என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "maniratnam"

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பட பொன்னியின் செல்வன்.
    • இப்படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து கமல் பார்த்து ரசித்தார்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இதனிடையே ராஜராஜசோழன் குறித்து அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது. சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.

     

    கமல்

    கமல்

    இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

     

    செய்தியாளர்களை சந்தித்த கமல்

    செய்தியாளர்களை சந்தித்த கமல்

    இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'.
    • இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.


    பொன்னியின் செல்வன்

    இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.125 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் இப்படம் நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது.
    • ரஜினிகாந்த் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே ரஜினி நடித்த தளபதி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக உள்ளது. சென்னையில் நடந்த பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

     

    அவர் கூறும்போது, ''பொன்னியின் செல்வன் கதையில் என்னை வந்தியத்தேவனாக நினைத்து பார்த்தது உண்டு. மணிரத்னம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை தொடங்கியதும் அதில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்று கேட்டேன். ஆனால் உங்கள் ரசிகர்களுக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது பிடிக்காது என்று சொல்லி அவர் மறுத்து விட்டார்" என்றார்.

     

    அப்போதே ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள் என்று ரஜினி கேட்டதாகவும், மணிரத்னம் சொன்ன ஒரு கரு ரஜினிகாந்துக்கு பிடித்து போனதாகவும், அந்த படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி உள்ளது. ஆனாலும் மணிரத்னம் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.

     

    இவர்கள் கூட்டணி மீண்டும் அமைந்தால் பிரமாண்டமாக இருக்கும் என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள். சிபி சக்கரவர்த்தி, தேசிங்கு பெரியசாமி ஆகியோர் பெயர்களும் ரஜினி படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் பொன்னியின் செல்வன் படத்தின் ரூ.400 கோடி வசூல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


    பொன்னியின் செல்வன்

    அந்த பதிவில், " ரூ. 400 கோடியை கடந்தது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சனையாக மதம்மாறி விட்டது! இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சனையை எழு (இ)ப்பலாம்! எழுப்பினால்… இன்னும் ஒரு 100!" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் எழுப்பிவிடலாம் என கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.


    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இதில் நடிகை திரிஷாவின் குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    பொன்னியின் செல்வன்

    இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் கல்யாணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.


    திரிஷா

    இதற்கு பதிலளித்த திரிஷா, "கடமைக்காக திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்ய விருப்பமில்லை. மிக மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டதாக கூறிய என் நண்பர்களில் சிலர் கூட விவாகரத்தை நாடியுள்ளனர்.


    திரிஷா

    மகிழ்ச்சியில்லாத ஒரு திருமணத்தை செய்துகொண்டு வாழ்வதற்கும் எனக்கு விருப்பம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய மனிதர் இவர்தான் என்று எனக்கு தோன்ற வேண்டும். அப்படியான ஒரு நபரை சந்தித்தால் திருமணம் செய்வேன்" என்று கூறியுள்ளார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் அமெரிக்காவில் வசூலில் சாதனை செய்துள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அமெரிக்காவில் இதுவரைக்கும் தமிழ் படங்கள் வசூலில் செய்த சாதனையை பொன்னியின் செல்வன் முறியடித்திருக்கிறது.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் திரையிட்ட இடங்களில் ரசிகர்கள் உணர்ச்சிவயப்பட்டு படத்தை ரசித்து வருகிறார்கள். இதே போல தென்கொரியாவில் தமிழ் மொழியிலேயே இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இங்கு ஒரு திரையரங்கில் படத்தை திரையிடுவதற்கு முன்பாக ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற "பொன்னி நதி பார்க்கணுமே" என்ற பாடலை ஒலிக்க விட்டு அதை தென்கொரியாவின் ரசிகர்களும் சேர்ந்து பாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பொன்னியின் செல்வன் நாவல் உலகில் உள்ள அனைவரையும் தமிழ் என்ற புள்ளியில் இணைத்திருப்பதோடு ராஜ ராஜ சோழனின் பெருமையை உலகறிய செய்திருக்கிறது என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
    • இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார்.

    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் இதுவரை உலக அளவில் 350 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த், தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரத்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

     

    ரஜினியை சந்தித்த சரத்குமார்

    ரஜினியை சந்தித்த சரத்குமார்

    இந்நிலையில் ரஜினி வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சரத்குமார், ரஜினிகாந்தை நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பு நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் "பெரிய பழுவேட்டரையர்" கதாபாத்திரம் ஏற்று நடித்த என்னை அலைபேசியில் அழைத்து ஆத்மார்த்தமாக பாராட்டியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் அவரை நேரில் சந்தித்ததில் இனிய தினமாக நாள் துவங்கியது. எனது பணிகள், மகள் வரலட்சுமியின் பணிகள், திரைத்துறை வளர்ச்சி மற்றும் பொதுவான கருத்துகளை பகிர்ந்து காபியுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட உரையாடலில் இருவருக்கும் இடையேயான நட்பினை எண்ணி நெகிழ்ந்தேன்' என பதிவிட்டுள்ளார்.

    பொன்னியின் செல்வனில் இடம்பெற்றுள்ள பெரிய பழுகுவேட்டையார் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இயக்குனர் ராஜமவுலி இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறி உள்ளார்.

    பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பிறகு அந்தப் படம் தொடர்பாகவும் அந்தப் படம் எடுக்கப்பட்ட காலகட்டம் தொடர்பாகவும் அந்த காலகட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் பல விவாதங்கள் எழுந்திருக்கின்றன. ராஜராஜ சோழன் இந்து மன்னனா என்ற விவாதமும் எழுந்து உள்ளது.

     

    ராஜமவுலி

    ராஜமவுலி

    இந்த் நிலையில் பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமவுலி இந்து மதத்திற்கும் இந்து தர்மத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்து கூறி உள்ளார். 'நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல என கூறி உள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி தனது படத்தில் குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தில் இந்து மதத்தின் சித்தரிப்பு குறித்து பேசினார்.

     

    ராஜமவுலி

    ராஜமவுலி

    ராஜமவுலி கூறியதாவது:- இந்து மதம் மற்றும் இந்து தர்மம் ஆகியவற்றுக்கு இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆர்ஆர்ஆர் இந்து நூல்களுடன் தொடர்புடைய பாத்திரங்களை கடன் வாங்குகிறது, குறிப்பாக மையக் கதாபாத்திரங்களை இந்துக் கடவுள்களின் பதிப்புகளாகவும் விளக்கலாம்.

     

    ராஜமவுலி - ஆர்.ஆர்.ஆர்

    ராஜமவுலி - ஆர்.ஆர்.ஆர்

    பலர் அது இந்து மதம் என்று நினைக்கிறார்கள், இந்துமதம் தற்போதைய சூழலில் உள்ளது. ஆனால் இந்து மதத்திற்கு முன், இந்து மதம் தர்மம் இருந்தது. இது ஒரு வாழ்க்கை முறை, இது ஒரு தத்துவம். நீங்கள் மதத்தை எடுத்துக் கொண்டால், நானும் இந்து அல்ல, ஆனால் நீங்கள் தர்மத்தை எடுத்துக் கொண்டால், நான் மிகவும் இந்து. படத்தில் நான் சித்தரிப்பது உண்மையில் பல, பல நூற்றாண்டுகள் மற்றும் யுகங்களாக இருக்கும் ஒரு வாழ்க்கை முறையைத்தான்.

     

    ராஜமவுலி

    ராஜமவுலி

    ஆர்ஆர்ஆர்-ல் ராஜு என்ற கதாபாத்திரம் ஒரு 'துறவி' உருவமாக மாறும் ஒரு காட்சியை நினைவு கூர்ந்த ராஜமவுலி, ராஜு பகவத் கீதையில் இருந்து ஒரு சமஸ்கிருத வசனத்தை ஓதுகிறார். கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்ன விஷயமாக இதைப் பார்க்கலாம், எனவே இது ஒரு இந்து மத வசனம், ஆனால் நீங்கள் அதன் பொருளைப் பார்த்தால், ஜாதி மற்றும் எங்கு பிறந்தார் என்பதைப் பொருட்படுத்தாமல் இது இந்தியர்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை எப்படிப் பார்ப்பது, நீங்கள் செய்யும் செயலின் பலனைப் பார்ப்பது அல்ல. அதைத்தான் இந்து தர்மம் சொல்கிறது. அதனால், நான் இந்து தர்மத்தைப் பின்பற்றுபவன் என கூறினார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் உலக அளவில் நல்ல வசூலை குவித்து வருகிறது

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

    பொன்னியின் செல்வன்

     

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் வசூல் குறித்த புதிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் வெளியான முதல் வாரத்தில் ரூ.100கோடிக்கு மேல் வசூல் செய்து அதிக வசூலை குவித்த படமாக முதல் இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகமுழுவதும் இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 100கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் என்ற கதாப்பாத்திரத்தில் கார்த்தி நடித்திருந்தார்.

    மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1௦௦ கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

     

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    இப்படத்திற்கும் படத்தில் நடித்தவர்கள் பலருக்கும் திரைதுறையினர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவியை தொலைப்பேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

     

    ரஜினி - கமல்

    ரஜினி - கமல்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் வல்லவராயன் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்த கார்த்தியை, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் பாராட்டியுள்ளனர். இதனை கார்த்தி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "ரஜினி சார், உங்களிடமிருந்து வந்த அழைப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மற்றவர்களின் பணிகளை பார்த்து நீங்கள் பாராட்டுவது எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்ததாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

     

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    மேலும் "கமல் சார், நீங்கள் எப்பொழுதும் சினிமாவில் பெரிய இலக்குகளை அடைய, உயர்ந்த தரத்தை அமைக்க எங்களுக்கு தூண்டுதலாக இருந்துள்ளீர்கள். ஆனால் அதைவிட முக்கியமாக ஒருவரையொருவர் நேசிக்கவும், மதிக்கவும், அதை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை இது போன்ற தருணங்களில் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். மிகுந்த அன்பும் மரியாதையுடன் கார்த்தி" என குறிப்பிட்டுள்ளார். 


    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தின் தமிழக வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

     

    பொன்னியின் செல்வன் 

    பொன்னியின் செல்வன் 

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வசூல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படம் குறித்த அவர்களின் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

    மணிரத்னம்

    மணிரத்னம்

     

    இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய் நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர். தன் மகனுக்கு நந்தன் என பெயரிட்டவர் மணிரத்னம் சார். பம்பாய், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர். ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    ×