search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பு பணிகள்"

    • ஹாட்ஸ்பாட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிடப்பட்டுள்ளது.
    • தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 14வது வார்டு நேரு வீதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் கடந்த மாதம் 22ந் தேதி உடல் நலம் பாதிப்பால் கோவை அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.பரிசோ தனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட து. அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 7-ந் தேதி இறந்தார்.இதையடுத்து மாநகராட்சி சார்பில், மூதாட்டி குடி யிருந்த பகுதியில் முதல் மண்டல சுகாதார அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வை யில், ஆய்வா ளர் கோகுல்நா தன் தலைமையில் சுகாதார பணியாளர்கள் சுகாதார பணியில் ஈடுபட்டனர். வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சிறப்பு மருத்துவ முகாம் நடத்த ப்பட்டது.யாருக்காவது காய்ச்சல் உள்ளதா என கேட்டு, அவர்களுக்கு பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது. பொது மக்களிடம் கூட்டமாக உள்ள பகுதியில் செல்லும் போது, முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். கைகளை அடிக்கடி கழுவு ங்கள். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை செல்லுங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்தநிலையில் கொரோனா தொற்று பர வலை தடுக்கும் வகை யில், ஹாட் ஸ்பாட் பகுதி களை கண்டறிந்து தடுப்பு நடவடி க்கைகளை மேற்கொள்ள சுகாதார த்துறை தீவிரம் காட்டுகிறது.கடந்த 7மாத ங்களில் இல்லாத வகையில் நாட்டில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்புளூ யன்சா, சுவாச பிரச்னை ஏற்படக்கூடிய பிற நோய் தொற்று, இதற்கு முன் மற்ற காய்ச்சல் பாதிப்பு அதிகமாக பரவிய இடங்க ளை கண்டறிந்து அப்பகுதி களை ஹாட்ஸ்பா ட்டாக தேர்வு செய்து கூடுதல் கண்காணிப்பு பணிகளை முடுக்கி விட உத்தரவிட ப்பட்டுள்ளது.

    இது குறித்து சுகாதாரத்து றை அலுவலர்கள் கூறுகை யில், தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டு, இறப்பை தழுவினால், அதற்கான காரணம் என்ன, இணை நோயா, எப்படி தொற்று வந்தது என்பது குறித்து ஆராயப்படுகிறது. தற்போதைக்கு தொற்று கட்டுக்குள் உள்ளது. கடந்த கொரோனா அலையின் போது ஒன்றுக்கும் மேற்ப ட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்ட பகுதி ஹாட் ஸ்பாட்டாக கருதி, கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்த ப்பட்டுள்ளது. அப்பகுதியில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்ப டுகிறது என்றனர்.

    • டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது
    • கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் 0.3 சதவீதமாக இருந்த தொற்று பரவல் மெல்ல அதிகரித்து, 2.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் தொற்று வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், தொற்று தடுப்பு பணிகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.முதல் கட்டமாக மருத்துவ கல்லூரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோர் தொடர் உடலக்குறைவு இருந்தால் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளதால், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு, 50 படுக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைக்கான வசதிகள் தயாராக உள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்திய பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அறிகுறி இருப்பவர்கள் சந்தேகம் இருந்தால் டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.

    மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் கூட முதல்தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 3லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது.மருத்துவ கல்லூரி, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது தொற்று பாதித்தவரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்களா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

    கடந்த5 மாதங்களாக திருப்பூர் பின்னலாடை தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் கொரோனா பயமின்றி பயணித்துவருகின்றனர். மேலும் தொற்று தடுப்பு வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை.மெல்லமெல்ல கொரோனா தலை தூக்கும்நிலையில்மீண்டும் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நான்காவது அலை உருவாகாமல் தடுப்பது அவசியமாகிறது.

    கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.பின்னலாடை தொழிலாளர் பணிக்கு வரும்போதும், பணி முடித்து வீட்டுக்குச் செல்லும்போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கவேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நிறுவனங்களின் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.அனைவரும் தவறாமல் முக கவசம் அணியவேண்டும். தொழிலாளர்கள் கைகழுவுவதற்காக நிறுவன வளாகத்தில், சோப், தண்ணீர் வழங்கவேண்டும்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தாதோர், தாமதிக்காமல் உடனே தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு பின்னலாடை உற்பத்தி நிறுவனமும், உடனடியாக தொற்று தடுப்பு அம்சங்களை செயல்படுத்தவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு, கொரோனாவின் கொடிய அலைகளிடமிருந்து பின்னலாடை தொழில் வளர்ச்சியை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

    ×