search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "court boycotts"

    • ராஜபாளையம் ஒருங்கிணைந்த கோர்ட்டில் ஆய்வு செய்த ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
    • ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி (விருதுநகர் மாவட்ட பொறுப்பு நீதிபதி)சிவஞானம் அலுவலக பணிகளை ஆய்வு செய்தார்.

    இதில் மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் ராஜபாளையம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அமிர்த ராஜ், செயலாளர் கனகராஜ், பொருளாளர் தங்கத்துரை உள்ளிட்ட சங்க உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானத்துக்கு வரவேற்பு கொடுத்தனர் .

    வழக்கறிஞர் சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நீதிமன்ற வளாகத்தில் நூலகம் திறக்க வேண்டும் என வக்கீல் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம், விரைவில் சார்பு நீதிமன்றம் திறக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதுகுறித்து அரசசின் கவனத்திற்கு கொண்டு சென்று திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். வக்கீல்களும் முயற்சி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

    இதை தொடர்ந்து வக்கீல்களிடம் பேசிய ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வழக்கறி ஞர்கள் பொது மக்களின் பிரச்சினைக்காக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது தவறில்லை. அதே வேளையில் சார்பு நீதிமன்றம் வேண்டும் என பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது நல்லதல்ல. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நீதிமன்ற அலுவலக பணிக்காக தினந்தோறும் வருவது வழக்கம். ஆனால் வழக்குகளுக்காக வரக்கூடிய பொதுமக்கள் நீதிமன்றத்துக்கு வருவது அவருடைய வேலைகளை விட்டு, விட்டு வருகின்றனர். அப்படி வரும் நேரத்தில் வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்தால் அது அவர்களுக்கும் பாதிக்கும், வழக்கறிஞர்களையும் பாதிக்கும்.

    ஆகையால் வழக்கறி ஞர்கள் நீதிமன்ற புறக்க ணிப்பில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    ×