search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl"

    • மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.

    குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாசினி மற்றும் அவரது மகள்களை கொல்ல சுரேஷ் முடிவு செய்தார். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கோதாவரி ஆற்று பாலத்திற்கு சென்றார். அப்போது பாலத்தில் நின்று செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

    திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

    சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியம் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிறுமி லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

    ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இக்கட்டான நிலையில் சிறுமி 100-க்கு போன் செய்தார்.

    எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு அந்த சிறுமி பதிலளித்தார், நாங்கள் அவளுக்கு தைரியத்தை ஊட்டினோம். ஒரு கையால் குழாயில் ஒட்டிக்கொண்டு, மறுபுறம் மொபைல் போனை வைத்துக்கொண்டு தொங்கினார். லட்சுமி கீர்த்தனா, டார்ச் லைட் வெளிச்சத்தை அவளைக் கண்டதும் உதவிக்காக கத்தினார்.

    "காலை 3.53 மணிக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி கீர்த்தனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ரவுலபாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் டார்ச் லைட் மூலம் சிறுமியை கண்டுபிடித்தனர்.

    லட்சுமி கீர்த்தனா இருட்டில் குழாயில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சுமார் 36 நிமிடங்கள் வரை அவர் மன தைரியத்துடன் இருந்தார். தைரியமாக போலீசுக்கு ஒத்துழைத்தார்".

    அவர் உயிருக்கு போராடிய நேரத்திலும் 100-க்கு போன் செய்து போலீசாரை அழைத்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானtர்கள்.
    • பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தல் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகன் பால்பாண்டி(வயது30). இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்த்துவிட்டு வருவதாக பால்பாண்டி, மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோதினி அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தேடி வருகின்றனர்.

    இளம்பெண்

    மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள பெருங்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சிவரஞ்சனி(20). சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட வீட்டில் இருந்த சிவரஞ்சனி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார்.

    இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிறுமியை கடத்தியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
    • நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சாக்குமூடை ஒன்றில் சிறுமியின் உடல் கட்டப்பட்டு வீசியிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர், தங்களது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்தனர். இவர்களது 2-வது மகளான 5 வயது சிறுமி அந்த பகுதியில் விளையாடிய போது திடீரென மாயமானாள்.

    அவளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமியை, ஒரு வாலிபர் அழைத்து செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதில் சிறுமியை கடத்தியது அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் தான் என தெரியவந்தது. அவரும் பீகாரை சேர்ந்தவர் தான். தொழிலுக்காக கேரளா வந்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சம்பவ இடத்திற்கு குடி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர் வசித்த வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்துள்ளார். அதனால் அவரிடம் இருந்து உடனடியாக தகவல்கள் பெற முடியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகு விசாரணை நடத்தியதில் அவரது பெயர் அஸ்பாக் ஆலம் (வயது 23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர், சிறுமிக்கு ஜூஸ் வாங்கி கொடுத்து அழைத்துச்சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் எங்கு அழைத்துச்சென்றார் என்பதை தெரிவிக்காமல் மழுப்பலாக பதில் அளித்து வந்தார். இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமியுடன் அந்த வாலிபர் திருச்சூர் செல்லும் பஸ்சில் ஏறுவது தெரியவந்தது. மேலும் சிறுமியை அந்த பகுதியில் உள்ள சந்தையின் பின் பகுதியில் குப்பை மேடாக கிடக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றதை பார்த்ததாக ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சாக்குமூடை ஒன்றில் சிறுமியின் உடல் கட்டப்பட்டு வீசியிருப்பது தெரியவந்தது. அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கழுத்தை நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் குறித்து எர்ணாகுளம் ரூரல் போலீஸ் சூப்பிரண்டு விவேக்குமார் கூறுகையில், சிறுமி மாய மானதாக புகார் வந்ததும், சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது தான் வாலிபர் ஒருவர் குழந்தையை அழைத்துச்செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பீகாரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    பின்னர் சிறுமியின் உடலை சந்தையின் பின் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து மீட்டோம். அந்த பகுதி சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள இடமாகும். அங்கு மது மற்றும் போதைப் பொருள் கும்பல் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அங்கு சிறுமியை அழைத்துச் சென்றது ஏன் என்பது தொடர்பாக, கைதான வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

    • கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
    • ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர், முத்துசாமி கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு ரம்யா (வயது 23) மற்றும் திவ்யா (17) என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ரம்யாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் இறந்த பின்பு மகேஸ்வரி 2-வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் திவ்யா அவரது அக்கா ரம்யா வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது தாயார் மகேஸ்வரி 2-வது திருமணம் செய்தது பிடிக்காததால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று ரம்யா மற்றும் அவரது கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் நைலான் சேலையால் திவ்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து ரம்யா அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.
    • இளைஞர்கள் இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார்.

    இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் அறிமுகமானார். அவர்கள் இருவரும் பேஸ்புக்கில் குறுந்தகவல் அனுப்பி நட்பை பலப்படுத்தி வந்துள்ளனர்.

    ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் முக அடையாளத்தை அறியும் வகையில் அந்த வாலிபர் பேஸ்புக்கில் வீடியோ காலில் அழைத்து பேசி இருக்கிறார். அந்த பெண்ணும் வீடியோகாலில் ஜாலியாக பேசி உள்ளார்.

    ஒருமுறை அப்பெண் தனது ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் அந்த வாலிபரும் நிர்வாணமாக வீடியோ காலில் பேசி உள்ளார். இருவரும் நிர்வாண கோலத்தில் இருந்தபடி பேசிய வீடியோ காட்சியை அந்த பெண் பதிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் அந்த பெண், வாலிபரிடம் நிர்வாணமாக இருந்தபடி பேசிய வீடியோவை அவருக்கு அனுப்பி வைத்து ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் வங்கி கணக்கிற்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அந்த பெண் மேலும் ரூ.20 ஆயிரம் கேட்டு மிரட்டினார். பணம் தராவிட்டால் வாலிபரின் நண்பர்களுக்கு நிர்வாண வீடியோக்களை அனுப்பி விடுவேன் என அந்த பெண் மிரட்டினார்.

    தொடர்ந்து அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்ததால் வாலிபர் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நட த்தி வருகிறார்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில்,

    கடந்த 2 மாதங்களில் 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நிர்வாண வீடியோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாக சைபர் கிரைம் போலீசுக்கு புகார் வந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற இணைய வழி மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்தும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகிறார்கள் என்றார்.

    • இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.
    • போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மூர்த்திக்கு இன்ஸ்டாகிராமில் ரசிதா என்ற பெண்ணின் ஐ.டி.யில் இருந்து குறும் தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து மூர்த்தி அந்த பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.

    பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். அப்போது ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்பு கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் மூர்த்தி தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான பியூட்டீசியன் ரஷீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

    3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5-ந்தேதி காலையில் இருந்து அவரை காணவில்லை. வீட்டில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார்.

    அதன்பேரில், போலீசார் மாயமான ரஷீதாவின் சமூக வலைதள பக்கங்களை ஆய்வு செய்தனர். அதில், ரஷீதா பற்றி திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் பல்வேறு பெயர்களில் கணக்குகளை வைத்துக்கொண்டு வசதியான ஆண்களை வலையில் வீழ்த்தி, திருமணம் செய்து பணம் பறிக்கும் செயலில் அவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    பல ஆண்களுடன் ஆபாச சாட்டிங் செய்து அவர்களை மயக்கி உள்ளார். சொகுசு கார், மோட்டார்சைக்கிளில் பியூட்டியாக போஸ் கொடுத்து அவரை வலையில் வீழ்த்தியிருக்கிறார். மூர்த்தியும், அவரது அழகில் விழுந்தே காதல் திருமணத்தை உறவினர்கள் இல்லாமல், தனியாக நடத்தியிருக்கிறார்.

    ரஷீதாவுடன் பழகியதும் மூர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் பணத்தை அவருக்கு வாரி வழங்கி உள்ளார். பணத்தை சுருட்டிக் கொண்டு ரஷீதா ஓட்டம் பிடித்து விட்டார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 20-ந்தேதி கோவை மாவட்டம் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில், 33 வயது இளம்பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், எது கணவர் சத்ய கணேஷ், ரஷீதாவுடன் தொடர்பு வைத்துக்கொண்டு என்னிடம் பணம் கேட்டு பிரச்சினை செய்கிறார் என கூறியுள்ளார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பதும் தொளசம்பட்டி போலீசாருக்கு தெரியவந்தது.

    பைனான்சியர் மூர்த்தியை ஏமாற்றி திருமணம் செய்து, நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்த ரஷீதா, இதுவரை 8 திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    மூர்த்தியின் வீட்டில் இருந்து மாயமான ரஷீதாவின் போன் சுவிட்ச்-ஆப் ஆகியுள்ளது. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் ? என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக கல்யாண மன்னன்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில் சமீப காலமாக கல்யாண ராணிகளின் அட்ட காசம் அதிகரித்து வருகிறது. 8 கல்யா ணம் செய்துநகை, பணத்துடன் இன்ஸ்டா கிராம் அழகி தலைமறைவாகி உள்ளார்.

    இதுகுறித்து தொளசம்பட்டி போலீசாரிடம் கேட்டபோது, புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்கவில்லை என கூறியுள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்கு பதிவு செய்வோம். புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்.ஐ. ஆர். பதிவு செய்யவில்லை என தெரிவித்தனர்.

    ஏற்கனவே கடந்த ஆண்டு மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்ற பெண் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கள்ளி ப்பாளையத்தை சேர்ந்த தனபால் என்பவர் உள்பட 6 ஆண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமிருந்து பணம், நகை என அனைத்தையும் திருடிஏமாற்றினார் குறிப்பிடத்தக்கது.

    அப்பாவி பெண்களை ஏமாற்றி ஆண்கள் திருமணம் செய்து மோசடி செய்த காலம் போய் ரஷிதா போன்ற கல்யாண ராணிகள் சமூக வலைதளத்தை பயன்படுத்தி மோசடியில் இறங்கியிருப்பது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை மணியாக ஒலிக்க தொடங்கி உள்ளது. கல்யாணம் செய்பெது கொடுக்கும்வரை பெண்ணை பெற்ற பெற்றோர் மட்டுமல்ல ஆண்பி ள்ளைகளை பெற்றவர்களும் அலாட் ஆக இருக்கணும்போல....

    • கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
    • இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்க ணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி கிராமம் தொப்பகாடு பகு தியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மீனா (வயது 28). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    மீனாவின் கணவர் வேலுசாமி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்ட நிலையில் மீனா தனது குழந்தைகளுடன் கச்சுப்பள்ளி கிராமம் எட்டிகுட்டைமேடு பகுதி யில் வசித்து வந்தார்.

    தாரமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி யில் உதவியாளராக வேலை பார்த்து வந்த மீனா, சமீபத்தில் அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கச்சுப்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.

    இந்த நிலையில், மகன் படிப்பிற்காக தாரமங்கலத் தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்த மீனா, தனது மகளுடன் எட்டிக்குட்டை மேடு பகுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    மர்மசாவு

    இன்று அதிகாலை மீனா, அவர் குடியிருந்த வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இது குறித்து தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து, மீனா வின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மீனா வின் உடலை பார்த்து உறவி னர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

    சந்தேகம்

    பெண் குழந்தையுடன் தனியாக வீட்டில் வசித்து வந்த மீனா தூக்கில் பிண மாக தொங்கியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போலீ சார், வழக்குப்பதிவு செய்து, முதற்கட்டமாக அக்கம், பக்கத்தில் குடியிருப்பவர்க ளிடமும், அவரது உறவி னர்களிடமும் தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மீனா, ஏற்கனவே வேலை பார்த்து வந்த பள்ளிக்கு சென்றும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    இது பற்றி போலீசார் கூறுகையில், மீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விட பட்டாரா? என்ற உண்மை தெரிய வரும். இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    கணவனை இழந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண், மர்ம மான முறையில் உயிரிழந் துள்ள சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வயலில் பருத்தி எடுக்கும் பணியில் அந்த பெண் ஈடுபட்டுள்ளார்.
    • பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால்.

    இவரது மனைவி ஜெயா (வயது 42).விவசாய கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வயலில் பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது அவரை பாம்பு கடித்து அவர் வயலில் மயங்கி கிடந்துள்ளார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஜெயாவை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்கு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜெயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.
    • கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.

    அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து புகார் அளிக்க வந்த மகேஸ்வரி கூறும்போது, மலைப்பகுதியான ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.

    மேலும் கர்ப்பிணி பெண்களை தொட்டிலில் கட்டிக்கொண்டு தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் எங்கள் ஊருக்கு பெண் கொடுக்க மறுக்கின்ற னர். காரணம் சாலை வசதி இல்லாத பகுதியில் பெண்ணை கொடுக்க விருப்பம் இல்லை என தெரிவிக்கின்றனர்.

    இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரி களை சந்தித்து மனு வழங்கி யும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக தலையிட்டு எங்கள் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ சித்ரா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்
    • வளைவில் பஸ் திரும்பும் போது நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்தார்.

    திருவாரூர்

    திருவாரூரை அடுத்த வடகண்டம் பகுதியை சேர்ந்தவர் ஹசன். இவருடைய மனைவி ஹபீப் நிஷா (வயது 31). ஹசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ஹபீப் நிஷா நேற்று தனது உறவினர் ஒருவருடன் பவித்ரமாணிக்கம் பகுதியில் உள்ள ஒரு வங்கிக்கு செல்வதற்காக கும்பகோணத்தில் இருந்து திருவாரூருக்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்.

    காட்டூர் அருகே உள்ள விளாகம் பகுதியில் பஸ் சென்ற போது, பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக ஹபீப் நிஷா எழுந்து வாசல் அருகே நின்று உள்ளார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வளைவில் பஸ் திரும்பும் போது நிலைதடுமாறி அவர் பஸ்சில் இருந்து தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹபீப் நிஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×