ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்

நிலை தடுமாறி ஆற்றில் தவறி‌ விழுந்தவர் கரையேறவில்லை.மாயமான வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர்.
ஆற்றில் மூழ்கிய வாலிபரை தேடும் பணி தீவிரம்
Published on

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம் நடுத்தெரு நடேசன் மகன் அருள் (வயது 30).லோடு மேனான இவர், தேவூர் கடைத்தெரு பகுதியிலுள்ள கடுவையாற்றில் கை கழுவ சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிலை தடுமாறி ஆற்றில் தவறி‌ விழுந்தவர் கரையேறாத நிலையில், அருகிலிருந்தவர்கள் கீழ்வேளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சம்ப இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அவரது கதி என்ன ஆனது என்று தெரியாததால் குடும்பத்தினர் கவலையில் உள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com