search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு"

    • 2009-ம் ஆண்டு தேர்தலில் 322 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்களையே பெற முடிந்தது.
    • பா.ஜ.க.வின் 370 என்ற இலக்கு எட்ட கூடியதா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அது மட்டுமின்றி பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசார கூட்டங்களுக்கு செல்லும் போதெல்லாம் 400 இடங்களில் வெற்றி என்பதை ஒரு கோஷமாகவே எழுப்பி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 30 ஆண்டு கால அரசியல் பயணத்தை சற்று ஆய்வு செய்தால் பிரதமர் மோடியின் இலக்கு சாத்தியமாக வாய்ப்பு இருப்பதாக சில அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    1991-ம் ஆண்டு தேர்தலில் 364 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. 120 இடங்களை கைப்பற்றியது. 1996-ல் 321 இடங்களில் போட்டியிட்டு 161 இடங்களையும், 1998-ல் 323 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களையும் கைப்பற்றியது. 1999-ம் ஆண்டு தேர்தலில் 296 இடங்களில் போட்டியிட்டு 182 இடங்களை பெற்றது.

    2004-ம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட பாரதிய ஜனதாவுக்கு 138 இடங்கள்தான் கிடைத்தது. 2009-ம் ஆண்டு தேர்தலில் 322 இடங்களில் போட்டியிட்டு 116 இடங்க ளையே பெற முடிந்தது.

    அதன் பிறகு 2014-ல் மோடி பா.ஜ.க. தலைவராக உயர்ந்ததும் நாடு முழுவதும் மோடி அலை உருவானது. அந்த தேர்தலில் 326 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா 282 இடங்களை வென்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 31.34 சதவீத வாக்குகளை பாரதிய ஜனதா கட்சி பெற்றிருந்தது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 355 இடங்களில் வேட்பாளர்களை களம் இறக்கியது. இதன் காரணமாக பாரதிய ஜனதாவுக்கு 303 இடங்களில் வெற்றி கிடைத்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

    இந்த வரிசையில் பிரதமர் மோடி 370 இடங்களில் வெற்றி என்பதை லட்சியமாக கொண்டுள்ளார். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர்கள் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தடவையும் 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிடுகிறது. நிச்சயம் 300-க்கு மேற்பட்ட இடங்களை பாரதிய ஜனதா பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.

    ஆனால் பெரும்பாலான அரசியல் நிபுணர்கள் பாரதிய ஜனதா கட்சி 370 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்றால் மொத்தம் பதிவாகும் வாக்குகளில் சுமார் 50 சதவீத வாக்குகளை பெற்றால் மட்டுமே சாத்தியம் என்கிறார்கள். இதனால் பா.ஜ.க.வின் 370 என்ற இலக்கு எட்ட கூடியதா? என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    காங்கிரஸ் கட்சி 20 முதல் 25 சதவீத வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. மாநில கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறும். எனவே 370 இடத்தை பெற முடியாவிட்டாலும் கடந்த ஆண்டை விட கூடுதல் சதவீத வாக்குகளை பெற பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.
    • இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாது மலையில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு பல நூற்றாண்டுகளாக பூர்வீக குடிமக்கள் வசித்து வருகின்றனர்.

    ஜவ்வாது மலையில் உள்ள மேல் செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகில் சில புதைகுழிகள் இருப்பதாக தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து தொல்லியல் துறை அதிகாரிகள் நேற்று ஜவ்வாது மலை சென்று ஆய்வு செய்தனர்.

    மேல்செப்பிலி மற்றும் கீழ் செப்பிலி கிராமங்களுக்கு அருகே 100-க்கும் மேற்பட்ட பெருங்கற்கால புதை குழிகள் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

    7.5 மீட்டர் அகலம் 1.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த கற்கால புதை குழிகளை இறந்தவர்கள் உடல்களை புதைக்க பயன்படுத்தி உள்ளனர். மேலும் இறந்தவர்கள் உடலுடன் அவர்கள் பயன்படுத்திய கற்கால கருவிகளையும் சேர்த்து அதில் வைத்து அடக்கம் செய்துள்ளனர்.

    ஒவ்வொரு புதை குழியிலும் அந்த காலத்தில் பயன்படுத்திய கல் ஆயுதங்கள் இருந்தன. பெரும்பாலான புதைகுழிகள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தன.

    இதே போன்ற புதை குழிகள் கிருஷ்ணகிரி மற்றும் கோவை பகுதிகளிலும் ஏற்கனவே காணப்பட்டன.

    இதன் மூலம் இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பூர்வீக குடிமக்கள் இருந்திருக்க வேண்டும் என தொல்பொருள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த புதைகுழிகள் மூலம் ஜவ்வாது மலையில் அகழாய்வு நடத்த முடிவு செய்துள்ளோம் என அவர்கள் கூறினர். 

    • 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது
    • தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி

    'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் சமீபத்தில் உலகளாவிய 'காபி' தரம் மதிப்பீடு குறித்து ஆய்வு நடத்தியது.

    புகழ்பெற்ற 'உலகின் சிறந்த 38 காபிகள்' பட்டியலில் 'கியூபன் எஸ்பிரெசோ' முதலிடம் பெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற தென் இந்திய 'பில்டர் காபி' 2-வது இடத்தை பிடித்தது.

    'கியூபன் எஸ்பிரெசோ' என்பது கியூபாவில் தோன்றிய ஒரு வகை எஸ்பிரெசோ ஆகும். இது வறுத்த காபி கொட்டை,பழுப்பு சர்க்கரை பயன்படுத்தி இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காபி. தென்னிந்தியாவில் பிரபலமாக உள்ள பில்டர் காபி ஒரு பாரம்பரிய காபி.

    தரவரிசையில் உலகின் முதல் 10 இடங்களை பிடித்த காபிகளின் பட்டியல் வருமாறு:-

    1. கியூபா எஸ்பிரெசோ (கியூபா)

    2. தென்னிந்திய காபி (இந்தியா)

    3. எஸ்பிரெசோ பிரெடோ (கிரீஸ்)

    4. பிரெடோ கப்புசினோ (கிரீஸ்)

    5. கப்புசினோ (இத்தாலி)

    6. துருக்கிய காபி (துருக்கி)

    7. ரிஸ்ட்ரெட்டோ (இத்தாலி)

    8.பிராப்பே (கிரீஸ்)

    9. ஈஸ்காபி (ஜெர்மனி)

    10. வியட்நாமிய ஐஸ் காபி (வியட்நாம்)

    • கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக இந்தியர்கள் அதிகம் செலவழிக்கின்றனர்.
    • 11 ஆண்டுக்கு பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், தனிநபர் வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சமீபத்தில் வீட்டு உபயோக செலவின கணக்கெடுப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. 2022-23ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த முடிவு இந்திய குடும்பங்களின் செலவு முறை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிவிக்கிறது.

    சுமார் 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தனி நபர் மாதாந்திர வீட்டு நுகர்வுச் செலவு இரு மடங்கு அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

    சராசரி வீட்டுச் செலவினங்களில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் கல்வி மற்றும் உடல்நலத்தை விட போக்குவரத்து மற்றும் எரிபொருளுக்காக அதிகம் செலவழிக்கின்றன.

    பெரும்பாலான இந்தியர்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், பெட்ரோலுக்கான செலவு பயணக் கட்டணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக இருந்தது.

    நகர்ப்புற குடும்பங்களின் மொத்த மாதாந்திர செலவில் 11.2 சதவீதம் வாகனங்கள் மற்றும் போக்குவரத்திற்காக உள்ளது. அதே நேரத்தில் இந்த எண்ணிக்கை கிராமப்புற இந்தியாவில் 9.5 சதவீதம் ஆக உள்ளது என தெரிய வந்துள்ளது.

    • அப்னா ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
    • 70 சதவீத முதலாளிகள் தரமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.

    'அப்னா' என்ற ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட நிறுவன இந்திய முதலாளிகளிடம் விரிவான சர்வே ஒன்றை சமீபத்தில் நடத்தியது. 

    அதில் நிறுவன முதலாளிகள் எவ்வாறு உற்பத்தித்திறனை அதிகரிக்கிறார்கள், கம்பெனி ஊழியர்களின் சோர்வை தடுப்பதற்கான உத்திகள், வேலை நேரத்தில் ஊழியர்களிடம் ஏற்படும் கவனச்சிதறல்களை குறைத்து கவனத்தை மேம்படுத்தும் உத்திகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வு குறித்த முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

    அதில் கூறி இருப்பதாவது:-

    70 சதவீத முதலாளிகள் தரமான வேலைக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். ஊழியர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதே உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வழி ஆகும்.

    வருகைப்பதிவு மற்றும் நேரத்திற்கு அலுவலகத்திற்கு ஊழியர்கள் வருவதைக் காட்டிலும் நிறுவன அலுவலகங்களில் உகந்த சூழலை உருவாக்குதல்.

    கம்பெனி நலனுக்காக நன்றாக உழைக்கும் ஊழியர்களை கண்டறிந்து அவர்களை பாராட்டி, பரிசுகள் கொடுத்தல். 

    ஊழியர்கள் ஊக்கமுடன் பணிபுரிய அவர்கள் பார்க்கும் வேலையை அங்கீகரித்தல்.

    ஊழியர்களுக்கு முதலாளிகள் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குதல். பணியாளர்களுக்கு ஆரோக்கியமான பணிச்சூழலை உறுதி செய்தல்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.
    • சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார்.

    அரியலூர்:

    உங்கள் ஊரில் உங்களை தேடி திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் பொதுமக்களை சந்தித்தும் அவர் குறைகளை கேட்டறிந்தார். இதன் ஒரு பகுதியாக நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது. சமையல் கூடத்திற்குள் நுழைந்த கலெக்டர் அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு குறித்து சமையல் செய்தவர்களிடம் கேட்டார். அப்போது காலை உணவாக உப்புமா தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

    இதனை தொடர்ந்து எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று தட்டில் வாங்கி, உப்புமாவை சாப்பிட்ட கலெக்டர், என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று சந்தேகத்தை கிளப்பினார். அதற்கு சமையலர்கள் விளக்கம் அளித்தனர். ருசி என்னமோ நன்றாகதான் உள்ளது. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே என்று கேட்ட கலெக்டர், இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    • அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
    • கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

    இது குறித்து ஜன்னல் ஆப் செக்ஸ்வல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியலில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பாலியல் நல்வாழ்வில் உடலில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆன்லைன் ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். மீதி பெண்கள் ஆசை தூண்டுதல் உணர்வு மற்றும் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

    • விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது.
    • மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மற்றும் வடசேரி பகுதி மீன் மார்க்கெட்களில் கெட்டுப்போன, பார்மலின் கலந்து கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட்ட பார்மலின் கெமிக்கல் மனம் கொண்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    அந்த புகார் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமார பாண்டியன், சங்கரநாராயணன், மீன்வளத்துறை ஆய்வாளர் மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ், மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவினர் கணேசபுரம்-வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்களை இன்று ஆய்வு செய்தனர்.

    விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மீன்கள் மீது பார்மலின் தடவப்பட்டிருக்கிறதா? மீன் விற்பனைக்கு தகுதியானதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு சில வியாபாரிகள் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மீன்களை விற்பனை செய்திருந்தது தெரியவந்தது.

    அந்த மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை மினி டெம்போவில் ஏற்றி கொண்டு சென்றனர். உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற கெட்டுப்போன சுமார் 230 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    அந்த மீன்களை சுண்ணாம்பு தூள் மற்றும் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களில் பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் எதுவும் இல்லை என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.
    • குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த மாதம் 17,18-ந் தேதிகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதிகளில் வெள்ளம் தண்டவாளத்தை சேதப்படுத்தி வயல் பகுதிக்குள் தூக்கி வீசியது. மேலும் தண்டவாளத்தில் அடிப்பகுதியில் இருந்து ஜல்லி கற்கள் மற்றும் மண்ணை அரித்துச்சென்றது.

    இதனால் திருச்செந்தூர்-நெல்லை இடையே பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. செந்தூர் எக்ஸ்பிரஸ் நெல்லையுடன் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து மதுரை ரெயில்வே கோட்ட அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மீண்டும் தண்டவாளத்தை நிறுவும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளை நெல்லைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.

    இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி-நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாள பகுதி சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

    தொடர்ந்து மின்சார வழித்தடமும் சீரமைக்கப்பட்டு, நேற்று மதியம் மதுரை ரெயில்வே ஆய்வு குழுவினர் நெல்லை வந்தனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் திருச்செந்தூர் நோக்கி புறப்பட்டு சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட தண்டவாளம் மற்றும் மின்சார பாதை சரியாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தனர்.

    இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்து பொறியாளர்கள் குழு, பாதுகாப்பு அதிகாரிகள் இன்று மதியம் நெல்லைக்கு வருகின்றனர். அவர்கள் மின்சார ரெயில் என்ஜின் மூலம் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணித்து ஆய்வு செய்கிறார்கள். அந்த குழுவானது குளிர் சாதன பெட்டிகளை பொருத்தப்பட்ட மின்சார ரெயில் என்ஜின் மூலம் பயணித்து திருச்செந்தூர் செல்கின்றனர். அந்த குழுவின் ஆய்வு முடிவில் ரெயில் பாதை போக்குவரத்துக்கு தயார் என்பது உறுதி செய்யப்பட்டவுடன், இன்று இரவு முதலே போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அந்த குழு அனுமதி அளிக்கும்பட்சத்தில் இன்று இரவு எக்ஸ்பிரஸ் ரெயிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நெல்லை-திருச்செந்தூர் இடையே பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன.
    • மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும்.

    திருவொற்றியூர்:

    மிச்சாங் புயல்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தின்போது எண்ணூரில் எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வெளியேறி எண்ணெய் கழிவு கடல் மற்றும் முகத்துவார பகுதியில் கலந்தது. இதனால் மீனவர்களின் படகுகள், வலைகள் சேதம் அடைந்தன. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத அளவுக்கு அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதை த்தெடர்ந்து எண்ணூரை சுற்றி உள்ள மீனவர்களுக்கு நிவாரண உதவி வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதற்கிடையே கடலில் கலந்து எண்ணெய் கழிவால் மீன்கள், பறவைகள் பாதிக்கப்பட்டன. இதேபோல் ஜனவரிமாதத்தில் கரைக்கு கூடுகட்ட வரும் ஆமைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதா? ஆமைகள் கூடுகட்ட வரும் கரையில் பாதிப்பு இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய வனத்துறையினர் கடந்த 12-ந்தேதி சிறப்பு குழுவை நியமித்தது.

    இந்த குழுவினர் எண்ணெய் கழிவு படர்ந்த எண்ணூர் கடற்கரை பகுதிகளை ஆய்வு செய்தது. இதில் எண்ணெய் கழிவுகளால் ஆமைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த அறிக்கை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது,

    எண்ணூர் கடல்பகுதியில் பரவிய எண்ணெய் கழிவால் ஆமைகளுக்கு பாதிப்பு இல்லை. அவை ஆண்டு தோறும் ஜனவரி மாதம் கூடு கட்டி முட்டையிட கடற்கரைக்கு வரும். எண்ணூர் முகத்துவாரத்தில் கசிவு ஏற்பட்டதாலும், எண்ணெய் கழிவு கடலில் அதிகம் பரவாததாலும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும், எண்ணூர் அருகே உள்ள கடற்கரையில் கற்கள்தான் அதிகஅளவில் உள்ளன. மணல் நிறைந்த கடற்கரைகளுக்கு மட்டுமே ஆமைகள் வரும். இதனால் ஆமைகள் முட்டையிட கடற்கரைக்கு வருதில் எந்த பாதிப்பும் இருக்காது. எண்ணெய் கழிவால் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கு மட்டும் பாதிப்பு உள்ளது என்றார்.

    • தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது.
    • 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞர் அணி 2-வது மாநில மாநாடு வருகிற 24 ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

    100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அமருவதற்கான பந்தல், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே .என். நேரு ஆய்வு செய்து பந்தல் அமைப்பு குழுவினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். தற்போது மாநாட்டு முகப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருவதற்கான பாதை, அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அமருமிடம் , உணவருந்துமிடம், கட்சி தொண்டர்கள் உணவு அருந்தும் இடம் மற்றும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் உருவ சிலைகள் அமைக்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார். தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். மாநாட்டிற்காக சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமும் தயாராகி வருகிறது. பந்தல் உள் பகுதியில் திரைச் சேலைகளால் அலங்காரம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. மேலும் மாநாட்டை சுற்றிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 100 அடி உயரத்தில் கட்சிக் கொடி ஏற்ற பிரம்மாண்ட கம்பமும் நடப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் நேருவுடன் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் .ஆர் . சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் டி .எம். செல்வகணபதி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    ×