search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே  மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்
    X

    பண்ருட்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன்

    • சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தில் 15 வயது பெண் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 6-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 25 வயது சிறுவன், சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    மேலும், அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியில் வரும் போதெல்லாம், மறைவான இடத்திற்கு அழைத்து சென்ற சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் மருத்து வமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை பெற்றோரிடம் கூறினர். சிகிச்சை முடிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதன்படி சிறுமியின் தாயார், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

    Next Story
    ×