search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl"

    • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
    • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

    பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தேடி வருகின்றனர்.
    • பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாயார் அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியிடம் கூறி உள்ளார். ஆனால் சிறுமி செல்ல மறுத்து அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் ரவி என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதன் காரணமாக சிறுமி கடைக்கு செல்ல மறுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    • பெண்ணின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.
    • அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஆறுமுக நாடார் தெருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் பேகம். இவருடைய கணவர் ஷாகுல் ஹமீது. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு 3 குழந்தைகள் இவர்கள் மூன்று பேரும் திருவாரூரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக சென்று விட்டு யாஸ்மின் பேகம் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் கதவைத் திறந்து உள்ளே சென்ற போது 22 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் உள்ளே மறைந்து இருந்து ஜாஸ்மின் பேகம் உள்ளே நுழைந்ததும் அவரின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்குகியுள்ளார்.

    இதில் மயக்கம் அடைந்து ஜாஸ்மின் பேகம் சம்பவ இடத்தில் கீழே விழுந்துள்ளார்.

    அப்போது அவர் கழுத்து மற்றும் காலில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து அவர் தப்பி ஓடியுள்ளார்.

    ஜாஸ்மின் பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதுகுறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் 15 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது சிறுவன், சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர். சிகிச்சை முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதன்படி சிறுமியின் தாயார், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

    • 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார்.
    • நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி பால்வாடிக்கு சென்று வீடு திரும்பினார். அங்கு நின்று கொண்டிருந்த 2 சிறுவர்கள், 5 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். வீட்டிற்கு அழுது கொண்டே வந்த சிறுமி, நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறினார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட 10-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    • சதீஷ்குமார் கூலி வேலை செய்து வருகிறார்.
    • போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:  

    சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிமேகலை மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் கணவன் சதீஷ்குமார் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் மணிமேகலையை தேடி வருகின்றனர்

    • வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார்.

    அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீனு சிறுமியிடம் நைசாக பேசி ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    மறைவான இடத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அருகில் இருந்த குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிர்த் தப்பி குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.

    சிறுமியின் பாட்டி இதுகுறித்து போர்னாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மகளிர் போலீசார் விசாரணை
    • பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் சேர்ந்த விக்னேஷ் (வயது 32) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.
    • சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்தனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிக்கிறீர்கள் என்று கேட்டனர். மேலும் சிறுமியின் காதலனை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர். காளி வேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும், சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காளி வேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது, ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.

    குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாசினி மற்றும் அவரது மகள்களை கொல்ல சுரேஷ் முடிவு செய்தார். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கோதாவரி ஆற்று பாலத்திற்கு சென்றார். அப்போது பாலத்தில் நின்று செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

    திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

    சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியம் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிறுமி லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

    ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இக்கட்டான நிலையில் சிறுமி 100-க்கு போன் செய்தார்.

    எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு அந்த சிறுமி பதிலளித்தார், நாங்கள் அவளுக்கு தைரியத்தை ஊட்டினோம். ஒரு கையால் குழாயில் ஒட்டிக்கொண்டு, மறுபுறம் மொபைல் போனை வைத்துக்கொண்டு தொங்கினார். லட்சுமி கீர்த்தனா, டார்ச் லைட் வெளிச்சத்தை அவளைக் கண்டதும் உதவிக்காக கத்தினார்.

    "காலை 3.53 மணிக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி கீர்த்தனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ரவுலபாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் டார்ச் லைட் மூலம் சிறுமியை கண்டுபிடித்தனர்.

    லட்சுமி கீர்த்தனா இருட்டில் குழாயில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சுமார் 36 நிமிடங்கள் வரை அவர் மன தைரியத்துடன் இருந்தார். தைரியமாக போலீசுக்கு ஒத்துழைத்தார்".

    அவர் உயிருக்கு போராடிய நேரத்திலும் 100-க்கு போன் செய்து போலீசாரை அழைத்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    • இளம்பெண் உள்பட 2 பேர் மாயமானtர்கள்.
    • பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை கடச்சனேந்தல் அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் தம்பிராஜ். இவரது மகன் பால்பாண்டி(வயது30). இவருக்கு திருமணமாகி வினோதினி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்த்துவிட்டு வருவதாக பால்பாண்டி, மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து வினோதினி அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை தேடி வருகின்றனர்.

    இளம்பெண்

    மதுரை அவனியா புரத்தை அடுத்துள்ள பெருங்குடி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சிவரஞ்சனி(20). சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்கு சென்றுவிட வீட்டில் இருந்த சிவரஞ்சனி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    சேலம்:

    சேலம் வீராணம் பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் 2-வது அக்ரகாரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது அவரது மனைவி அருகில் இருந்து அவரை கவனித்து வந்தார். பின்னர் 2 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.

    ஆபாச வீடியோ

    இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் நீ ஆஸ்பத்திரியில் தங்கி இருந்த போது குளித்த வீடியோ என்னிடம் உள்ளது. நான் அழைக்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கதறினார்.

    இதற்கிடையே அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    மிரட்டல்

    இந்தநிலையில் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர் நான் கூப்பிடும் இடத்திற்கு வராவிட்டால் குளிக்கும் வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினார். இதனால் பயந்து போன அந்த பெண் சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது 2 முறையும் வெவ்வெறு செல்போன் எண்களில் இருந்து அந்த நபர் பேசியது தெரிய வந்தது. மேலும் தனது கணவர் சிகிச்சையில் இருந்த போது பக்கத்து படுக்கையில் இருந்த நபர் நான் குளிக்கும் போது வீடியோ எடுத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக அந்த பெண் கூறி உள்ளார்.

    செல்போன் எண்ணை வைத்து விசாரணை

    இதையடுத்து அந்த பெண்ணுக்கு பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்த நபர் தலைமறைவானது தெரிய வந்தது.

    அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    ×