search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் அருகே கோர்ட்டு ஊழியர் தற்கொலை
    X

    கோப்பு படம் 

    சுசீந்திரம் அருகே கோர்ட்டு ஊழியர் தற்கொலை

    • குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    சுசீந்திரம் அருகே குலசே கரன் புதூர் அத்திகுளம் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் (வயது 63). இவர் நீதிமன்றத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஏஞ்சல் லதா குமாரி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது. கணவன் -மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.நேற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நாகேந்திரன் படுக்கை அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் அவரது மனைவி அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது நாகேந்திரன் தூக்கில் தொங்கினார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாகேந்திரன் இறந்து விட்டதாக கூறினார்கள். இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×