திருப்பூர் மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்

மாதாந்திர மின்சார பாராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர், பல்லடம், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை,பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் வி.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர், வீரபாண்டி, ஆண்டிப்பாளையம், குமார்நகர், சந்தைப்பேட்டை, பலவஞ்சிபாளையம் ஆகிய துணை மின்நிலைய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் வருமாறு:-

வீரபாண்டி, ஆண்டிப்பாளையம்

வீரபாண்டி துணை மின்நிலையத்திற்குட்பட்ட வீரபாண்டி, பாலாஜிநகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம், (வாய்க்கால்மேடு) குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ.நகர், லட்சுமிநகர், சினனக்கரை, முல்லைநகர், டி.கே.டி.மில்.

ஆண்டிப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட இடுவம்பாளையம், ஆண்டிப்பாளையம், முத்துநகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவாநகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர்,லிட்டில் பிளவர் நகர்.

குமார்நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்குநகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி. நகர், டி.எஸ்.ஆர்.லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம்,என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள்ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம் மற்றும் லட்சுமிநகர்.

சந்தைப்பேட்டை துணை மின்நிலையத்திற்குட்பட்ட அரண்மனைபுதூர், தட்டான் தோட்டம், எம்.ஜி.புதூர், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.நகர், கே.எம்.ஜி. நகர், பட்டுக்கோட்டையார் நகர், திரு.வி.க.நகர், கருப்பகவுண்டம்பாளையம், கோபால்நகர், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகர், கே.வி.ஆர்.நகர், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, பெரியார் காலனி, சபாபதி புரம், வாலிபாளையம், ஊத்துக்குளி ரோடு, யூனியன் மில் ரோடு, மிஷின்வீதி, காமராஜ் ரோடு, புதுமார்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதர்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூர் மெயின் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய பகுதிகள்.

பலவஞ்சிபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட சந்திராபுரம், கரட்டாங்காடு, செரங்காடு, டி.ஏ.பி.நகர், என்.பி.நகர், காளிநாதம்பாளையம், பலவஞ்சிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல்லடம் நாரணாபுரம், பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேடபாளையம், 63வேலம்பாளையம், வலையபாளையம், ஆறுமுத்தாம்பாளையம், நாரணாபுரம், அறிவொளி நகர், சேகாம்பாளையம், ஆட்டையம்பாளையம், தெற்குபாளையம், கல்லம்பாளையம், இந்திராநகர், மங்கலம் ரோடு ஒரு பகுதி, பனப்பாளையம், மாதப்பூர்,கணபதிபாளையம், குங்குமம்பாளையம், சிங்கனூர், பெத்தாம்பாளையம், நல்லா கவுண்டம்பாளையம், மாதேஸ்வரன் நகர், ராயர்பாளையத்தின் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.இந்த தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் ரத்தினகுமார் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com