search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் 

    திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    திருப்பூர்

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது மத்திய அரசு பொய் வழக்கு போட்டதை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி, வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் அனைத்து தரப்பு நிர்வாகிகள், மாநகர் நிர்வாகிகள்மற்றும் இளைஞர் காங்கிரஸ் , சிறுபான்மை பிரிவு, விவசாயப் பிரிவு , ஐஎன்டியூசி ,தொழிற்சங்க பிரிவு, மனித உரிமை துறை, சிவாஜி மன்றம், எச்எம்எஸ்., நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×