search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில்"

    • கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது.
    • அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு 45,477 கோவில் பணியாளர்களுக்கான கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சியில் அமைக்கப்படாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவினை அமைத்து, அதன் உறுப்பினர்களாக ஆதீன பெருமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் இக்குழுவின் முதல் கூட்டமும், அதனைத் தொடர்ந்து 27.2.2024 அன்று 2-வது கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக்குழு தீர்மானங்களை நிறை வேற்றிடும் வகையில் இன்று 45,477 கோவில் பணியாளர்களுக்கு கட்டணமில்லா முழு உடற்பரிசோதனைத் திட்டம் சென்னை அப்பல்லோ மருத்துவமனை மூலம் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக சென்னை மண்டலம் – 1 மற்றும் 2 ஐ சேர்ந்த 1,277 கோவில் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் முழு உடற்பரிசோதனை திட்டத்தில் முழு ரத்த பரிசோதனைகள், கண் பரிசோதனை, எக்ஸ்ரே, இ.சி.ஜி., எக்கோ, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளும், சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

    இம்முகாம் 3 நாட்கள் நடை பெறும். இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது. இந்த அரசு பொறுப்பேற்றபின், காலிப்பணியிடங்களை நிரப்புதல், உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்குதல் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 379 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதோடு, கருணை அடிப்படையில் துறையில் 24 நபர்களுக்கும், கோவில்களில் 108 நபர்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளன.

    மேலும், 713 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கோவில்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளனர். கோவில் பணியாளர்களுக்கான முழுஉடல் பரி சோதனை முகாம் சென்னை மண்டலத்தை தொடர்ந்து 6 மாத காலத்திற்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு பணியாளர்களின் நலன் காக்கப்படும்.

    இவ்வாறு அவா் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், ஹரி பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.
    • செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இப்போது இல்லை.

    ஓ.பன்னீர் செல்வத்தை முழுமையாக ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து உள்ளார்.

    அ.தி.மு.க.வில் மீண்டும் சேருவதற்காக ஓ.பி.எஸ். எடுத்த அனைத்து முயற்சிகளுமே தோல்வியில் முடிவடைந்துள்ளன.

    இதனால் அவரது அரசியல் எதிர்காலம் என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. இதனால் எந்த வழியில் பயணிப்பது என்பது தெரியாமல் ஓ.பி.எஸ். தவித்து வருகிறார். அவரது ஆதரவாளர்களும் திசை தெரியாமலேயே அவருடன் பயணித்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் சிறப்பாக அமையவும், தனக்கு முன்னால் நிற்கும் தடைகள் தவிடு பொடியாகவும் குலதெய்வம் கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பக தோப்பு வனப்பகுதியில் ஓ.பி.எஸ். குல தெய்வமான வனப்பேச்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில்தான் தனது அரசியல் முடிவுகள் பலவற்றை அவர் எடுத்துள்ளார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பங்கள், பிரச்சினைகளின் போதும் குலதெய்வமான வனப் பேச்சியம்மனை வழிபட்டு விட்டுத்தான் தனது செயல்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கியுள்ளார்.

    அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற்போதைய அரசியல் சூழல் சாதகமானதாக இல்லை. அடுத்த கட்டமாக என்ன செய்வது?

    அரசியல் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்வது? என்பது போன்ற எந்த முடிவுகளையும் அவரால் எடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் அதிகாரப்பூர்வமான ஒரு கட்சி அவரிடம் இல்லை. எனவே அரசியல் களத்தில் தடுமாற்றமான நிலையிலேயே ஓ.பி.எஸ். உள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பக்கம் சாய முடிவு செய்து உள்ள ஓ.பி.எஸ். தாமாகவே முன்வந்து பா.ஜனதா ஆத ரவு கோஷத்தை எழுப்பி வருகிறார். ஆனால் பா.ஜ னதா தலைவர்களின்

    காதுகளுக்கு போய் இன்னும் அது எட்டாமலேயே உள்ளது.

    இதனால் பாரதிய ஜனதா கட்சி ஓ.பன்னீர்செல்வத்தை தங்களது கூட்டணியில் இணைத்துக் கொள்ளுமா? இல்லை அவரை கண்டு கொள்ளாமல் விட்டு விடுமா? என்பதும் மிகப் பெரிய கேள்வியாகவே உருவெடுத்துள்ளது.

    இதற்கெல்லாம் விடை காணும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் குலதெய்வ கோவிலான வனப் பேச்சியம்மனுக்கு பொங்கல் வைத்து ஓ.பி.எஸ். பூஜைகளை செய்து உள்ளார். அப்போது கோவிலில் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளார்.

    அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓ.பி.எஸ். குலதெய்வ வழிபாடு அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு.
    • குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் மாசி மாத சிவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் தங்களது குலதெய்வ கோவிலில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.

    இதற்காக நிலக்கோட்டையில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா திடியன் மலை அடிவாரத்தில் உள்ள வாலகுருநாதன் கோவிலுக்கு பாரம்பரியமாக இரட்டை மாட்டு டயர் வண்டியில் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து புறப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் வாண வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சாமிபெட்டி அழைப்புடன் நிலக்கோட்டை, மெயின் பஜார், அணைப்பட்டி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக வந்து கருப்புசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

    பின்னர் ஊர்வலம் தொடங்கி மாட்டு வண்டியில் கிளம்பிச் சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    எங்கள் முன்னோர் காலத்தில் இருந்து 7 வருடத்திற்கு ஒருமுறை மாட்டு டயர் வண்டி மூலமாக குடும்பம் குடும்பமாக அனைவரும் மாசிமகா சிவராத்திரி விழாவுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் நாங்கள் சலங்கை கட்டிய மாட்டுடன் பாரம்பரிய முறையில் செல்கிறோம்.

    இன்றைய நாகரீக காலத்தில் படித்தவர்கள் இதுபோன்ற வண்டிகளில் ஏறுவதற்கு தயக்கம் காட்டுவதுண்டு. ஆனால் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாசி திருவிழாவில் எந்தவித தயக்கமும் இன்றி ஒற்றுமையுடன் மாட்டு வண்டிகளில் செல்கிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான இந்த பயணம் வருங்கால சந்ததியினருக்கும் வழிகாட்ட வேண்டும் என்றனர். இதனை வழிநெடுகிலும் பொதுமக்கள் மிகுந்த ஆச்சரித்துடன் கண்டு ரசித்தனர்.

    • இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
    • பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பெங்களூர்:

    கர்நாடகாவில் கடந்த 12-ந் தேதி முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 16-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதம் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலைய அறக்கட்டளை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதமும், 1 கோடிக்கு மேல் வருவாய் வரும் கோவில்களில் 10 சதவீதத்தையும் வரியாக வழங்க வேண்டும் என்ற அம்சம் இடம் பெற்று இருந்தது.

    இதற்கு பா.ஜ.க. வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் வருவாயை அரசு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மேல்சபையில் அமைச்சர் ராமலிங்க ரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது.

    மேல்சபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மசோதா தோல்வி அடைந்ததால் முதல்-மந்திரி சித்தராமையா அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

    • கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது.
    • வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, க.ரவிச்சந்திர பாபு மற்றும் ஆர்.மாலா ஆகி யோர் முன்னிலையில் 8 கோவில்ளுக்கு காணிக்கை யாக வரப்பெற்ற 130 கிலோ 393 கிராம் எடையுள்ள பல மாற்று பொன் இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் ரவி ரஞ்ஜனிடம் ஒப்படைத்தார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞரின் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பயன்பாட்டிற்கு இயலாத பொன்னினங்களை உருக்கி வங்கியில் முதலீடு செய்து அதன்மூலம் பெறப்படுகின்ற வட்டி தொகையை அந்தந்த கோவிலுக்கு அடிப்படை தேவைகள் மற்றும் திருப்பணிகளுக்கு செலவிடப்பட்டு வந்தது.

    கடந்த அதிமுக ஆட்சியில் இத்திட்டம் முழுமையாக செயலிழந்து இருந்தது. தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல கோவில்களில் நூற்றுக்கணக்கான கிலோ கிராம் எடையுள்ள பலமாற்று பொன்னினங்கள் பயன்படுத்த இயலாமல் கிடப்பதை முதலமைச்சரின் கவனத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை கொண்டு சென்றவுடன், கலைஞர் ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த உத்தர விட்டதற்கிணங்க ஏற்கனவே பெரியபாளையம், இருக்கன்குடி, திருவேற்காடு, மாங்காடு, திருச்செந்தூர் ஆகிய 5 கோவிலில் இருந்து பலமாற்று பொன்னினங்கள் மும்பையில் இருக்கின்ற மத்திய அரசுக்கு சொந்தமான உருக்காலையில் உருக்கப்பட்டு 344 கிலோ 334 கிராம் எடை கொண்ட சுத்தத் தங்கம் கிடைக்கப் பெற்றவுடன் அதனை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததில் வட்டியாக ஆண்டிற்கு ரூ.4.31 கோடி தற்போது கிடைக்கின்றது. இந்த வருவாயை அந்தந்த கோவில்களின் திருப்பணிக்கும், பக்தர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்தி வருகின்றோம்.

    மேலும், இந்து சமய அற நிலையத்துறை வரலாற்றில் எந்த ஆட்சியிலும் மேற் கொள்ளப்படாத வகையில் திருத்தேர்களை செப்பனிடுதல், புதிய திருத்தேர்கள் உருவாக்குதல், திருக்குளங்களை புனரமைத்தல், பசுமடங்களை மேம்படுத்துதல் போன்ற அரும்பெரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்து கோவில்களை வைத்து அரசியல் செய்யலாம் என்பவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சி இருக்கின்றது.

    திருவொற்றியூர் கோவிலில் புளியோதரை கெட்டுப்போன விவகாரம் எங்கள் கவனத்திற்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட அலுவலரை உடனடியாக விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறோம். தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக அந்த பிரசாத கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு, நல்ல தரமான உணவு தயாரிக்கும் புதிய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். சிறு குறைகள் இருந்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக துறையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டவுடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கின்ற பணியை இந்து சமய அறநிலைத்துறை பார பட்சமின்றி மேற்கொள்ளும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.
    • பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கண்ணகுருக்கை மேல் நாச்சிப்பட்டு பகுதியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் கோவிலில் தரிசனம் செய்து வந்தனர்.

    இக்கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, வரவு செலவு சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.

    இதன் காரணமாக உண்டியல் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் திருவிழாவும் நடத்தப்படவில்லை. கோவில் மட்டும் தொடர்ந்து கிராம மக்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் செங்கம் தாசில்தார் முருகன் தலைமையில், பாச்சல் போலீசார் முன்னிலையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

    தொடர்ந்து மீண்டும் கோவில் திருவிழா நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

    7 ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாததால் அதிலிருந்த பெரும்பாலான ரூபாய் நோட்டுகள் மக்கி நிறம் மாறியதோடு கிழிந்திருந்தது.

    மேலும் 2016-ம் ஆண்டு செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், சமீபத்தில் செல்லாததாக அறிவித்து மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்ட ரூ.2000 நோட்டுகள் சில இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்டியலில் இருந்து சேதமடையாமல் இருந்த புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறைகள் மட்டுமே எண்ணப்பட்டது.

    மேலும், பழைய நோட்டுகளை வங்கியில் மாற்ற ஊர் மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    7 ஆண்டுகளாக இருதரப்பு பிரச்சினையால் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்படாமல் அதிலிருந்த பணம் வீணானது அப்பகுதி மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

    • கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.
    • சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற பிரம்ம ராம்பா சமேத மல்லிகார்ஜூன சாமி கோவில் உள்ளது.

    12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.

    ஐதராபாத்தை சேர்ந்த வேணுகோபால் என்ற பக்தர் தனது குடும்பத்துடன் ஸ்ரீசைலம் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரையை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

    அவரது வாயில் கடினமான பொருள் சிக்கியது. பின்னர் வாயில் சிக்கிய பொருளை எடுத்துப் பார்த்தார். அப்போது எலும்பு துண்டு இருந்தது.

    புளியோதரையில் இறைச்சி துண்டுகள் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வேணுகோபால் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் செய்தார். கோவில் புளியோதரையில் இறைச்சி துண்டு எப்படி வந்தது என கோவிலில் சமையல் செய்யும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர்.
    • கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பூமிரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் கோவிலில் சினிமா பாடல் ஒலிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரிடம் தட்டி கேட்டனர். இதையடுத்து 2 தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்படவே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மோதலில் ஈடுபட்ட 2 தரப்பை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு ஒருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    மோதல் காரணமாக தொடர்ந்து பதற்றம் நீடித்து வரவே மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி தலைமையில் இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இருப்பினும் இரு தரப்பினரும் மீண்டும் மோதலில் ஈடுபடாமல் இருக்க வேண்டி முன்எச்சரிக்கையாக போலீசார் பூமிரெட்டிபட்டி கிராமத்தில் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • வருடந்தோறும் ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது.
    • அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள வெண்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில்


    கடந்த ஆறு வருடங்களாக மூலஸ்தான அமையவிருக்கும் இடத்தில் வருடந்தோறும் ஜெய் ப்ரத்யங்கிராவின் லட்ச மூலமந்திர ஹோமம் நடைபெற்று வந்தது, தற்போது விக்ரஹ ப்ரதிஷ்டா வைபவ பெருவிழவை ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகளின் திருக்கரங்களால் விசேஷ மஹா ஹோமங்கள் செய்வித்து ப்ரதிஷ்டா வைபவ பெருவிழா நடைபெற்றது.


    வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழா, விசேஷ மஹா பூர்ணாஹுதிக்கு பின் மூலஸ்தான, விக்ரஹதிற்க்கு கலசாபிஷேகம் செய்யப்பட்டது.


    விழாவில் முக்கியஸ்தர்களும், பல்வேறு இடங்களில் உள்ள ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்கள் கலந்துகொண்டு, அன்னை ஜெய் ப்ரத்யங்கிரா அருளையும், குருவின் ஆசியும் பெற்றனர்.

    • ரஷிய நாட்டை சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.
    • கோவிலின் பிரகாரத்தில் 30 ரஷிய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர்.

    ஆந்திர மாநிலத்தில் புகழ்பெற்ற காளகஸ்தி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சிறந்த ராகு-கேது ஸ்தலமாக விளங்குகிறது.

    இக்கோவிலில் ரஷியநாட்டை சேர்ந்த 30 பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். இன்று காலையில் அங்கு நடந்த ராகு-கேது பூஜையில் பயபக்தியுடன் கலந்து கொண்டனர்.


    இக்கோவிலின் பிரகாரத்தில் 30 ரஷிய ஆண்-பெண்கள் வரிசையாக தரையில் அமர்ந்தனர். அதைத்தொடர்ந்து மந்திரங்கள் ஓதப்பட்டது. அப்போது பயபக்தியுடன் அவர்கள் வழிபாடு செய்தனர்.

    பூஜையின் போது ரஷிய பக்தர்கள் பூக்கள், பழங்கள், தீப விளக்குகள் வைத்து வழிபாடு செய்த நிகழ்ச்சியை கோவிலுக்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.

    மேலும் இந்த பூஜையில் பங்கேற்ற ரஷிய பக்தர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



    • தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட 15-வது வார்டு மங்களக்கரை புதூரில் வீரசென்னியம்மன் கோவில் உள்ளது.

    கெண்டேபாளையம், மருதூர், ராமகேவுண்டன் புதூர், கீரணத்தம், கீரணத்தம் புதுப்பாளையம் உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    புரட்டாசி மாதம், மார்கழி மாதங்களில் இந்த கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த நிலையில் இந்த கோவில் முன்பு தென்னை ஓலையில் பந்தல் அமைத்து அதன்மேல் தகர சீட் அமைக்கப்பட்டிருந்து.

    இன்று அதிகாலை 2 மணியளவில் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த பந்தலில் தீ பற்றி மள, மளவென எரிந்து கொண்டிருந்தது. தென்னை ஓலைகள் அனைத்தும் எரிந்து இதில் சேதமாகின. இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் விரைந்து சென்று தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


    மேலும் சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

    போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் கேன் ஒன்று கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் திறந்து பார்த்த போது பெட்ரோல் வாசனை வந்தது. யாரோ மர்மநபர்கள் அதிகாலை நேரத்தில் பெட்ரோலை கொண்டு வந்து ஊற்றி கோவில் பந்தலுக்கு தீ வைத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் கோவில் பந்தலுக்கு தீ வைத்த மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காரமடை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×