search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்ட்டு"

    • வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
    • அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் வக்கீல் மணிகண்டன் (வயது 30) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் இன்று வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கண்டனம்

    இதையொட்டி சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் மேலும் அந்த கொலையில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இதுபோல சம்பவங்கள் மேலும் நடக்காமல் வக்கீல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் கோர்ட்டில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டது. இதனால் வெளியூர்களில் இருந்து வழக்குகள் தொடர்பாக கோர்ட்டுக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    • குழந்தையை பராமரித்து வரும் தாயாரால் பெயர் வைக்க முடியாமல் போனது.
    • பெயர் இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை.

    திருவனந்தபுரம்:

    குடும்ப சண்டை, விவாகரத்து வழக்கு காரணமாக மகளுக்கு பெயர் வைப்பதில் தாய், தந்தைக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையை தீர்த்து வைத்த கேரள ஐகோர்ட்டு அந்த குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.

    கேரள மாநிலம், ஆலுவா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மகள் பிறந்த பிறகு, குடும்பச் சண்டை காரணமாக இருவரும் பிரிந்து விவகாரத்து செய்ய முயன்றனர். இதனால், குழந்தையை பராமரித்து வரும் தாயாரால் பெயர் வைக்க முடியாமல் போனது. குழந்தையின் தாயார், புண்யா என்ற பெயரையும், குழந்தையின் தந்தை, பத்மா நாயர் என்ற பெயரையும் வைப்பதாக இருந்தது.

    குழந்தைக்கு பெயர் இல்லாமல் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், பெயர் இல்லாததால் பள்ளியில் சேர்க்க முடியவில்லை. இதையடுத்து, தனது மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு தனது கணவருக்கு உத்தரவிடுமாறு கேரள ஐகோர்ட்டில் குழந்தையின் தாய் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதி, பெற்றோருக்கு இடையேயான தகராறைத் தீர்த்து வைத்த பிறகு பெயர் வைப்பது கால தாமதத்துக்கு வழி வகுக்கும் என்பதால், சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தந்தை பரிந்துரைத்த பெயரையும், தாயார் பரிந்துரைத்த பெயரையும் சேர்த்து, புண்யா பி. நாயர் என்று பெயர் வைத்தார்.

    • கர்நாடக முதல்-மந்திரி மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி கிராமத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயி கள் சங்கம் சார்பில் காவிரி டெல்டாவில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ரெயில் மறியல் போராட்டம் குறித்து ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலா ளர் குடவாசல் சரவணன், மாநில துணை செயலாளர் செந்தில் குமார் உள்பட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கர்நாடக முதல்-மந்திரி தொடர்ந்து 2 மாத காலமாக அனைத்து கட்சிகளையும் கூட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக்கூடாது எனவும், மேகதாதுவில் அணை கட்டியே தீர வேண்டும் எனவும் முடிவெடுத்துள்ளார்.

    இது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும்.

    காவிரி நீர் பிரச்சினை தொடர்பான மத்திய அரசுக்கு எதிராக வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ள காவிரி டெல்டா ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்க ணக்கான விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக போராட்டம் குறித்த பிரசுரங்களை நிர்வாகிகளுக்கும், விவசாயிகளுக்கும் வழங்கினார்.

    • 1933 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
    • காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இன்று லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார். முதன்மை குற்றவியல் நீதிபதி கோபாலகிருஷ்ணன் முதன்மை சார்பு நீதிபதி சொர்ண குமார், சார்பு நீதிபதி அசான் முகமது, நீதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவர், மணிமேகலை வழக்கறிஞர் சங்க தலைவர் பால ஜனாதிபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவிலில் 6 பெஞ்சுகளில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், சொத்து தொடர்பான வழக்குகள், விபத்து காப்பீடு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    மோட்டார் காப்பீடு இன்சூரன்ஸ் மற்றும் காசோலை வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டது. காலை 1 மணி நேரத்தில் 15 வழக்குகள் பேசி தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.68 லட்சத்து 78 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதேபோல் தக்கலை, பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை கோர்ட்டுகளிலும் லோக் அதாலத் நிகழ்ச்சி நடந்தது. மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் இன்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் 1933 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டு உள்ளது.

    • ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் கடந்த 3-ந் தேதி அசோக் குமார் என்ற ரவுடி வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்ட போது மாஜிஸ்திரேட்டு இருக்கை முன்பு அவரை கொக்கிகுமார் என்ற மற்றொரு ரவுடி சரமாரியாக வெட்டி விட்டு தப்பினான்.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு ரவுடி கொக்கிகுமாரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கோர்ட்டு அறையில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

    போலீஸ் கண்காணிப்பு சரியாக இல்லாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினர். இதை தொடர்ந்து ராமநாதபுரம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் தலைமை யில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கோர்ட்டின் இரண்டு பக்க நுழைவு வாயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள், வழக்கு தொடர்பாக வருபவர்கள் என அனைவரையும் சோதனை செய்த பிறகே போலீசார் அனுமதித்தனர்.

    மேலும் மெட்டல் டிடெக்டர் மூலம் ஆயு தங்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படு கிறதா? எனவும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இந்த போலீஸ் கண்காணிப்பு நிரந்தரமாக மேற்கொள்ளப் படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் கோர்ட்டில் புகுந்து வாலிபரை வெட்டிய ரவுடி கொக்கி குமாருக்கு ஆதர வாக யாரும் ஆஜராக மாட்டோம் என்று ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் சேக் இப்ராகீம், செயலாளர் கருணாகரன், பொருளாளர் பாபு ஆகியோர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் அமைந்துள்ள நீதித்துறை நடுவர் எண்.2 நீதிமன்றத்தில், ஒரு குற்ற வழக்கில் ஆஜராக வந்த அசோக்குமார் என்பவரை, ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த ரவுடி கொக்கி குமார், நீதிமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து வாளால் வெட்டியுள்ளார். பின்னர் சர்வ சாதாரணமாக நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்து சென்று தப்பித்து ள்ளார். அவருடைய இந்த மனிதாபிமானமற்ற குற்றச்செயலை ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கம் மிகவும் கடுமையாக ஆட்சேபனை செய்கிறது. இக்குற்ற வழக்கு சம்பந்தமாக அவருக்கு ஆதரவாக ராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜர் ஆவதில்லை என ஏக மனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் :

    உடுமலை பொன்னேரியை சேர்ந்த 59 வயது கூலித் தொழிலாளி தனது 12 வயது மகளிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.கடந்த 2-12-2019 அன்று வீட்டில் இருந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். மேலும் தொடர்ச்சியாக தனது மகளை மிரட்டி பலமுறை உடலுறவு கொண்டுள்ளார்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தான் படிக்கும் பள்ளி ஆசிரியரிடம் விவரத்தை தெரிவித்துள்ளார். உடனடியாக உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    மகளை பாலியல் கொடுமை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும்,ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகையை சிறுமியின் படிப்புக்கு வழங்கவும், மேலும் சிறுமியின் மறுவாழ்வுக்காக அரசு ரூ.2.50 லட்சம் வழங்கவும் நீதிபதி பாலு உத்தரவிட்டார்.இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

    • ஜமாத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வக்பு வாரியத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    • ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வடக்குத்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் ஷேக் அப்துல்லா மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தொண்டி வடக்கு தெரு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் 2021-ம் ஆண்டு தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக சாகுல் ஹமீது தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். ஜமாத் மக்கள் மற்றும் ஜமாத் கமிட்டி உறுப்பினர்களும் சேர்ந்து அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தை வக்பு வாரியத்துக்கு அனுப்பி யுள்ளோம். இதுவரை நடவடிக்கை இல்லை. தீர்மானத்தின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து வக்பு வாரியம் வருகிற 23-ந்தேதிக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    • ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார்
    • வழக்கு செலவு தொகை சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை வழங்க வேண்டும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட் டம் குளவிளை யைச் ேசர்ந்தவர் நெல்சன். இவர், தனது மனைவியுடன் சேர்ந்து குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் பெற்றார்.

    அப்போது ரூ.34 ஆயிரம் செலுத்தி இன்சூரன்சு பாலிசி எடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்டு அதற்கான ரசீதை யும், இன்சூரன்சு பாலிசி யையும் வழங்காமல் வங்கி இழுத்தடித்து வந்து உள்ளது. இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான நெல்சன், நுகர்வோர் வக்கீல் மூலம் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், அவர் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர், தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி நஷ்ட ஈடாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.

    மேலும் வழக்கு செலவு தொகை ரூ.ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 15 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட இன்சூரன்சு பாலிசியை வழங்க வேண்டும் அல்லது அதற்காக செலுத்தப்பட்ட ரூ. 34 ஆயிரத்தை திரும்ப வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

    • திருமங்கலம் கோர்ட்டில் நாளை சிறப்பு லோக் அதாலத் நடக்கிறது.
    • மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    திருமங்கலம்

    திருமங்கலம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் நாளை (11-ந்தேதி) சார்பு நீதிபதி மாரிக்காளை தலைமையில் திருமங்கலம் கோர்ட்டில் சிறப்பு லோக் அதாலத் முகாம் நடைபெற உள்ளது.

    பொதுமக்கள் நலன்கருதி நடைபெறும் இந்த சிறப்பு லோக் அதலாத்தில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகள், குறைகள் குறித்த மனுக்களையும், திருமங்கலம் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல்நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், பிற கோரிக்கைள் தொடர் பாகவும் உடனடியா தீர்வு காண மனுசெய்து உரிய பரிகாரம் தேடி கொள்ளலாம்.

    • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே குலசே கரன் புதூர் அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 63). இவர் நீதிமன்றத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஏஞ்சல் லதா குமாரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாகேந்திரன் படுக்கை அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது நாகேந்திரன் தூக்கில் தொங்கினார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரன் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் ஆய்வு செய்த ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி (விருதுநகர் மாவட்ட பொறுப்பு நீதிபதி)சிவஞானம் அலுவலக பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராஜபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அமிர்த ராஜ், செயலாளர் கனகராஜ், பொருளாளர் தங்கத்துரை உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர் .

    வழக்கறிஞர் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நீதிமன்ற வளாகத்தில் நூலகம் திறக்க வேண்டும் என வக்கீல் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், விரைவில் சார்பு நீதிமன்றம் திறக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதுகுறித்து அரசசின் கவனத்திற்கு கொண்டு சென்று திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வக்கீல்களும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

    இதை தொடர்ந்து வக்கீல்களிடம் பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறி ஞர்கள் பொது மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தவறில்லை. அதே வேளையில் சார்பு நீதிமன்றம் வேண்டும் என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது நல்லதல்ல. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலக பணிக்காக தினந்தோறும் வருவது வழக்கம். ஆனால் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு வருவது அவருடைய வேலைகளை விட்டு, விட்டு வருகின்றனர். அப்படி வரும் நேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்தால் அது அவர்களுக்கும் பாதிக்கும், வழக்கறிஞர்களையும் பாதிக்கும்.

    ஆகையால் வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ராஜபாளையம் அருகே கோர்ட்டில் சாட்சி சொல்ல வற்புறுத்தி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    ராஜபாளையம் அருகே செட்டியாப்பட்டியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 57). இவரது பேத்தியுடன் அதே பகுதியை சேர்ந்த கங்காதரன் 
    (வயது 30) என்பவர் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்துள்ளனர். அப்போது கங்காதரன் சுப்புலட்சுமியின் பேத்தியுடன் உல்லாசமாக இருந்ததில் அவர் கர்ப்பிணி ஆகிவிட்டார்.

    இதுபற்றி கடந்த 2021-ம் ஆண்டு தளவாய்புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் கங்காதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

    இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த கங்காதரன் சுப்புலட்சுமியை சந்தித்து உங்களது பேத்தியை திருமணம் செய்து கொள்கிறேன். எனக்கு சாதகமாக நீங்கள் சாட்சி சொல்ல வேண்டும். இதற்கு உடன்பாடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

    இதுபற்றி சுப்புலட்சுமி தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை தேடி வருகின்றனர்.

    ×