search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்கெட்"

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
    • பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

    பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.

    இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.

    வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.

    • மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.
    • வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    ராயபுரம்:

    சென்னை, காசிமேடு, நொச்சிக்குப்பம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் கடந்த சில நாட்களாக மீன் விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. எண்ணூர் பகுதியில் கடலில் எண்ணை கழிவு கலந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதற்கு முன்பு ஒருமுறை கடலில் கச்சா எண்ணெய் கலந்த போதும் விற்பனை குறைந்து காணப்பட்டது. அப்போது மீன் உண்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பிறகு விற்பனை அதிகரித்தது. ஆனால் தற்போது அது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் பொதுமக்கள் பலர் மீன் வாங்க தயங்குகிறார்கள் என்று மீன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருவதாலும் மீன்வரத்து மற்றும் விற்பனை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் மீன் விலையும் கடந்த சில நாட்களாக கடுமையாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் காசிமேடு மீன் பிடி துறைமுகத்துக்கு 200 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து இன்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். ஞாயிற்றுக்கிழமையான இன்று கிருத்திகை மற்றும் பிரதோஷம் என்பதால் மீன் வரத்து குறைவாகவே இருந்தது. மேலும் மீன்கள் விலையும் மிக குறைவாக காணப்பட்டது. அதே நேரத்தில் இன்று மீன் வாங்க அதிக கூட்டம் காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, சீலா, இறால், நண்டு போன்றவை கடந்த வாரத்தை விட இன்று விலை மிக குறைவாக விற்கப்பட்டது.

    கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.1,200-க்கு விற்ற வஞ்சிரம் மீன் இன்று ரூ.350 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்கப்பட்ட வவ்வால் இன்று ரூ.200-க்கு விற்பனையானது. ரூ.500-க்கு விற்கப்பட்ட சங்கரா ரூ.100-க்கும், ரூ.450-க்கு விற்கப்பட்ட இறால் ரூ.200-க்கும், ரூ.600-க்கு விற்கப்பட்ட சீலா ரூ.300-க்கும், ரூ.300-க்கு விற்கப்பட்ட நண்டு ரூ.80 முதல் 90-க்கும் விற்கப் பட்டன. இந்த நிலையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் நாளை மீன்வரத்தும் அதிகமாக இருக்கும், மேலும் மீன் விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    • மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
    • சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழராஜவீதியில் உள்ள நிக்கல்சன் கூட்டுறவு வங்கி அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார்.

    மாநில மாணவரணி செயலாளர் நல்லதுரை, செயற்குழு உறுப்பினர் விருதாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில், தஞ்சை மாநகராட்சி 15 மற்றும் 25 ஆகிய வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கீழ்அலங்கம் பகுதியில் உள்ள மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும்.

    தெற்குவீதி, கீழவீதி, கீழ்அலங்கம், கொண்டிராஜபாளையம், ஏ.ஒய்.ஏ.நாடார் ரோடு, ராவுத்தர்பாளையம், டவுன் போலீஸ் நிலையம் ரோடு ஆகிய இடங்களில் மழைநீர் வடிகால் அமைத்து தர வேண்டும்.

    சாமந்தான் குளத்தில் முறையாக தண்ணீர் விட வேண்டும்.

    அனைத்து சந்துகளிலும் சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இதில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமதாஸ், இலக்கிய அணி செயலாளர் ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் செந்தில், ஆர்.செந்தில் பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மார்க்கெட்டுகளில் பூஜை பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    • இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வருகிறார்கள்.

    மதுரை

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை மார்க் கெட்டுகளில் காய்கறி மற்றும் பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டா டப்பட்டு வருகிறது. மதுரை யிலும் வழக்கமான உற்சா கத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    மதுரை பகுதியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில் களிலும் விநாய கருக்கு சிறப்பு படையல் செய்து பூஜைகள் செய்யப் பட்டு வருகிறது. இதை யொட்டி விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் திரண்டு உள்ளனர்.

    இதற்காக ஒவ்வொரு மார்க்கெட்டுகளிலும் வழக்கத்தைவிட கூடுதலாக கடைகள் அமைக்கப்பட்டுள் ளன. மேலும் முக்கிய சாலை களின் இருபுறங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான அவல், அரிசி பொறி, பொறிகடலை, வாழை கன்றுகள், அருகம் புல் மாலை, எருக்கலை மாலை மற்றும் பூஜை பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன.

    பழ மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழங்களையும் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருகிறார்கள். இதற்காக வழக்கத்தை விட மதுரை மார்க்கெட்டுகளில் அதிக அளவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்ப னைக்கு வந்துள்ளன. மதுரை காய்கறி மார்க்கெட் களில் காய்கறிகளை வாங்க வும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள்.

    இதனால் நாட்டு காய்கறி களான தக்காளி, கத்தரி, வெண்டை, புடலை, சுரைக் காய் உள்ளிட்ட காய்கறிகள் வழக்கமான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற காய்கறி களும் சிறிதளவு விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அதிக ஆர்வத்துடன் காய் கறிகளை வாங்கி வரு கிறார்கள்.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் குறைந்துள்ளன. விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரை காய்கறி மார்க் கெட்டுகளில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால் வியாபாரம் களை கட்டி உள்ளது.

    இதன் காரணமாக பூஜை பொருட்கள்,பழங்களின் விலைகளும் சற்று அதி கரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    பூ -சிலை விற்பனை அமோகம்

    மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை 800 ரூபாய்க்கும், பிச்சி, முல்லை பூக்கள் 500 ரூபாய்க்கும் மற்ற பூக்கள் வழக்கமான விலை யிலும் விற்பனை செய்யப் பட்டு வருகின்றன. பூக்களை வாங்கவும் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகி றார்கள். விநாயகர் சதுர்த்திக்காக வீடுகளில் வைத்து வழிபாடு செய்வ தற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் கண்கவர் வண்ணங்களிலும், வடிவங்களிலும் முக்கிய மார்க்கெட்டுகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    களிமண்ணால் செய்யப்பட்ட இந்த விநாயகர் சிலைகளை வாங்க பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி வருவதால் மதுரையில் விநாயகர் சதுர்த்தி விழா களைகட்டி உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
    • செவ்வாழை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய காய்கறி சந்தையாக பாவூர்சத்திரம் காமராஜர் காய்கறி மார்க்கெட் விளங்கி வருகிறது.

    இந்த தினசரி சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தென்காசி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

    மேலும் போதிய தண்ணீர் இல்லாமல் வாழை விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், உள்ளூர் வரத்து இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார் மற்றும் வாழை இலைகள் பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    வாழைத்தார்களில் ரோபஸ்டோ, நாடு, கோழிக்கூடு ஆகிய ரகங்களின் விலையானது ரூ.150 முதல் ரூ.300 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 மடங்காக விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று செவ்வாழை ஒரு கிலோ ரூ.40 முதல் 45 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.70 முதல் ரூ.75 ஆக விலை உயர்ந்துள்ளது. வாழை இலை கட்டுகளின் விலையும் இரு மடங்காக உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், பொதுமக்களும் அதன் விலை ஏற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • தக்காளி ரூ.20-க்கு விற்பனை
    • பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த மாத தொடக்கத்தில் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற் பனை செய்யப்பட்டது.

    தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு நட வடிக்கை மேற்கொண்டது. ரேஷன் கடைகள் மூலமாக வும் தக்காளி விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் தக்காளியின் உற்பத்தி குறைவாக இருந்ததால் விலை அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் விலை படிப் படியாக குறைய தொடங்கி உள்ளது.

    குமரி மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப் பட்டது. உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அடியோடு நின்றதால் விலை உயர்ந்து காணப்பட்டது. பெங்களூரில் இருந்து மட்டுமே தக்காளி விற்ப னைக்காக கொண்டுவரப் பட்டது.

    தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டதையடுத்து பொதுமக்கள் தக்காளி பயன்பாட்டை குறைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நெல்லை மாவட்ட பகுதி களில் இருந்தும் தக்காளி விற்பனைக்குவர தொடங்கி யது. அதிகளவு தக்காளி விற்பனைக்கு வந்ததையடுத்து விலை குறைய தொடங்கியது.

    ஓசூர், பெங்களூர் பகுதி களில் இருந்தும் அதிகளவு தக்காளி தற்பொழுது விற்பனைக்கு வருகிறது. இதனால் விலை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.40 ஆக குறைந்தது. இந்த நிலையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்கப்பட்டது. 25 கிலோ எடை கொண்ட தக்காளி பாக்ஸ் ரூ.400-க்கு விற்பனையானது.

    இதேபோல் இஞ்சியின் விலையும் குறைய தொடங்கியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ரூ.280 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று ரூ.150 ஆக குறைந்துள்ளது. இதேபோல் கேரட், பீன்ஸ், கத்தரிக்காய், மிளகாய் விலையும் குறைந் துள்ளது.

    நாகர்கோவில் மார்க்கெட்டில் விற்பனையான காய்கறி களின் விலை விவரம் வருமாறு:-

    தக்காளி ரூ.20, முட்டை கோஸ் ரூ.25, காலிப்ளவர் ரூ.25, கத்தரிக்காய் ரூ.30, வழுதலங்காய் ரூ.50, பீன்ஸ் ரூ.60, கேரட் ரூ.70, பீட்ரூட் ரூ.45, மிளகாய் ரூ.70, பல்லாரி ரூ.35, சிறிய வெங்காயம் ரூ.75, சேனை ரூ.70, இஞ்சி ரூ.150, வெள்ளரிக்காய் ரூ.20, முருங்கைக்காய் ரூ.25, புடலங்காய் ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.35, வெண்டைக்காய் ரூ.30.

    காய்கறி விலை குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உள்ளூர் பகுதிக ளிலிருந்தும் அதிகளவு தக்காளி வந்து கொண்டி ருப்பதால் விலை சரிந்துள்ளது. தக்காளி விலை அதிகமாக இருந்த போது பொதுமக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து வந்தனர். தற்பொழுது பெண்கள் வழக்கம்போல் தக்காளி வாங்க தொடங்கியுள்ளனர்.

    கிலோ கணக்கில் பெண்கள் தக்காளியை வாங்கி செல்கிறார்கள். இதேபோல் மற்ற காய்கறி களும் அதிக அளவு தற்போது விற்பனைக்கு வருவதால் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்ட விலையை விட தற்பொழுது விலை சற்று குறைந்துள்ளது.

    தற்பொழுது திருமண சீசன் உள்ள நிலையிலும் வரத்து அதிகரித்து காணப்படுவதால் விலை குறைந்து காணப்படுகிறது என்றார்.

    • கடந்த வாரம் வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • விலை அதிகரிப்பால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார், வாழை இலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் வரை 200 இலைகள் அடங்கிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்து ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கோழிக்கூடு, நாடு, மட்டி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த வாழைத்தார்கள் விலையும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    வாழைத்தார் மற்றும் வாழை இலைகளின் விலை அதிகரிப்பால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது காற்று சீசன் தொடங்கி உள்ளதால் வாழைத்தார் மற்றும் வாழை இலை களின் விலையானது அதிகரித்து ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்தது
    • பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக தக்காளி யின் விலை ஏறுமுக மாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தி லும் தக்காளி யின் விலை அதிகமாக உள்ளது.

    தக்காளியின் விலை அதிகரித்து வருவதையடுத்து அதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண் டது. ரேஷன் கடைகளில் தக்காளி சப்ளை செய் யப்பட்டு வந்தது. நாகர்கோவில் நகரில் ஒரு சில ரேசன் கடைகளில் சில நாட்கள் மட்டுமே தக்காளி சப்ளை செய்யப் பட்டு வந்த நிலையில் தற்போது அங்கு தக்காளி சப்ளை செய்யப் படவில்லை. நாகர்கோவில் மார்க்கெட்டு களில் தக்காளி யின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது.

    ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை உயர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.10 உயர்ந்து ரூ.140 ஆனது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் கிலோ ரூ.20 உயர்ந்து ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் வெளியூர்களில் இருந்து வரும் தக்காளிகளின் வரத்து குறைவாக உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் இருந்து வழக்கமாக வரக்கூடிய தக்காளியை விட மிக குறை வான அளவில் தக்காளிகள் விற்பனைக்கு வருகிறது.

    உள்ளூர் பகுதிகளில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர். பூண்டு விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ. 180-க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.200 ஆக உயர்ந்தது. இன்று மேலும் ரூ.20 உயர்ந்து கிலோ ரூ.220-க்கு விற்பனை ஆனது. கேரட், பீன்ஸ் விலைகள் கடந்த 2 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது.

    பீன்ஸ் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட் டது. இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட் டில் விற்பனையான காய்கறிகளின் விலை விவரம் வருமாறு:-

    கேரட் ரூ.75, பீன்ஸ் ரூ.100, கத்தரிக்காய் ரூ.50, வழுதலங்காய் ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.30, சேனை ரூ.70, மிளகாய் ரூ.80, தக்காளி ரூ.160, இஞ்சி ரூ.280, பூண்டு ரூ.220, சின்ன வெங்காயம் ரூ.120, தடியங்காய் ரூ.30, பூசணிக்காய் ரூ.30, வெள்ளரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.50-க்கு விற்கப்பட்டது.

    காய்கறி விலை உயர்வால் இல்லத்தரசிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தக்காளியை பொறுத்த மட்டில் அதன் பயன்பாட்டை குறைத்து வருகிறார்கள். முன்பு ஒரு கிலோ தக்காளியை வாங்கி செல்லும் பொதுமக்கள் தற்போது 100 கிராம் தக்காளியை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    • 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கான பைப் பதிக்கும் பணி நடந்ததை தொடர்ந்து அனைத்து ரோடுகளும் பழுத டைந்து காணப்படு கிறது. நகராட்சி சார்பில் ஒவ்வொரு சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் குழித்துறை கோர்ட் முதல் பெருந்தெரு வரை, கழுவன்திட்டை சந்திப்பு முதல் இடத்தெரு வரை, பெருந்தெரு முதல் மீன் மார்க்கெட் வரை, பன்னியாணி முதல் வடக்கு தெரு வரை, வார்டு நம்பர் 13 க்கு உட்பட்ட பன்னியாணி சாலை, சிறியக்காட்டுவிளை சானல் சாலை, இடவிளாகம் மிட்ஸ் அலுவலக சாலை ஆகிய 7 சாலைகள் தார் போட்டு முழுமையாக சீரமைப்பதற்காக ரூ.78 லட்சம் ஒதுக்கப்பட்டது.

    இதைப்போல் 6-வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் 16-ம் வார்டுக்குட்பட்ட சிறிய காட்டுவிளை சாலை, 6-ம் வார்டுக்கு உட்பட்ட மகாதேவர் கோயில் மேட்டு கிராமம் சாலை, 17-ம் வார்டுக்கு உட்பட்ட பன்னியாணி கிளை சாலை, 14-ம் வார்டுக்குட்பட்ட கொல்லங்குளம் வடக்கு தெரு சாலை, 20 ம் வார்டுக்கு உட்பட்ட நந்தன் காடு சாலை, 2ம் வார்டுக்கு உட்பட்ட வள்ளி கோடு அம்பலத்துவிளை சாலை, 6ம் வார்டுக்கு உட்பட்ட அம்மன் கோயில் சாலை, 11 ஆம் வார்டுக்கு உட்பட்ட கண்ணக்கோடு சாலை ஆகிய 8 ரோடுகள் சிமெண்ட் போட்டு சீரமைப்பதற்கு ரூ.68 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    இந்தத் திட்டப் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்த்தாண்டம் மார்க்கெட் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் கட்டப்படுகிறது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மார்த்தாண்டம் பகுதியின் முக்கியமான மைய பகுதி யில்அமைய உள்ளதால் மக்களுக்கு நல்ல முறையில் பயன்படும் விதத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக அழகான நிலையில் வசதியாக அமைக்கப்பட உள்ளது. அனுபவம் வாய்ந்த கட்டடக்கலை பொறியாளர்கள் மூலம் வரைபடம் தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் வணிக வளாகம், வாகன நிறுத்தம், கடைகள் போன்றவை இடம்பெறு கிறது. இதற்கான பணி 2 மாதத்தில் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம், நகராட்சி வழக்கறிஞர் ஷாஜி குமார், கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, அருள்ராஜ், விஜு, ஆட்லின்கெனில், கிள்ளியூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் டி.பி.ராஜன், குழித்துறை நகர திமுக செயலாளர் வினு குமார், குழித்துறை நகர திமுக.இளைஞரணி அமைப்பாளர் ஆசாத் அலி, திமுக நிர்வாகிகள் ஷாஜி லால், ஜீவகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்குட்பட்ட குப்பைகள் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நீண்ட நாட்களாக குவிக்கப்பட்டு வந்தன.

    இதனால் மலைபோல் குவிந்து காணப்பட்ட குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசியது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று நகராட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    இதனை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசைத்தம்பி, ஆணையாளர் ராமதிலகம் முயற்சியால் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

    இந்த குப்பைகள் வெளி மாவட்டங்களுக்கு வாக னங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக ரூ.4 லட்சம் வழங்கப் பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி சார்பில் தற்போது மக்கும் குப்பை. மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படு கிறது. இதனால் மார்க்கெட் பகுதியில் உள்ள நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    • மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
    • தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம்.

    கோவை:

    தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. இதனால் காய்கறிகளின் விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இன்னொருபுறம் ஓட்டல்களில் தக்காளி சட்னி, வெங்காய பொரியல் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது சாப்பாட்டு பிரியர்களை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது.

    கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ளூர் விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    இதுதவிர வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. கோவை மார்க்கெட்டுகளில் விவசாயிகளுக்கு ஏலமுறையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அங்கு விளையும் காய்கறிகளை அறுவடை செய்வதில் விவசாயிகளுக்கு சிரமநிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அவர்கள் மார்க்கெட்டுக்கு விளைபொருட்களை கொண்டு வரவில்லை. இன்னொருபுறம் வெளி மாவடடங்களில் இருந்தும் சரக்கு காய்கறி லாரிகளின் வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் தினந்தோறும் சராசரியாக 110 சரக்கு லாரிகள் காய்கறிகளுடன் வருவது வழக்கம். ஆனால் இங்கு தற்போது 40 லாரிகள் மட்டுமே வந்து செல்கின்றன.

    கோவை காய்கறி மார்க்கெட்களில் உள்ளூர் காய்கறி வரத்து குறைவு, வெளியூர் சரக்கு லாரிகளின் வருகை குறைவு ஆகியவை காரணமாக சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை கிடுகிடுவென அதிகரிக்க தொடங்கியது.

    கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக இருந்தது. ஆனால் தற்போது 120 ரூபாயாக உள்ளது. அதேபோல சின்ன வெங்காயத்தின் விலை முன்பு ரூ.40 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு ரூ.120 ஆக உள்ளது.

    கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழையின் தாக்கம் பெரியஅளவில் இல்லை. எனவே விவசாயிகள் மீண்டும் சாகுபடி பணிகளை தொடங்கி விட்டனர். அதேபோல வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சரக்கு லாரிகளில் காய்கறி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    எனவே கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் விலை சிறிதுசிறிதாக குறைய தொடங்கி உள்ளது. தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒருகிலோ சின்ன வெங்காயம் ரூ.170 ஆக இருந்தது. அதன் விலையில் தற்போது 50 ரூபாய் குறைந்து, ஒருகிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் தக்காளி விலை மட்டும் குறைாமல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. காய்கறி மார்க்கெட்டுகளில் நேற்று வரை ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ.110, ஆப்பிள் தக்காளி ரூ.140 என்ற அளவில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நாட்டு தக்காளியின் விலை ரூ.10 அதிகரித்து தற்போது ரூ.120க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆப்பிள் தக்காளியின் விலையில் மாற்றம் இல்லை.

    கோவை காய்கறி மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்தபோதிலும், தக்காளியின் விலை அதிகரிப்பு பொதுமக்களை கவலைப்பட வைத்து உள்ளது.

    ×