search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேலப்பாளையம் அருகே 2 இளம்பெண்கள் மாயம்

    மேலப்பாளையம் அருகே மாயமான 2 இளம்பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நெல்லை:

    மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி ஆண்டவர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் கனகா (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம், பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (22). இவர் தனது அக்காள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து அவரது தாய் சுப்புலெட்சுமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்கள் எங்கு சென்றார்கள் என தேடி வருகின்றனர். 
    Next Story
    ×