search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு
    X

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருட்டு

    திருப்பூரில் பனியன் வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் முத்தண்ணம் பாளையம் சபரி பிரியா நகரை சேர்ந்தவர் ஸ்ரீநாத். பனியன் வியாபாரி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

    இந்நிலையில் இன்று காலை அவரது வீடு திறக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது வீடுகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன.

    இது குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீநாத்துக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கப்பட்டது. நகை- பணம் வைக்கப்பட்டிருந்ததா? என்று போலீசார் கேட்டபோது நகை- பணம் இருந்தது என்று கூறினார். ஸ்ரீநாத் திருப்பூர் விரைந்துள்ளார். அவர் வந்த பின்னரே திருட்டுபோன நகை- பணம் குறித்து விபரம் தெரியவரும்.

    Next Story
    ×