search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் வரலாறு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு
    X

    சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் வரலாறு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு

    • கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும்
    • 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்படி தமிழ கத்தில் உள்ள சிறப்புமிக்க கோவில்களின் தல வரலாற்றை பக்தர்கள் அறிந்துக் கொள்ளும் வகையில் தமிழ்மொழியில் மொழி பெயர்த்து கோவிலின் சிறப்பு மற்றும் திருவிழா குறித்து பக்தர்கள் அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த அடிப்படையில் குமரி மாவட்டத்தில் உள்ள பிரச்சித்தி பெற்ற கோவிலாக திகழும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் தல வரலாற்றை கோவிலுக்கு வரும் பக்தர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் ரூ.8½ லட்சம் செலவில் 60 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகள் கோவில் முகப்பில் மற்றும் நவக்கிரக மண்டபம் அருகில் பெரிய அளவில் வைக்கப் பட்டுள்ளது.

    தொலைக்காட்சியில் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் மற்றும் தேரோட்டம் குறித்த அரிய தகவல்கள் சுமார் 30 நிமிடம் ஓடும் காட்சிகள் அமைக்கப் பட்டுள்ளது. 25 பக்தர்கள் அமர்ந்து அறிந்து கொள்ளும் வகையில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒளிரப்பு நேற்று மாலை முதல் தொடங்கியது. இதனை குமரி மாவட்டதிருக் கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் பார் வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் தேவசம் பொறியாளர்கள் ராஜ்குமார். அய்யப்பன், திருக்கோவில் அலுவலக கணக்கர் குற்றாலிங்கம், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண் ணன் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

    மேலும் கோவிலுக்கு வரு கின்ற சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் தல வர லாற்றை எடுத்துக் கூறும் வகையில் கோவில் பணியா ளர்கள் 3 பேரை சுற்றுலா வழி காட்டியாகவும் திருக்கோவில் நிர்வாகம் நியமித்துள்ளது. இதற்கிடையே திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் செலவில் ஆன்மிக புத்தக நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டு அதற்கான பணிகளும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.

    Next Story
    ×