search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl"

    • இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சத்யா (வயது 35). பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவர் சத்யா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை திடீரென்று பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து செயின் பறிப்பு ஆசாமியை தேடி வருகின்றனர்.

    • சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி, இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தை அடுத்த சேலத்தாம்பட்டியை சேர்ந்தவர் குமார் , மூட்டை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி (29), இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் குமார் கடந்த தீபாவளி பண்டிகையன்று குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். மேலும் தீபாவளிக்கு புதிய ஆடைகள் எதுவும் எடுத்து கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ரேவதி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கீழ்வேளூர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

     நாகப்பட்டினம்:

    கீழ்வேளூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்

    வேளூர் அருகே ஆழியூர் பிரிவு சாலையில் சிக்கவலம் தோப்பு தெருவை சேர்ந்த சுரேஷ் (வயது 42), சிக்கல் அய்யனார்

    கோவில் தெருவில் நாகை செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த நல்லபிள்ளை மனைவி போதுமணி (55)

    ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமி சத்தம் போடவே அவரது பெற்றோர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.
    • படுகாயம் அடைந்த சிவக்குமாருக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை ரெயில்வே கேட் அருகில் காலனி தெருவில் வசித்து வருபவர் சிவக்குமார் (வயது35).

    இவர் ஆடுதுறை ரெயில் நிலையத்தின் வெளியே உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று அந்த சைக்கிள் ஸ்டாண்டுக்கு வந்த 11 வயது சிறுமியிடம், சிவகுமார் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது சிறுமி சத்தம் போடவே சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஓடிச்சென்று சிறுமியை மீட்டனர்.

    மேலும் சிவகுமாரை தாக்கி உள்ளனர்.

    இதில் படுகாயம் அடைந்த அவருக்கு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனர்.

    • மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

      பல்லடம்:

    பல்லடம் அருகே தெற்குப்பாளையம் முத்துநகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி அருக்காணி (வயது 60). இவர் அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்கு கடன் வாங்கினார். அதனை கடந்த 4 வருடமாக மாதந்தோறும் தவணையாக பணம் செலுத்தி வந்தார்.

    இ்ந்த நிலையில் இவருடைய கணவர் செல்வராஜ் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டதால் அவருடைய ஒரு கால் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களாக தவணை தொகை செலுத்தவில்லை.

    இந்த நிலையில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அருக்காணி வீட்டிற்கு வந்தனர். அப்போது அங்கு இருந்த அருக்காணியிடம் கடந்த 4 மாதமாக தவணை தொகை செலுத்தாததால் வீட்டை பூட்டப்போவதாக தெரிவித்தனர்.

    இதனால் மன வேதனை அடைந்த அருக்காணி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருக்காணியை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார்
    • இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே பூண்டி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் உதயகுமார்(வயது20). இவர் ஆயுத பூஜைக்காக வீட்டில் மின் விளக்கு எரிய வைக்க மின் இணைப்பு கொடுத்தார். அப்போது பக்கத்து வீட்டு சிறுமி வீடு இருட்டாக இருக்கிறது என்று நினைத்து ஸ்விட்ச் போட்டார். இதில் மின்சாரம் தாக்கியதில் உதயகுமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். 

    தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.

    கடலூர்:

    வேப்பூர் அருகே தரைக் கிணற்றில் தவறி விழுந்து 6வயது குழந்தை பலியானது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சித்தேரி காலனியை சேர்ந்தவர் மணி. கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிஷ்கா(வயது6).இவள் சித்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று சிறுமி கனிஷ்காஅப் பகுதியில் உள்ள வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள200 அடி ஆழ தரைக் கிணற்றில் தவறி விழுந்தாள்.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு ஓடி வந்து சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே சிறுமி கனிஷ்கா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார்.
    • தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கலிபோர்னியா:

    மீன் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என சொல்வார்கள். ஆனால் அதனை சாப்பிட்ட பெண் ஒருவர் கை, கால்களை இழந்து உயிருக்கு போராடி வருகிறார். அவரது பெயர் லாரா பராசாஸ் (வயது 40) அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் உள்ளூரில் உள்ள சந்தைக்கு சென்று திலப்பியா என்ற மீனை வாங்கி வந்து வீட்டில் சமைத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டது. கை விரல்கள் கறுப்பாக மாறியது. பாதங்கள் மற்றும் கீழ் உதடு கறுப்பானது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் கோமா நிலைக்கு சென்றார். சிறுநீரகமும் பாதிக்கப்பட்டது. மேலும் கை, கால்களும் முற்றிலும் செயல் இழந்ததால் உயிருக்கு போராடி வருவதாக லாரா பராசாஸ் தோழி மெசினா தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.லாரா கிட்டத்தட்ட தன் உயிரை இழந்துவிட்டார். அவருக்கு சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது. கடல் உணவுகளில் பொதுவாக கொடிய பாக்டீரியாக்கள் காணப்படும். இந்த உணவுகளை முறையாக தயார் செய்து சாப்பிடாவிட்டால் உடலுக்கு தொந்தரவு கொடுக்கும்.

    சந்தையில் இருந்து வாங்கி வந்த மீனை சரியாக வேக வைக்காமல் அப்படியே சாப்பிட்டதால் இந்த நிலைக்கு ஆளாகிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சுவிட்சை தொட்ட பொழுது மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்து ள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தார்.

    கடலூர்:

    வடமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இதுஅடுத்த 24 மணிநேரத்தில், மேலும் வலுவடைந்து தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா, தெற்கு சட்டீஸ்கர் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று இரவு கடலூர் மாவட்டத்தில் பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்தது .கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாச்சலம், அண்ணாமலை நகர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, வேப்பூர், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

    பலத்த மழை காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் காலை நேரங்களில் கடும் வெயிலும் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு ெபாதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    வானமாதேவி - 32.0, குப்பநத்தம் - 31.0,குறிஞ்சிப்பாடி - 30, வடக்குத்து - 30,அண்ணாமலைநகர் - 26.4,விருத்தாசலம் - 26.0, பரங்கிப்பேட்டை - 22.8, கடலூர் - 21,கொத்தவாச்சேரி - 21, பண்ருட்டி - 20, எஸ்.ஆர்.சி. குடிதாங்கி - 18, கலெக்டர் அலுவலகம் - 17.2, லக்கூர் - 15.4,. காட்டுமயிலூர் - 15,காட்டுமன்னார்கோவில் - 14.3, புவனகிரி - 14, மீ-மாத்தூர் - 14, சிதம்பரம் - 11, வேப்பூர் - 10,தொழுதூர் - 8.5, சேத்தியாதோப்பு - 8, லால்பேட்டை - 8, பெல்லாந்துறை - 6.2,கீழ்செருவாய் - 4. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 423.80 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. 

    • போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார்.
    • குமரகுரு என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (வயது24) பி.காம் பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் பிற்பகல்3.30 மணிக்கு பண்ருட்டி பஸ் நிலையம் அருகில் உள்ள கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றார். இரவு வரை வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெண்ணின் தந்தை சின்னதுரை புகார் கொடுத்தார். புகாரில் குமரகுரு (28) என்ற வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக கூறியுள்ளனர். இது குறித்துபண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

    • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
    • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

    பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை தேடி வருகின்றனர்.
    • பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி அங்குள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று அவரது தாயார் அருகில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வருமாறு சிறுமியிடம் கூறி உள்ளார். ஆனால் சிறுமி செல்ல மறுத்து அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் ரவி என்பவர் சிறுமியிடம் அத்துமீறி நடந்து பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதன் காரணமாக சிறுமி கடைக்கு செல்ல மறுத்துள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட் சிறுமியின் தாயார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரவி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    ×