search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana"

    • வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
    • சாலையோரம் உணவு விற்போருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி முகம் சுளிக்க வைத்தது.

    அதில் ஐஸ்கிரீம் வியாபாரி சுய இன்பத்தில் ஈடுபட்டு, அதன் பிறகுத் தனது விந்தணுக்களை ஃபலூடாவில் கலக்கி விற்பனை செய்த காட்சிகள் உள்ளன.


    இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இதையடுத்து வியாபாரி மீது அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும், அவர் எங்கே ஐஸ்கிரீம்களை வாங்கினாரோ அங்கே சென்றும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அங்கே வைக்கப்பட்டிருந்த பழ சாலட்களை பரிசோதித்த அதிகாரிகள், அது கெட்டுப் போய் இருந்ததால் அவற்றை அப்புறப்படுத்தினர்.

    இது குறித்து சாலையோரம் உணவு விற்பனை செய்வோருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (வயது 37) கார் விபத்தில் உயிரிழந்தார்.
    • எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவான லாஸ்யா நந்திதா (வயது 37) பிப்ரவரி 23-ம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கார் விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நந்திதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதாவிற்கு, செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா உயிரிழப்பு போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளின் ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், "அனுபவமில்லாத ஓட்டுநர்களால் சாலை விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையாக இருக்கிறது. தொலைதூரப் பயணங்களுக்காக திறமையான ஓட்டுநர்களை நியமிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு, ஓட்டுநர்களுக்கு தேர்வு வைக்க முடிவு செய்துள்ளோம். ஓட்டுநர் சோதனை நடத்துவதற்கான பயிற்சி இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும்" என தெரிவித்தார்.

    • கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.
    • உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத் கண்டோண்ட்மெண்ட் எம்.எல்.ஏவாக இருந்தவர் லாஸ்யா நந்திதா (வயது 37).

    இன்று அதிகாலை ஐதராபாத்தில் இருந்து தனது சொந்த ஊருக்கு காரில் புறப்பட்டார். சங்கரெட்டி மாவட்டம் படன்செருவில் உள்ள எக்ஸ்பிரஸ் வெளிவட்ட சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

    காலை 6.30 மணி அளவில் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் காரில் முன்பகுதி நொறுங்கியது.

    காரில் இருந்த லாஸ்யா நந்திதா படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கார் டிரைவரை மீட்டு படன் சேருவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேலும் நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நந்திதா கடந்த 13-ந் தேதி நல்கொண்டாவில் பி.ஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கலந்துகொண்டு பின்னர் வீடு திரும்பிய நஞ்சிதாவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் நந்திதா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இன்று 2-வது விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்.

    லாஸ்யா நந்திதா தந்தை சயன்னா 5-முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இறந்தார்.

    அவரது மறைவிற்குப் பிறகு சந்திரசேகர ராவ் அவரது மகளான லாஸ்யா நந்திதா செகந்திராபாத், கண்டோண்ட்மெண்ட் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தார்.

    தன்னை எதிர்த்து போட்டியிட்ட வெண்ணேலாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தந்தை இறந்தார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நந்திதா விபத்தில் சிக்கி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண் எம்.எல்.ஏ. ஒருவர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் தெலுங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    இந்நிலையில் தெலுங்கானா எம்.எல்.ஏ. லஷ்ய நந்திதா மறைவிற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

    "கண்டோண்ட்மெண்ட் சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதாவின் அகால மரணம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நந்திதாவின் தந்தையுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. அவர் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இறந்தார்.

    அதே மாதத்தில் திடீரென நந்திதாவும் மரணம் அடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    • ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.
    • ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா மற்றும் மந்திரிகள் பிரசாரம் செய்தனர்.

    இந்தநிலையில் ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது.

    இந்த தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர்களை பிரசாரத்தில் இறக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

    ஆந்திர மாநிலத்தில் தற்போது முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

    இது காங்கிரஸ் கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பதால் வெற்றி வாய்ப்பு உள்ளது.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் பிரசாரம் செய்ய உள்ளோம் என தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் தெலுங்கானா வி.ஐ.பி.க்கள் மதிக்கப்படவில்லை. சிபாரிசு கடிதங்கள் அதிகாரிகளால் மறுக்கப்படுகிறது. இதுகுறித்து விவாதம் நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

    • மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, முன்னாள் துணை முதல்வர் மயங்கி சரிந்தார்.

    நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பவனில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவில் தெலுங்கானா மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா முன்னாள் துணை முதல்வர் மஹ்மூத் அலி திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி சரிந்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் கைத்தாங்கலாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.



    2018-ஆம் ஆண்டில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மஹ்மூத் போட்டியிட்டு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்ததுடன், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டம், சின்ன எல்லாபுரம், அமுதண்டாவை சேர்ந்தவர் இஸ்லாவத் ஸ்ரீனு (வயது 40). ஆட்டோ டிரைவர்.

    இவரது தாய் பாப்பா (60), மகள் ரித்விக் (6), ரித்விகா (4). அவரது அத்தை சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோருடன் தனது மகன் ரித்விக்கிற்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக நல்கொண்டா மாவட்டம், நாகார்ஜுன சாகர் அருகே உள்ள கோவிலுக்கு ஆட்டோவில் சென்றனர்.

    இரவு மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மஹபூபாபாத் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஆட்டோ மீது மோதியது.

    இதில் ஸ்ரீனு அவரது தாய் பாப்பா, மகன் ரித்விக், மகள் ரித்விகா ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சாந்தி, மைத்துனர் சர்தார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதேபோல் காரில் வந்த 4 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை.
    • வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலத்தில் மனைவி, மகன், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்துக் கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன்காரராக மாறிய விரக்தியில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்ட ஆயுதப்படை காவலர்.

    தற்கொலை செய்து கொண்ட ஆயுதப்படை காவலர் நரேஷ், சித்தபேட்டை ஆட்சியரின் மெய்க்காவலராக பணியாற்றி வந்தவர்.

    ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான நரேஷ் தனது மொத்த சம்பளத்தையும் பல மாதங்களாக சூதாட்டத்தில் இழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    இழந்த பணத்தை பிடிக்கலாம் என்ற ஆர்வத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் வாங்கி நரேஷ் சூதாடியுள்ளார்

    வட்டிக்கு பணம் வாங்கியும் நரேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை மனைவி சைதன்யா கண்டித்துள்ளார்.

    இந்நிலையில், மன விரக்தியில் இருந்து வந்த நரேஷ் மனைவி குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இடுப்பு எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி.
    • எலும்பு முறிவு காரணமாக சந்திரசேகர ராவுக்கு அறுவை சிகிச்சை.

    தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், சந்திரசேகர ராவ் உடல்நிலை குறுத்து மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது.

     


    அந்த அறிக்கையில், "சந்திரசேகர ராவ் உடல்நிலை சீராக உள்ளது. நாள் முழுக்க ஓய்வில் இருந்த அவருக்கு வலி எதுவும் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது."

    "சர்வதேச மருத்துவ வழிகாட்டுதல்களின் படி நோயாளியை 12 மணி நேரத்திற்குள் நடக்க வைக்க வேண்டும். அந்த வகையில், மருத்துவர்கள் முன்னிலையில் சந்திரசேகர ராவ் நடக்க வைக்கப்பட்டார். அவர் விரைந்து குணமடைய உடற்பயிற்சிகளை பரிந்துரை செய்திருக்கிறோம். சந்திரசேகர ராவ் குணமடையும் விதம் மருத்துவ குழுவுக்கு திருப்தியளிக்கும் வகையில் தான் உள்ளது," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்துள்ளார்.
    • சீதக்கா 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் தெலுங்கானா மாநில முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். இவர் நேற்று (டிசம்பர் 07) பதவியேற்றுக் கொண்ட நிலையில், இவருடன் 11 பேர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    காங்கிரஸ் தலைமையிலான 11 பேர் அடங்கிய அமைச்சரவையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் தான் சீதக்கா. நக்சலைட் அமைப்பில் இருந்து, அரசியலில் எண்ட்ரி கொடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பொறுப்பேற்று இருக்கும் சீதக்கா அம்மாநில அரசியல் மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியிலும் முன்னணி தலைவராக உருவெடுத்து வருகிறார்.

     


    ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் முலுகு மாவட்டத்தை அடுத்த ஜகன்னபேட்டாவில் ஆதிவாசி குட்டி கோயா குடும்பத்தில் சாரையா மற்றும் சாரக்கா தம்பதிக்கு பிறந்தவர் தான் சீதக்கா. தனது குடும்பத்தில் இளம் குழந்தையாக பிறந்த தன்சாரி அனுசுயா என்கிற சீதக்கா தனது 14 வயதில் நக்சலைட் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    1980-களில் மாவோயிஸ்ட் அண்ணன்களின் கருத்தியலை விரும்பிய சீதக்கா அவர்கள் நில உரிமையாளர்களை எதிர்கொண்டு சண்டையிட்ட விதத்தால் அமைப்பில் ஈர்க்கப்பட்டார். தனது குடும்பத்தாரை போன்றே சீதக்காவும் தனது வாழ்க்கையை சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்காக தியாகம் செய்ய முன்வந்தார்.


     

    பெற்றோரால் அனுசுயா என்று பெயர்சூட்டப்பட்ட இவருக்கு நக்சல் படையை சேர்ந்த தலைவர்களே சீதா என்ற புதிய பெயர் சூட்டினர். இந்த பெயர் தான் காலப்போக்கில் சீதக்கா என்று மாறியது. மாவோயிஸ்டுகளுடன் தொடர்ந்து பயணித்த சீதக்கா கமாண்டோவாக பணியாற்றி வந்தார். ஒருகட்டத்தில் மாவோயிஸ்டுகளின் அரசியல் கருத்துக்களில் முரண்பாடு ஏற்பட, அந்த அமைப்பில் இருந்து வெளியேறி 1997-ம் ஆண்டு சரண் அடைந்தார்.

    பிறகு, அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியின் போது பொது வாழ்க்கையை தொடங்கிய சீதக்கா, வழக்கறிஞர் அவதாரம் எடுத்து பழங்குடியிர் மற்றும் முலுகு பகுதியின் பெண்களுக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகி வாதாடினார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்த இவர் 2009-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் முலுகு தொகுதியில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்ட சீதக்கா, சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.



    பிறகு முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிய சீதக்கா தனது சமுதாயம் பற்றிய ஆய்வு செய்து பட்டம் பெற்றார். அந்த வகையில் முலுகு தொகுதியில் மூன்றுமுறை சட்டமன்ற உறுப்பினரான சீதக்கா சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பி.ஆர்.எஸ். கட்சியின் பேட் நாகஜோதியை 33 ஆயிரத்து 700 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

    தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவரை விட அதிக வாக்குகள் மூலம் வெற்றி பெற்ற சீதக்கா, தெலுங்கானா மாநிலத்தின் பழங்குடியின நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்பின் போது இவரது பெயர் அழைக்கப்பட்டதும், அங்கிருந்த கட்சி தொண்டர்கள் எழுப்பிய கரகோஷம் மற்றும் ஆரவாரம் சில நொடிகள் வரை நீடித்தது. இதன் காரணமாக உறுதிமொழி ஏற்க சீதக்கா சில நொடிகள் மேடையிலே காத்திருந்தார்.

    • சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
    • ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் அனுமதி.

    தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் தனது வீட்டின் குளியலறைக்கு சென்ற போது திடீரென வழுக்கி விழுந்தார். வலியால் துடித்த அவரை குடும்த்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இன்று நள்ளிரவு 2 மணி அளவில் சந்திரசேகர ராவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    69 வயதான சந்திரசேகர ராவ் கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அவருக்கு இடதுபுற இடுப்பு எலும்பு மாற்றப்பட வேண்டும் என்றும், இது முழுமையாக குணமடைய ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

     


    மருத்துவமனையில் உள்ள சந்திர சேகர ராவின் உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சந்திர சேகர ராவின் உடல்நிலை குறித்த தகவல்களை தொடர்ந்து வெளியிடுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், முன்னாள் முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ் கடந்த மூன்று நாட்களாக கட்சி பிரமுகர்கள் மற்றும் பலரை தனது இல்லத்தில் தொடர்ச்சியாக சந்தித்து வந்தார். கடந்த 2014 முதல் 2023 வரை தெலுங்கானாவில் ஆட்சி செய்து வந்த கே சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியை காங்கிரஸ் வீழ்த்தியது.



    இதையடுத்து காங்கிரஸ் சார்பில் ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்தின் முதலமைச்சராக நேற்று (டிசம்பர் 08) பதவியேற்றார். இவருடன் 11 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 64 இடங்களில் வெற்றி பெற்றது.

    மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்திரசேகரராவை பார்க்க கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் குவிந்தனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக இருந்தார்.
    • இன்று மதியம் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    ஐந்து மாநில தேர்தலில் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க ரேவந்த் ரெட்டிதான் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அவரை காங்கிரஸ் இரண்டு தொகுதிகளில் களம் இறக்கியது. கமாரெட்டி தொகுதியில் தோல்வியடைந்தார். மற்றொரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

    ரேவந்த் ரெட்டியை முதலமைச்சராக தேர்வு செய்ய கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கட்சி மேலிடம் அவரை முதலமைச்சராக தேர்வு செய்தது. இன்று மதியம் அவர் தெலுங்கானா மாநில முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பத்திரிகை சந்திப்பின்போது, உங்களுடைய டி.என்.ஏ.-வை காங்கிரஸ் டி.என்.ஏ-வாக பார்க்கிறீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரேவந்த் ரெட்டி என்னுடைய டி.என்.ஏ.-வை தெலுங்கானா டி.என்.ஏ.-வாக பார்க்கிறேன் என்றார்.

    மேலும், சந்திரசேகர ராவ் குறித்து பேசும்போது "சந்திரசேகர ராவின் டி.என்.ஏ. பீகாரைச் சேர்ந்தது, அவரின் சாதி குர்மி. குர்மிஸ் பீகாரில் இருந்து வந்தவர்கள். பீகாரில் இருந்து விஜயநகரம் குடிபெயர்ந்து பின்னர் அங்கிருந்து தெலுங்கானா வந்தனர். என்னுடைய டி.என்.ஏ. தெலுங்காவில் இருந்து வந்தது. என்னுடைய டி.என்.ஏ. தெலுங்கானா. அது பீகார் டி.என்.ஏ.-வை விட சிறந்தது" என்றார்.

    அவர் எம்.பி.யாக இருக்கும்போது இதுகுறித்து பெரியதாக பேசப்படவில்லை. தற்போது தெலுங்கானா களத்தில் சந்திரசேகர ராவை தோற்கடித்து, முதலமைச்சர் பதவிக்கு அவர் பெயர் அடிபட்ட நிலையில் தூசி தட்டி எடுக்கப்பட்டு விமர்சனம் செய்யப்படுகிறது.

    இதுகுறித்து பா.ஜனதா எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறுகையில் "டி.என்.ஏ. குறித்து ரேவந்த் ரெட்டி கூறிய கருத்து பொறுப்பற்றது. வெட்கக்கேடானது. தெலுங்கானா டி.என்.ஏ.-வை விட பீகார் டி.என்.ஏ. பலவீனமானதா?.

    நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலான இநத் கருத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மவுனம் காப்பது ஏன்?. ரேவந்த் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    பெங்களூரு:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முயற்சி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

    இதுதொடர்பாக முதல் மந்திரி தங்களை அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

    தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    ×