search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father"

    • ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
    • இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 43 வயது நிரம்பிய லாரி டிரைவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மனைவிக்கு கண் பார்வையில் கோளாறு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மூத்த மகளான 17 வயது சிறுமி ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது தந்தை தான் 6-ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்து தனக்கு பாலியல் தொல்லை ெகாடுத்து வருகிறார். இது பற்றி தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தெரிவித்தேன். போலீசார் எனது தந்தையை அழைத்து எச்சரித்து அனுப்பினார்கள். அப்போது எனது தந்தை இனிமேல் இது பற்றி வெளியே சொன்னால் என்னையும் எனது அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டினார். இதனால் நான் பயந்து எனது சித்தி வீட்டுக்கு சென்றேன். அங்கேயும் வந்து எங்களை அடித்து விரட்டினார். எனவே எனது தந்தை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார்.
    • மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் தா. பழூர் அணை குடம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபால் (வயது 70). விவசாயி இவருக்கு சுப்பிரமணியன் (42) சுவாமிநாதன் (40) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் சுப்பிரமணியன் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையான சாமிநாதன் சரியாக வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு ஊர் சுத்தி வந்தார். இதனை அவரின் தந்தை கோபால் கண்டித்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சாமிநாதன் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதைப் பார்த்ததும் தந்தை கோபால் மகனை திட்டி உள்ளார். ஆத்திரமடைந்த சாமிநாதன் தந்தையை கையால் தாக்கி தள்ளினார். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதி பலத்த காயம் ஏற்பட்டது,

    இதனை பார்த்த அவரது மூத்த மகன் சுப்ரமணியன் தந்தையை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கோபால் உயிரிழந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் தா பழூர் போலீசில் புகார் செய்தார் அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மது குடிப்பதை கண்டித்ததால் தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார்.
    • பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சென்னை:

    சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கிண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை போலீசார் கைது செய்தனர் போலீஸ் விசாரணையில் ஜெபரீஷ் வேலை இல்லாமல் சுற்றி திரிவதை தந்தை பாலசுப்ரமணி தட்டி கேட்டு அடிக்கடி தகறாரில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது.

    • போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த தேவிசெட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தாம்பரம் இந்திய விமானப்படை தளத்தில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஹேமலதா(21).

    கர்ப்பமாக இருந்த ஹேமலதாவுக்கு கடந்த 26 நாட்களுக்கு முன்பு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை உடன் தாய் ரெட்டியூரில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.

    இந்நிலையில் மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு குழந்தையை பார்க்க ரெட்டியூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.

    அங்கு மனைவி மற்றும் பிறந்த ஆண் குழந்தையை பார்த்தார். குழந்தையின் ஜாடை என்னை போல் இல்லை. இந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என கூறி மனைவி ஹேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தன் கையில் வைத்திருந்த, பிளேடால் பிறந்து 26 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் கழுத்து மற்றும் வலது கையை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த பச்சிளம் குழந்தைக்கு, அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய குழந்தையின் தந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    போலீசார் மணிகண்டனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் மணிகண்டனை சென்னை தாம்பரம் சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    • தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை.
    • இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார்.

    ஜபல்பூர் :

    மத்திய பிரதேச மாநிலம், தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் துர்வே. இவரது மனைவி ஜாம்னி பாய், கடந்த 13-ந் தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தை பலவீனமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    அதன்படி பெற்றோர், அந்த குழந்தையை அங்கு எடுத்துச்சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 15-ந் தேதி குழந்தை இறந்து விட்டது. ஆனால் அந்த குழந்தையின் உடலை பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு எடுத்துச்செல்வதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்து இருக்கிறது.

    தனியார் பிண ஊர்தியை அமர்த்திக்கொள்வதற்கு தந்தை சுனிலுக்கு வசதி இல்லை. இதையடுத்து குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து, பஸ்சில் எடுத்துச்சென்றுள்ளார்.

    இதை அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் உருக்கமுடன் கூறி உள்ளார்.

    ஆனால், இந்த புகாரை மாநில சுகாதாரத்துறை இணை இயக்குனர் சஞ்சய் மிஷ்ரா மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "புதிதாக பிறந்துள்ள குழந்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை தொடங்கி உள்ளது. ஆனால் குழந்தையின் நிலைமை மோசமாக இருந்தபோதும், அதன் பெற்றோர் குழந்தையை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். எனவே டிஸ்சார்ஜ் செய்த போது குழந்தை உயிருடன்தான் இருந்தது" என தெரிவித்தார்.

    • தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வ ராஜ் (வயது 65), விவசாயி. இவரது மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் கோவில்களுக்கும் சென்ற வேண்டுதல் நிறைவேற்றி பிரார்த்தனை செய்து வந்தனர். அதே வேளையில் அசோக்ராஜ் உரிய சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார்.

    இதற்கிடையே அசோக் ராஜ் கடந்த மூன்று மாதங்களாக சரியான முறையில் மருந்து, மாத்திரை சாப்பிட மறுத்து வந்துள்ளார். அவரது பெற்றோர் எடுத்துக்கூறியும் அசோக்ராஜ் கண்டுகொள்ளவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தனது தாய் மணிமொழியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அவரது வயதான தந்தை செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.

    அவரையும் அசோக்ராஜ் கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் வந்து மணிமொழி பார்த்தபோதுதான் கணவர் செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் தப்பினார்.

    பின்னர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையுண்ட செல்வராஜ் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மனநலம் பாதித்த மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண்டியின் மனைவி இசக்கியம்மாளை கணேசன் ஆபாசமாக பேசியுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த கணேசன், நாராயணனை தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலசடையமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 72).விவசாயி. இவரது மூத்த மகன் கணேசன் (40). இவர் கடந்த ஆண்டு தனது தம்பி ஆண்டியின் மனைவி இசக்கியம்மாளை ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கணேசன் இசக்கியம்மாளிடம் மீண்டும் தகராறு செய்தார். இதைப்பார்த்த நாராயணன் மருமகளிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்டார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த கணேசன், தந்தை நாராயணனை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக கணேசனை கைது செய்தனர்.

    • அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார்.
    • தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 65). கூலிதொழிலாளி. இவருக்கு கவுண்டமணி (30), செந்தில் (28) என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    வீட்டில் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பிரமணி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. தந்தை காணாமல் போன நிலையில் கடந்த 3 நாட்களாக கவுண்டமணி, செந்தில் ஆகியோர் சுப்பிரமணியை பல இடங்களில் தேடி உள்ளனர்.

    சுப்பிரமணியின் மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோர் புதுச்சேரியில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் அவரை தேடிச் சென்றனர்.

    இதற்கிடையே கள்ளக் குறிச்சி மாவட்டம் தியாக துருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் முதியவர் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இது குறித்து தியாகதுருகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அங்கு வந்த தியாகதுருகம் வனத்துறையினர் மற்றும் போலீசார் உயிரிழந்த முதியவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அடையாளம் காண முயற்சி செய்தனர். கிட்டத்தட்ட காணாமல் போன சுப்பிரமணியின் உருவமும் உயிரிழந்து கிடந்த முதியவரின் உடல் அமைப்பும் ஒரே மாதிரி இருந்ததால் தியாகதுருகம் வனப்பகுதியில் கிடந்த பிணம், தனது தந்தை தான் என முடிவு செய்த கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை காட்டுப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு எலவனாசூர்கோட்டை அருகே உள்ள நெடுமானுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.

    தந்தை உயிரிழந்துவிட்டார் என உறவினர்களுக்கு அவர்கள் தகவல் சொல்லவே, இறுதி சடங்கிற்கான வேலைகளை தொடங்கினார்கள்.

    தொடர்ந்து கவுண்டமணி, செந்தில் ஆகியோர் பிணத்தை எடுத்துக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்ற நிலையில், அவர்களது உறவினர் ஒருவர் சுப்பிரமணியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மாலை வாங்க எலவனா சூர்கோட்டைக்கு சென்றார்.

    அப்போது கடைவீதியில் முதியவர் சுப்பிரமணி நடந்து வந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியின் உறவினர் நீ இறந்துவிட்டதாக கூறி உனது மகன்கள் அங்கே பிணத்தை வைத்துக் கொண்டு இறுதி சடங்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என கூறினார்.

    இதில் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பதறி அடித்துக் கொண்டு கிராமத்திற்கு சென்றார். கதையில் மிகப்பெரிய திருப்பமாக சுப்பிரமணி மீண்டும் உயிரோடு வந்ததை பார்த்து கவுண்டமணி, செந்தில் அதிர்ச்சி அடைந்த னர். இந்த தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் அங்கு வந்த தியாகதுருகம் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 7 வயது சிறுவனை பைக் ஓட்ட வைத்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக்.  இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும்,  மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ்    பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக  மாற்றி வடிவமைத்தார்  .  கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில்  40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல  அதனை உருவாக்கினார். ெதாடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

    இந்த நிலையில்   சேலம்பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில்  ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான   மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

    இதற்கிடையே  தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.   அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்   போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    தந்தை மீது சரமாரி தாக்குதல் செய்த மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (வயது 70). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் தர்மர் என்பவரிடம் 5 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நகையை தருமாறு மகனிடம் கூடலிங்கம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கூடலிங்கம் நகை குறித்து மகனிடம் கேட்டுள்ளார். 

    இதில் ஆத்திரமடைந்த தர்மர், மற்றொரு மகன் காட்டு ராஜா ஆகியோர் தந்தை என்றும் பாராமல் கூடலிங்கத்தை கம்பு, கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கு உடந்தையாக உறவினர்கள் நீலா, சின்ன முனியாண்டி ஆகியோர் இருந்துள்ளனர்.

    தாக்குதலில் காயமடைந்த கூடலிங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் தர்மர், நீலா, காட்டு ராஜா, சின்ன முனியாண்டி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×