search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "refuse"

    • நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.
    • சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பேரூராட்சி 14-வது வார்டு சுகந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 25). இவர் அதே பகுதியை சேர்ந்த சோபிகா (17) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று சோபிகா தனது கணவர் வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலை கட்டப்பட்டு கழுத்து இறுகிய நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோபிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சோபிகாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி இன்று காலை பெற்றோர் கவிதா- முருகேசன் மற்றும் உறவினர்கள் சோபிகா உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரியில் கதறி அழுதனர்.

    பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அவர்கள் கலெக்டர் அலுவலக வளாக பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து சோபிகாவின் கணவர் அஜித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அழுது புரண்டு போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சோபிகாவின் பெற்றோர் கவிதா-முருகேசன் தம்பதி கண்ணீர் மல்க போலீசாரிடம் கூறியதாவது:-

    எங்களது மகளுக்கு 17 வயது தான் ஆகிறது. இதனால் திருமணத்திற்கு முன்பு நாங்கள் அஜித்க்கு திருமணம் ெசய்து கொடுக்க மறுப்பு தெரிவித்து தர்மபுரியில் உள்ள உறவினர் ஒருவடைய வீட்டில் சோபிகாவை மறைத்து வைத்தோம். இதை அறிந்த அஜித் அங்கு வந்து சோபிகாவை கட்டாயப்படுத்தி அவரை அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பிறகு அஜித் அடிக்கடி சோபிகாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார். நேற்று அஜித் சோபிகாவிடம் ரூ.10 ஆயிரம் பெற்றோரிடம் இருந்து வாங்கி வருமாறு கூறினார். ஆனால் எங்களின் குடும்ப கஷ்டத்தை பார்த்து மகள் பணம் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் அஜித் அவரை திட்டியுள்ளார்.

    சோபிகா தற்கொலை செய்யவில்லை. அவரது கழுத்தில் கயிறு போட்டு இறுக்கப்பட்டுள்ளது. கழுத்தில் காயம் உள்ளது. எனவே மகளின் சாவில் சந்தேகம் இருக்கிறது. அஜித் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சோபிகா உடலை வாங்க மாட்டோம். இவ்வாறு பெற்றோர் கூறினர்.

    இது தொடர்பாக போலீசாா் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுப்பெண் திருமணம் ஆகி 4 மாதங்களிலேயே மர்மமான முறையில் இறந்து விட்டதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலமும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.
    • கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட மக்கள் இன்று மாவட்ட கலெகடர் அலுவலகம் வந்தனர்.

    அவர் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகையிட முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து புகார் அளிக்க வந்த மகேஸ்வரி கூறும்போது, மலைப்பகுதியான ஏற்காடு சுனைப்பாடி, பட்டிபாடி, வேலூர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நூறாண்டு காலமாக சாலை வசதி இல்லாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமலும் தவித்து வருகிறோம்.

    மேலும் கர்ப்பிணி பெண்களை தொட்டிலில் கட்டிக்கொண்டு தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. இதனால் உயிரி ழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் எங்கள் ஊருக்கு பெண் கொடுக்க மறுக்கின்ற னர். காரணம் சாலை வசதி இல்லாத பகுதியில் பெண்ணை கொடுக்க விருப்பம் இல்லை என தெரிவிக்கின்றனர்.

    இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது குறித்து பலமுறை அதிகாரி களை சந்தித்து மனு வழங்கி யும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக தலையிட்டு எங்கள் பகுதியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ சித்ரா உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    சேலம்:

    சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக அந்த கட்சி யினர் சேலம் மாவட்டம் முழுவதும் நிதி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அருணாச்சல ஆசாரி தெரு பகுதியில் உள்ள வட மாநிலத்தவர்களின் மொத்த வியாபார கடைகளுக்கு அந்த கட்சி நிர்வாகிகள் சிலர் சென்றனர், அவர்கள் கடைக்காரர்களிடம் கட்டாயமாக ரூ.500 தர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

    இதில், மகாவீரர் என்ற வடமாநிலத்தவர் நடத்தி வரும் துணிக்கடையில் பணம் கேட்டபோது, தற்போது வியாபாரம் சரிவர நடைபெறவில்லை எனக் கூறி 100 ரூபாயும், 200 ரூபாயும் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திராவிடர் விடுதலைக் கழகத்தினர், தமிழர்கள் மூலம் வியா பாரம் நடத்திக் கொண்டு எங்களுக்கு மாநாட்டுக்கு நிதி தர மறுப்பதா என கூறி கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.

    இதனால் அவர்களுக்கி டையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் நிதி வசூலிக்க வந்தவர்கள் வியாபாரி மகாவீரரை ஒருமையில் பேசி தாக்க முயன்றதோடு மிரட்டி சென்றதாக தெரி கிறது. உடனே மகாவீரர் தொலைபேசி மூலம் போலீசாரை தொடர்பு கொண்டு நடந்தவற்றை கூறினார். பின்பு அவர், அருணாச்சலஆசாரி தெரு சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அங்கு வந்த சேலம் நகர போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

    இதனிடையே சேலம் மில் ஜவுளி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக திராவிட விடுதலைக் கழகத்தை சேர்ந்தவர்கள் மீது சேலம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லியை சேர்ந்த இளம்பெண்ணை கும்பகோணத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தினேஷ், அன்பரசு, வசந்த், புருசோத்தமன் ஆகிய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். #kumbakonamdelhigirlmolestation

    கும்பகோணம்:

    டெல்லி பெண்ணை 4 வாலிபர்களும் மிக கொடூரமாக இரக்கமற்ற முறையில் பலாத்காரம் செய்து இருக்கிறார்கள். வங்கி உயர் அதிகாரி பயிற்சிக்காக டெல்லியில் இருந்து வந்த அந்த பெண் எழும்பூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார்.

    சென்னையில் இருந்து புறப்பட்டதும் ஏற்கனவே கும்பகோணத்தில் தங்கி பயிற்சி பெற்றுவரும் சக தோழிகளிடம் தான் வரும் விபரத்தை சொல்லி டூவீலரில் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு வரச்சொல்லி இருக்கிறார்.

    இரவு 10.20 மணிக்கு கும்பகோணத்தில் இறங்கிய போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் அந்த பெண்களால் ரெயில் நிலையத்துக்கு செல்ல முடிய வில்லை. அவர்களிடம் ஓட்டல் முகவரியை வாங்கி ஆட்டோவில் செல்ல முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்தில் ஆட்டோக்கள் இல்லை. சிறிது தூரத்தில் ஒரு ஆட்டோ பயணிகளை இறக்கிவிட்டது.

    அந்த ஆட்டோ டிரைவரிடம் சென்று கேட்டுள்ளார். அவர் அந்த பெண்ணை ஏற்றிச் சென்றுள்ளார். அந்த பெண் செல்ல வேண்டிய ஓட்டல் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 1½கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.

    சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாகியும் ஆட்டோ ஓட்டலை சென்றடைய வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் கத்தி இருக்கிறார்.

    உடனே அந்த ஆட்டோ டிரைவர் செட்டிப்பள்ளம் பைபாஸ் ரோட்டில் இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார். நள்ளிரவில் நடு ரோட்டில் தவித்த அந்த பெண் டிராலிபேக்கை இழுத்தபடி நடந்து சென்றுள்ளார்.


    தன்னந்தனியாக வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் வந்ததைப் பார்த்ததும் தினேஷ் அருகில் சென்று அந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசி எங்கு செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் ஓட்டல் விலாசத்தை கூறியதும் நாங்கள் கொண்டுவிடுகிறோம் என்று கூறி இருக்கிறான். அதை நம்பி அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி இருக்கிறார். அதே பைக்கில் வசந்தும் ஏறிக்கொண்டான்.

    நம்பி சென்ற இளைஞர்கள் இப்படி நாசம் செய்வார்கள் என்று அந்த பெண் நினைக்கவில்லை. இவர்கள் 4 பேரும் படித்த வேலை இல்லாத இளைஞர்கள். தினேஷ் மட்டும் வட்டிக்கு பணம் கொடுக்கும் வேலை செய்கிறார்.

    அன்று இரவு ஒரு குவார்ட்டர் பாட்டில் மதுவை வாங்கி 4 பேரும் குடித்து விட்டு, கஞ்சா புகை பிடித்து இருக்கிறார்கள். போதை தலைக்கேறி இருந்த நேரத்தில் தான் டெல்லி பெண் அவர்களிடம் சிக்கி இருக்கிறாள்.

    ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்குள் கொண்டு சென்று குண்டும் குழியுமாக கிடந்த ரோட்டில் வைத்து அந்த பெண்ணை 4 பேரும் சித்ரவதை செய்து இருக்கிறார்கள். ஏற்கனவே மாத விடாய் வலியால் தவித்த அந்த பெண் நாலு மிருகங்களிடமும் கதறி இருக்கிறார். ஆனால் அவர்களுக்கு இரக்கம் வரவில்லை.

    இரவு 12.15 மணி முதல் 2.15 மணி வரை குரூரமாக நடந்து இருக்கிறார்கள். உடலில் ரத்தம் வழிய துடித்த அந்த பெண்ணை ஆடைகளை சரி செய்ய சொல்லி அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டுள்ளார்கள்.

    அப்போது தினேஷ் ஒரு மொபைல் எண்ணை ஆட்டோ டிரைவரிடம் சொல்லி அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள சொல்லி இருக்கிறான்.

    அந்த எண்ணை அந்த பெண் மனப்பாடம் செய்து கொண்டார். செல்போனில் தொடர்புகொண்ட அந்த நபர் வந்ததும் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்று ஓட்டலில் இறக்கி விட்டுள்ளார்கள்.

    அப்போது நடந்த விபரங்களை வெளியே சொன்னால் இங்கு வேலை பார்க்க முடியாது. தொலைத்து விடுவோம் என்று மிரட்டி இருக்கிறார்கள்.

    நள்ளிரவில் ரத்த காயங்களுடன் வந்து நின்ற தோழியை பார்த்து நடந்த விபரங்களை கேட்டதும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக டெல்லியில் உள்ள வங்கி உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உடனடியாக தஞ்சை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த பெண்ணிடம் விசாரித்து இருக்கிறார்கள்.

    இதற்கிடையில் நடந்த விபரங்களை கேள்விப்பட்டு டெல்லியில் இருந்து அவரது தந்தை கும்பகோணத்துக்கு விரைந்து வந்தார். நடந்த விபரங்களை சொல்லி தந்தையிடம் கதறி அழுதார்.

    அந்த பெண் மனதில் பதிந்து வைத்திருந்த செல்போன் நம்பரை வைத்துதான் போலீசார் துப்புதுலக்கி 4 பேரையும் கைது செய்து இருக்கிறார்கள்.

    கைது செய்யப்பட்டவர்களில் புருசோத்தமன், அன்பரசு ஆகியோருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    பரிசோதனைக்குப் பிறகு இருவரும் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    முதலில் அந்த பெண்ணை ஏற்றி சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவருக்கும் இந்த வாலிபர்களுக்கும் தொடர்பு உண்டா? அவர் சுற்றி சுற்றி சென்று நடு வழியில் இறக்கிவிட்டது ஏன்? என்பது தெரியவில்லை. எனவே அவரை தேடி வருகிறார்கள்.

    பாலியல் பலாத்காரத்துக்கு மூலகாரணமாக விளங்கும் அந்த ஆட்டோ டிரைவரை இதில் குற்றவாளியாக அறிவித்து அவரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் கும்பகோணத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போராடி வருகிறார்கள்.

    குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என்று வக்கீல்களும் முடிவு செய்து இருக்கிறார்கள். #kumbakonamdelhigirlmolestation

    வெம்பக்கோட்டை பகுதியில் 5 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுக்கும் நிலை உள்ளது.
    தாயில்பட்டி:

    ரூபாய் நோட்டு பயன்பாட்டில் அவ்வப்போது ஏதாவது ஒரு வதந்தி கிளம்பி அனைவரையும் அல்லல் படுத்தும். இதில் முத்தாய்ப்பாக ரூ.10 நாணயம் செல்லாது என்று பரவிய தகவல் நீண்ட நாட்களாக பெரும் சிரமப்படுத்தியது. எல்லோரும் நாணயத்தை வாங்க மறுத்த நிலையில் வங்கிகளும் ரூ.10 நாணயம் செல்லும் அதை வங்கிக்கு கொண்டுவருவதை விட புழக்கத்தில் விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    இத்தகைய சூழலில் வெம்பக்கோட்டை பகுதியில் சமீபகாலமாக 5 ரூபாய் நோட்டுகளை கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வாங்க மறுக்கும் நிலை உருவாகி இருக்கிறது. பொதுமக்களும் மற்றவர்களிடம் இருந்து நோட்டுகளை வாங்காமல் நாணயமாக கொடுத்து விடுங்கள் என்று கூறுகின்றனர். இதேபோல அரசு பஸ் கண்டக்டர்களும் இந்த நோட்டுகளை வாங்குவதில்லை. அவர்களிடம் கொடுத்தால், மற்ற பயணிகள் வேண்டாம் என்று ரூ.5 நோட்டை ஒதுக்குவதால் தம்மாலும் வாங்க இயலாது என்று கூறுகின்றனர்.

    தற்போது மற்ற ரூபாய் நோட்டுகள் புதிதாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ள நிலையில், 5 ரூபாய் நோட்டுகள் மட்டும் பழைய தாள்களே புழக்கத்தில் உள்ளன. இதனால் அதை ஒருவர் ஒதுக்க அதுவே எங்கும் பரவிவிட்டதாக கூறப்படுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர புதிய நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 
    உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்தவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததால் மனமுடைந்த பெண் தீயிட்டு தற்கொலை செய்துகொண்டார். #UttarPradesh
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வர்கிறது. உ.பி. மட்டுமன்றி இந்தியா முழுவதும் இந்த அவலநிலை உருவாகி வருவதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் பாதுகாப்பின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    அதே சமயம், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளில் சிலர், தங்கள் பணியை முறையாக செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் சாஜஹான்பூர் பகுதியில் தன்னை கற்பழித்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுத்ததுடன், குற்றவாளியுடன் சமரசம் செய்துகொள்ள அறிவுறுத்தியதால் மனமுடைந்த பெண் காவல்நிலையத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதையடுத்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #UttarPradesh
    வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை அங்கீகரித்து மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை மீனவர்கள் ஏற்க மறுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFlood #Fishermen #Refuse
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மத்திய-மாநில மீட்புக்குழுவினருடன் இணைந்து நூற்றுக்கணக்கான மீனவர்களும் சேவையாற்றி வருகின்றனர். மீட்புக்குழுவினர் செல்ல முடியாத இடங்களுக்கும் இவர்கள் தங்கள் படகுகளில் சென்று ஆயிரக்கணக்கான மக்களை மீட்டுள்ளனர்.



    மீனவர்களின் இந்த தன்னலம் கருதாத சேவையால் மாநில அரசு மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளது. அவர்களின் பணியை வெகுவாக பாராட்டிய முதல்-மந்திரி பினராயி விஜயன், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களை ‘மாநிலத்தின் ராணுவம்’ என வர்ணித்துள்ளார்.

    மேலும் அந்த மீனவர்களின் படகுக்கு தேவையான எரிபொருளை அரசே வழங்குவதுடன், ஏதாவது பழுது நேர்ந்தால் அரசு செலவில் சீரமைக்கப்படும் எனவும் அறிவித்தார். அத்துடன் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ள மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

    தங்கள் பணியை அங்கீகரித்து முதல்-மந்திரி வெளியிட்ட இந்த அறிவிப்பு, மீனவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் தங்களுக்கு அறிவித்திருக்கும் ஊதியத்தை அவர்கள் ஏற்க மறுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த கியாஸ் முகமது என்ற மீனவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறுகையில், ‘எங்களின் சேவையை முதல்-மந்திரி பாராட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த பணி சவாலானது என்றாலும், அதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறோம். மாநில அரசின் ராணுவம் என எங்களை புகழ்ந்திருப்பது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    எனினும் தங்கள் சேவைக்கு ரூ.3 ஆயிரம் ஊதியம் தருவதாக அறிவித்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக கூறிய அவர், எங்கள் சகோதர-சகோதரிகளை காப்பாற்றுவது எங்களது கடமை என்றும், அவர்களின் உயிர்காக்கும் பணிக்கு ஊதியம் வேண்டாம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.   #KeralaFlood #Fishermen #Refuse
    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் மின்னலை பார்த்து மணமகன் பயந்ததால் மணமேடையிலேயே மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பொதுவாக, வடமாநிலங்களில் சில திருமணங்கள் வினோத காரணங்களுக்காக மேடையிலேயே நின்றுபோகும் நிகழ்வு அவ்வப்போது நடக்கிறது. உதாரணமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டாருக்கு ரசகுல்லா இல்லை என்பதற்காக நிறுத்தப்பட்ட கல்யாணம், ஐஸ் கிரீம் வைக்காததால் ஏற்பட்ட தகராறில் மண்டை உடைப்பு என திருமணம் நிறுத்தப்படுவதற்கான காரணங்கள் நீள்கின்றன.

    இந்த வரிசையில், பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் நடந்த திருமணத்தின்போது மணமேடையில் இருந்த மாப்பிள்ளை மின்னலை பார்த்து பயந்து, வினோதமாக நடந்து கொண்டார். இதனைக் கண்ட மணப்பெண்ணோ மேடையிலேயே மாப்பிள்ளை வேண்டாம் எனக்கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

    இதனால் இரு வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, மாப்பிள்ளை வீட்டார் சிலர் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது. சில வினாடிகள் தோன்றி மறைந்த மின்னல் மணமகனுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியா நினைவாக மாறிவிட்டது. 
    ×