக 6 கோடி பேரை பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்துள்ளது. அவர்கள் ஒவ்வொரு எம்.பி. தொகுதிகளிலும் உள்ள பூத் கமிட்டியினருடன் ஆலோசனை செய்து அயோத்தி நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகளை தொடங்கி உள்ளனர்.

    அயோத்தியில் விழா நடைபெறும் அதே சமயத்தில் தங்கள் ஊர்களில் இருந்தபடியே கிராம மக்கள் அந்த விழாவை கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அகன்ற திரைகளில் அந்த நேரடி ஒளிபரப்பு காட்டப்படும். இதற்காக அகன்ற திரைகளை வாட கைக்கு எடுக்க பாரதிய ஜனதா மேலிடம் அறிவுறுத்தி உள்ளது.

    • பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
    • தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    நாடு முழுவதும் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய ரெயில்வே அமைச்சகம் தொடங்கி உள்ளது. இதன் ஒரு அங்கமாக அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற திட்டத்தின் கீழ் 1309 ரெயில் நிலையங்களை உலக தரத்திலான வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது.

    அந்த வகையில் இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரெயில் நிலையங்கள் என்ற பெயரில் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு. சேலம், தென்காசி உள்பட 18 ரெயில் நிலையங்கள் மற்றும் புதுச்சேரி ரெயில் நிலையம், கேரளா மாநிலத்தில் 5, கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு என 25 ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    மேற்கூறிய ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணியை இன்று காலை டெல்லியில் இருந்து காணொளி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

    இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் மெகா திரையில் அடிக்கல் நாட்டு விழா நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டன.

    அதன்படி தஞ்சை ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இது ரெயில்வே நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மெகா திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டன.

    பிரதமர் மோடி தொடங்கி வைத்ததும் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த திட்டத்திற்கான கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கல்யாண சுந்தரம், மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், பொன்மலை ரெயில்வே பணிமனை முதன்மை மேலாளர் ஷியாம்தர் ராம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் , மாநகராட்சி கவுன்சிலர் மேத்தா, மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகள், காவிரி டெல்டா ரயில்வே பயணிகள் சங்கம் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவகுமார், பொருளாளர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சை ரெயில் நிலையத்துக்கு மட்டும் மேம்படுத்தும் பணிக்காக முதல் கட்டமாக ரூ. 23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தஞ்சை ரெயில் நிலையம் முற்றிலும் சீரமைக்கப்படுகின்றன.

    தஞ்சை ரெயில் நிலையத்தில் ஆவின்பாலகத்திற்கு அருகே நவீன வசதிகளுடன் கழிவறை வசதி செய்யப்பட உள்ளது. தற்போது இருக்கக்கூடிய பார்சல் அலுவலகம் ரெயில் நிலையத்தின் பின்புற பகுதிக்கு மாற்றப்பட இருக்கிறது. பார்சல் அலுவலகம் இருந்த இடத்தில் பயணிகள் காத்திருப்போர் அறை குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட இருக்கிறது. கூடுதலாக உயர்நிலை நடைபாலம்,

    நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நடைமேம்பால மேற்கூரை, நகரும் படிக்கட்டுகள், மின் வினியோக வசதிகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்படுகின்றன. தஞ்சை ரயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும்
    • 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி தமிழ கத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழா குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வரும் பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப் பட்டுள்ளது.

    தொலைக்காட்சியில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒளிரப்பு நேற்று மாலை முதல் தொடங்கியது. இதனை குமரி மாவட்டதிருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார். அய்யப்பன், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண் ணன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வரு கின்ற சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் தல வர லாற்றை எடுத்துக் கூறும் வகையில் கோவில் பணியா ளர்கள் 3 பேரை சுற்றுலா வழி காட்டியாகவும் திருக்கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கிடையே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    • தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி ஒளிபரப்பாகிறது.
    • 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு.

    திருப்பூர் :

    ஆதிமூல சற்குரு ஸ்ரீ வீரபோக வசந்தராயர் மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் நாளை 31ந் தேதி காலை 7 மணிக்கு சன் டி.வி.யில் தெய்வ தரிசனம் நிகழ்ச்சியில் திருப்பூர் மகாலட்சுமி ஆலயத்தின் சிறப்புகள் பற்றி சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அனைவரும் இதனை பார்த்து சுவாமிகளின் திருவருளையும் அம்பாளின் பேரருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. 

    ×