என் மலர்
நீங்கள் தேடியது "missing"
மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி ஆண்டவர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் கனகா (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம், பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (22). இவர் தனது அக்காள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் சுப்புலெட்சுமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்கள் எங்கு சென்றார்கள் என தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே பள்ளிப்படை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 27-ந்தேதி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது.
வீட்டில் இருந்த மனைவி ஜெயஸ்ரீ (வயது 23) மற்றும் 3 வயது மகள் லக்ஷனா ஆகியோரை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த ராஜா தனது மகள், மனைவியை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ராஜா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தாய்- மகள் என்ன ஆனார்கள், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நேர்முக தேர்வுக்கு சென்ற இளம்பெண் மாயமானார்
- என்ஜினீயரிங் கல்லுாரியில் டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார்
திருச்சி:
திருச்சி உறையூர் காவேரி நகர் 5-வது கிராசை சேர்ந்த ராஜா மகள் ஐஸ்வர்யா(வயது 25). இவர் மூகாம்பிகை என்ஜினீயரிங் கல்லுாரியில் டைப்பிஸ்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் புதிய வேலை ஒன்றில் சேர்வதற்காக நடத்தப்படும் இண்டர்வியூவில் கலந்து கொண்டு வருவதாக தனது வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் பலன் இல்லாததால், திருச்சி உறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய போது மாயமான ஐஸ்வர்யாவிற்கும், அதே கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றும் தேவா என்பவருக்கும் காதல் இருந்து வந்தது தொிய வந்துள்ளது. அதனால் அந்த பேராசிரியருடன் ஐஸ்வர்யா ஓட்டம் பிடித்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
- வீட்டில் இருந்த 7 ஆடுகள் மாயமானது
- வழக்கு பதிந்து போலீசார் விசாரணை
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள வெண்ணாவல்குடி ஊராட்சி சூத்தியன்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 56) இவரது 2 ஆடும்'அதே பகுதியை சேர்ந்த வடக்கு அக்ரஹாரம் அடைக்கலம் மகன் பார்த்திபன் ( 44) இவரது 5 ஆடுகள் என மொத்தம் 7 ஆடுகளை வீட்டின் பின்புறத்தில் கட்டி வைத்திருந்தனர். அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஆடுகளை காணமால் கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஆலங்குடி போலீசில் புகார் கொடுத்தனர். புகாரி ன் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல்போன ஆடுகளை தேடி விசாரித்து வருகின்றனர்.
- நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்தவர் கரையேறவில்லை.
- மாயமான வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நடுத்தெரு நடேசன் மகன் அருள் (வயது 30).லோடு மேனான இவர், தேவூர் கடைத்தெரு பகுதியிலுள்ள கடுவையாற்றில் கை கழுவ சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நிலை தடுமாறி ஆற்றில் தவறி விழுந்தவர் கரையேறாத நிலையில், அருகிலிருந்தவர்கள் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அவரது கதி என்ன ஆனது என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
- மனநிலை பாதிக்கப்பட்டவர் மாயமானார்
புதுக்கோட்டை:
ஆலங்குடி கம்பர் தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் ரமேஷ் (வயது 47) மன நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த இவர், சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குபதிவு செய்து காணாமல் போன ரமேஷை தேடி வருகின்றனர்.
- குழந்தையுடன் இளம்பென் மாயமானார்
- குடுமப தகராறு அடிக்கடி நடக்குமாம்
திருச்சி
திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் இவரது மனைவி (வயது 22) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்பத் தகராறு காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்தனர். இந்தநிலையில் மணிமொழி சம்பவத்தன்று தனது குழந்தையுடன் வீட்டில் இருந்து மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கேயும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வெங்கடேஷ் உறையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் மாயமான மணிமொழியை தேடி வருகின்றனர்.
- ஆட்டோவில் பெண் தவறவிட்ட பணத்தை டிரைவர் ஒப்படைத்தார்.
- அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது.
மதுரை
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சோனாலி. இவர் குடும்பத்தினருடன் மதுரை வந்தார். அவர்கள் நேற்று இரவு ஆட்டோவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்ேபாது சோனாலி நகை மற்றும் பணப்பையை ஞாபக மறதியாக ஆட்டோவில் வைத்து விட்டு இறங்கி விட்டார். அதன் பிறகு தான் இவருக்கு பணப்பை தொலைந்து போனது நினைவுக்கு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சோனாலி, இதுகுறித்து போக்குவரத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த வழியாக வந்த மத்திய போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமாரிடம் சோனாலி நடந்த விவரங்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த ஆட்டோ குறித்து கண்காணிப்பு காமிரா உதவியுடன் தேடினர். இதற்கிடையே அந்த ஆட்டோ டிரைவர் மீண்டும் சம்பவ இடத்துக்கு வந்து சோனாலியிடம் பணப்பையை திரும்ப ஒப்படைத்தார். அதில் ரூ.5 ஆயிரம் மற்றும் தங்க நகை இருந்தது. வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரமேசை போக்குவரத்து போலீசார் பணமுடிப்பு வழங்கி பாராட்டினர்.
- கல்லூரி மாணவி, இளம்பெண் உள்பட 6 மாயமானார்கள்.
- வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகே உள்ள பெரிய புளியம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் பாபுகண்ணன் (வயது 32). மனநலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாயமானார். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள நல்லுக்குறிச்சி காலனியை சேர்ந்தவர் பாலு (40). இவர் திண்டுக்கல்லில் உள்ள தேங்காய் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு செல்வி (36) என்ற மனைவியும், திருமுருகன் (13) என்ற மகனும், அனிதா (10) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வி தனது மகன், மகளுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலு வீரசோழன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி
தேனி மாவட்டம் வாழை மரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகள் ராஷ்மி(17). இவர் விருதுநகரில் உள்ள பெண்கள் கல்லூரியில் படித்து வந்தார்.
இதற்காக விடுதியில் தங்கியிருந்தா ராஷ்மி சம்பவத்தன்று திடீரென்று மாயமானார். இதுகுறித்து அவரது தாய் மல்லிகா கொடுத்த புகாரின்பேரில் பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பி பட்டியை சேர்ந்த கந்தம்மாள். இவரது மகன் லட்சுமணன்(14). சம்பவத்தன்று இவர் திடீரென மாயமானார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.