search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகன்கள்"

    தந்தை மீது சரமாரி தாக்குதல் செய்த மகன்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்

    திருத்தங்கல் ஸ்டாண்டர்டு காலனியைச் சேர்ந்தவர் கூடலிங்கம் (வயது 70). இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மகன் தர்மர் என்பவரிடம் 5 பவுன் நகையை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நகையை தருமாறு மகனிடம் கூடலிங்கம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கூடலிங்கம் நகை குறித்து மகனிடம் கேட்டுள்ளார். 

    இதில் ஆத்திரமடைந்த தர்மர், மற்றொரு மகன் காட்டு ராஜா ஆகியோர் தந்தை என்றும் பாராமல் கூடலிங்கத்தை கம்பு, கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கு உடந்தையாக உறவினர்கள் நீலா, சின்ன முனியாண்டி ஆகியோர் இருந்துள்ளனர்.

    தாக்குதலில் காயமடைந்த கூடலிங்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் திருத்தங்கல் போலீசார் தர்மர், நீலா, காட்டு ராஜா, சின்ன முனியாண்டி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×