search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stalin"

    • உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
    • அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2-வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வான 1½ வருடத்தில் கடந்த டிசம்பர் 14-ந் தேதி அவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரானார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் அவரை தலைவராக கட்சி நிர்வாகிகள் பார்க்கிறார்கள். 'சின்னவர்' என்று பவ்யமாக அழைக்கின்றனர்.

    அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மூத்த கட்சி நிர்வாகிகளின் துணையின்றி டெல்லி சென்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசிவிட்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது அரசியலில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதிக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது.

    சமீபத்தில் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரெயில் விபத்து சம்பவங்களை பார்வையிட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் சென்றிருந்தனர். இதிலும் உதயநிதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலுக்கு உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிக்கும் சென்று பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும் அவரது உழைப்புக்காக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வந்தது.

    ஆனால் இப்போது திடீரென அவருக்கு முன்கூட்டியே துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுவிடும் என்று பேசப்படுகிறது.

    சில நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் நேற்று முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    அமைச்சர்கள் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியிலும் இந்த விஷயம் கிசுகிசுவாக பேசப்பட்டது.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி இப்போதே கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார்.
    • சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.

    அரசியல்வாதிகள் என்றாலே அதிரடி, பல்டி, அந்தர்பல்டி... என்று களத்தில் எந்த பக்கம் நின்றாலும் எப்படியும் அடித்து ஆடக்கூடியவர்கள்.

    அப்படி இருக்கும் போது ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் களத்தில் விளையாடும் மோடியின் அரசியல் கில்லாடித் தனத்தை சாதாரணமாக எடைபோட்டு விட முடியுமா...?

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தெலுங்கானா மற்றும் தமிழ் நாட்டில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    பிரதமர் கலந்துகொள்ளும் அரசு நிகழ்ச்சிகளில் அந்த அந்த மாநில முதலமைச்சர் கலந்துகொள்வது மரபு. ஆனால் தெலுங்கானாவில் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் அந்த மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொள்ளவில்லை.

    இதை பிரதமர் மோடி தனக்கே உரிய பாணியில் வெளுத்து வாங்கினார். அதாவது அரசு வேறு அரசியல் வேறு. இப்படி ஒரு முதல்வர் அரசு திட்டங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி மாநிலம் வளரும்.

    மத்திய அரசு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கியும் தெலுங்கானா வளர்ச்சி அடையாமல் இருக்க காரணம் முதல்வரின் செயல்பாடுதான் என்று விளாசினார். அங்கிருந்து சென்னைக்கு வந்த மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டார். வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்க செல்லும் இடத்துக்கு செல்ல 2 பேட்டரி கார்கள் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன.

    அதில் ஒரு காரில் முதல்வர், கவர்னர், அமைச்சர்கள் ஏறியிருந்தனர். ஒரு கார் மோடி ஏறுவதற்காக நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் மோடியோ தனது காருக்கு வரும்படி மு.க.ஸ்டாலினையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். கொடி அசைத்தபோதும் மு.க.ஸ்டாலினை தன் அருகில் நிற்க வைத்து கொண்டார்.

    இதன்மூலம் அரசியலில் இருவரும் மோடியின் எதிரிகளாக இருந்தாலும் சந்திரசேகரராவை விட மு.க.ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பாடுபடுகிறார் என்று உணர வைத்து மக்கள் மத்தியில் சந்திரசேகரராவின் செல்வாக்கை சாய்ப்பதற்கான யுக்தி ஒன்று.

    இன்னொரு விதத்தில் பார்த்தால் சந்திரசேகர ராவ் அமைக்கும் கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினும் செல்வார் என்று எதிர் பார்க்கும் நிலையில் தன்னுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொண்டால் சந்திரசேகரராவுக்கு தி.மு.க. மீது லேசாகவாது சந்தேக கோடு விழ வைக்கலாம்.

    மூன்றாவதாக என்ன தான் தி.மு.க. மோடியை வசை பாடினாலும் அவரது பெருந்தன்மையை பார் என்று தமிழக மக்கள் யோசிப்பார்கள். அதன் மூலம் மோடியின் இமேஜ் வளரவும் வாய்ப்பு உண்டு.

    அதாவது ஒரே கல்லில் இரண்டுக்கும் மேற்பட்ட மாங்காய்களை மோடி வீழ்த்தி இருக்கிறார். அரசியலில் மோடி கில்லாடி தான்.

    • அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்.
    • ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம்- சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    சென்னை:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் 75 அதிநவீன மருத்துவ உபகரணங்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட புதிய அவசரகால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை, கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, அவசரகால ஊர்திகளை பார்வையிட்டு, வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், துணை மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' என்ற பெயரில் மருத்துவ மாணவர்களின் மனநலன் காக்கும் சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டு 'மன நல நல்லாதரவு மன்றங்கள்' அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மனநல நல்லாதரவு மன்றங்களில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மனநலத் துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு மாணவர்களின் மனநலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    உளவியல் ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் தயக்கமின்றி, உடனடியாக மன நல மருத்துவரை தொடர்பு கொள்ளும் வகை யில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் 'மனம்' அலைபேசி உதவி எண் 14416 பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இன்று, 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பள்ளி மாணவர்களின் மனநலத்தை வலுப்படுத்தும் 'மனநல நல்லாதாரவு மன்றங்கள் (மனம்)" மற்றும் "நட்புடன் உங்களோடு மனநல சேவை (14416)" ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் முதல் கட்டமாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் விரி வுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை அரசு மனநலக் காப்பகத்தில் 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 அறைகளுடன் அமைக்கப்பட்டுள்ள இடைநிலை பராமரிப்பு மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

    அனைத்து வகையான மனநல சேவைகளையும் ஓரிடத்தில் வழங்கும் வகையில், ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு மனநலக் காப்பகம் தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநலம் மற்றும் மூளை நரம்பியல் நிறுவனமாக தொடங்கப்பட உள்ளது. இங்கு மனநல சேவையுடன் கூடுதலாக நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாநிலத்தின் எந்தப் பகுதியிலிருந்தும் மனநல ஆலோசனை பெற, தொலை மருத்துவத்திற்கான மின்னணு மையம் உருவாக்கப்படும். இந்த ஒப்புயர்வு மையத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள், மனநல உளவியல் மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் மனநலப் பயிற்சி பெறும் வசதிகள் ஏற்படுத்தப்படும். மனநலம் மற்றும் நரம்பியல் ஒப்புயர்வு மையத்திற்கு 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்தின் முப்பரிமாண வரைபடத்தை முதலமைச்சர் வெளியிட்டார். ஆசிரியர் கையேடு மற்றும் தேசிய வளர் இளம் பருவத்தினர் நல திட்டம் சம சயது பயிற்றுநர் பயிற்சிக் கையேட்டினையும் வெளியிட்டார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ரகுபதி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
    • என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராகவும், என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர் என்று முதலமைச்சர் கூறினார்.

    சென்னை:

    தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மை வாரிய துணைத் தலைவருமான முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் நேற்றிரவு சென்னையில் இருந்து காரில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தார். அவரது உறவினர் காரை ஓட்டிச் சென்றதாக தெரிகிறது.

    அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அதற்குள் மஸ்தான் பரிதாபமாக இறந்துவிட்டார்.

    அவரது சாவில் மர்மம் இருப்பதாக தெரிய வந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    டாக்டர் மஸ்தான் உடல் திருவல்லிக்கேணி பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப் பட்டது.

    தகவல் அறிந்ததும் தி.மு.க. நிர்வாகிகள் விரைந்து சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    டாக்டர் மஸ்தானின் மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் இன்று மாலை நடைபெற இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் மஸ்தான் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    முன்னாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவருமான டாக்டர் மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பயணித்து வந்த டாக்டர் மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவுச் செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக் கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச் சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே.

    சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்துச் சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப்பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.

    அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார். மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர கழகத் தொண்டராக பணியாற்றிய டாக்டர் மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் - கழகத்தினருக்கும் - சிறு பான்மையினச் சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன்.
    • இவரின் இல்லத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்றுள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.


    செல்வராகவனை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்

    இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், செல்வராகவன் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ள இயக்குனர் செல்வராகவன் "மாண்புமிகு முதல்வர் எங்கள் குடும்பத்தை சந்தித்தபோது... என்ன ஒரு சிறப்பான சந்திப்பு" என குறிப்பிட்டுள்ளார்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.


    பொன்னியின் செல்வன்

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "பொன்னியின் செல்வன் -1" திரைப்பட விழா வருகிற செப்டம்பர் 6-ந் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாகவும்  அதில் படத்தின் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடக்கவிருக்கிறது.
    • இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2.500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த போட்டியின் தொடக்க விழாவை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.


    முதலமைச்சர் ஸ்டாலின்

    இதையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டி நிகழ்ச்சிக்கான விளம்பரம் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அந்த விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த விளம்பரத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசர் வெளியாகியுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், அதிதீ சங்கர் என பலர் நடித்திருக்கும் இந்த டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளார்.
    • அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை:

    தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. அதன்பின் மாநில கல்விக்கொள்கைக்கான விதிமுறைகள் கடந்த மாதம் வெளியாகின.

    இந்நிலையில் தற்போது மாநில கல்விக்கொள்கை குழுவினரோடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் ஜூன் 15-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கம் தராதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
    • தி.மு.க. தொண்டர்களே தி.மு.க. மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருவேடகத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு தீர்மானம் புத்தகம் வழங்கும் விழா மற்றும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய தாவது-

    சென்னையில் நடந்த தி.மு.க. திராவிட மாடல் பயிற்சியின் போது பேசிய உதயநிதி பிரதமர் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் எப்படி பேசினார் அது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறுகிறார். அந்த நிகழ்ச்சியில் தி.மு.க.வினரை வைத்து மு.க.ஸ்டாலின் பேசும்போது கைதட்டுவது தான் மாடலா, அரசு விழாவில் தி.மு.க. காரர்களுக்கு கை தட்ட பயிற்சி கொடுப்பதுதான் திராவிட மாடலா?.

    மு.க.ஸ்டாலினுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது என்ற மாயதோற்றத்தை உருவாக்க ஒரு போலி நாடகத்தை அந்த விழாவில் அரங்கேற்றியுள்ளனர். தற்போது திராவிட மாடல் பயிற்சி என்பது உதயநிதியை முன்னிலைப்படுத்தும் பயிற்சியாகும்.

    பெரியாருக்கு முன் ஐம்பெரும் தலைவர்களான அயோத்திதாசர், பி.டி. தியாகராஜர், நடேசனார், பனகல் அரசர் உள்ளிட்டோர் 100 ஆண்டுக்கு முன்பாக திராவிட விளக்கம் அளித்துள்ளனர். தற்போது திராவிட மாடல் பயிற்சி என்பது ஏமாற்று வேலை. ஐம்பெரும் தலைவர்கள், மற்றும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தங்கள் வாரிசுகளை நியமிக்கவில்லை.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தற்போது தி.மு.க. மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். ஆனால் இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் சொல்ல முன்வரவில்லை ஏன்?தி.மு.க. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சியா கும். இந்த அரசின் மீது மக்கள் கடுமையான வெறுப்பில் உள்ளனர். எப்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்க்கும் நிலை உள்ளது. அதுமட்டுமல்லாது தி.மு.க. தொண்டர்களே தி.மு.க. மீது அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க.விற்கு ஊழலை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர் கெட்டுள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு கொண்டு செல்வேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். அவர் சொல்கிறபடி சட்ட ஒழுங்கு சீர்கேட்டில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தி.மு.க.விற்கு எதிராக எந்த கேள்வியும் கேட்க தயாராக இல்லை. தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று போராட்ட மும் செய்ய தயாராக இல்லை. தி.மு.க.வின் திராவிட மாடல் மக்களை ஏமாற்றுவதுதான்.

    அ.தி.மு.க. செய்த சாதனை திட்டங்களையும் தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்களையும் டிஜிட்டல் திண்ணைப் பிரசாரம் மூலம் மக்களுக்கு தொடர்ந்து கிராமந்தோறும் எடுத்து நாம் கூறுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முதலமைச்சரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    டிரோன் மூலமாக கருணாநிதியின் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டன. முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள், எம்பிக்களும் மரியாதை செலுத்தினர்.

    இதை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
    மேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமித் ஷா பேரணியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியதால் ஒருநாள் முன்னதாகவே அங்கு பிரசாரத்தை நிறுத்துமாறு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் இன்று இரவுடன் தேர்தல் பிரசாரம் முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்றிரவுடன் தேர்தல் பிரசாரத்தை முடிக்க உத்தரவிட்டது கண்டனத்துக்கு உரியது. ஆளும் கட்சிக்கு ஒரு விதி, எதிர்க்கட்சிக்கு ஒரு விதி என்ற கண்ணோட்டத்தில் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என பதிவிட்டுள்ளார்.
    டெல்லியில் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான அதிரடி நடவடிக்கைகளை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தொடங்கியுள்ளார்.

    முதல் கட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மாநில கட்சிகள் மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கும் கட்சிகள் அனைவருக்கும் சோனியா ஒரு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த கடிதத்தில், டெல்லியில் வரும் 23-ம் தேதி ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்கால அரசியல் பற்றி அதில் விவாதிக்கப்பட உள்ளது. அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.



    இந்நிலையில், டெல்லியில் 23-ம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

    இதேபோல், பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் டெல்லியில் ஒன்றுதிரட்ட சோனியா அழைப்பு விடுத்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    ×