search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்"

    ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 7 வயது சிறுவனை பைக் ஓட்ட வைத்த தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா நாச்சனம்பட்டி பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 40), பைக் மெக்கானிக்.  இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு கீர்த்திகா (15), கேசிகா (13) என்ற மகள்களும்,  மோகித் (7) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் தந்தையிடம் மகன் மோகித் பைக் கேட்டார். இதனால் தங்கராஜ்    பழைய பைக்கை வாங்கி அவற்றை மகன் ஓட்டும்படி சிறியதாக  மாற்றி வடிவமைத்தார்  .  கியர் இல்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோலில்  40 கி.மீ. தூரம் செல்லும் படி 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரேஸ் பைக் போல  அதனை உருவாக்கினார். ெதாடர்ந்து மகனுக்கு அதனை பரிசாக வழங்கினார்.

    இந்த நிலையில்   சேலம்பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில்  ஓமலூர் அருகே 7 வயது சிறுவனான   மோகித் பைக்கை ஓட்ட தங்கராஜ் பின்னால் அமர்ந்து சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது. இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  

    இதற்கிடையே  தீவட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் ராமசந்திரன் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதில் சிறுவன் தந்தையை அமர வைத்து பைக் ஓட்டும் வீடியோ பரவியதால் அதை பார்க்கும் சிறுவர்கள் இது போன்ற அபாய செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    அதனால் தங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.   அதன்படி தங்கராஜ் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்   போலீசார்   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    திருப்பத்தூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கப்பல் என்ஜினீயர் பலியானார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாத்தாங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்   மகன் பாரத் (23). இவர் கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் என்ஜீனி யராக பணிபுரிந்தார். 

    விடுமுறையை அடுத்து இவர் சொந்த ஊரான காட்டாத்தங்குடிக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார். இன்று கோவி லுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு  பைக்கில் திருப்பத்தூர் வந்தார்.   

    திருப்பத்தூரில் புதுக்கோட்டை சாலை தங்கமணி தியேட்டர் அருகில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த பாரத்,  ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த வர்களுக்கு   சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
    டிரையம்ப் நிறுவனத்தின் 2022 டைகர் 1200 மாடல் GT மற்றும் ரேலி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. பெயருக்கு ஏற்றார் போல் ரேலி என்பது ஆப் ரோடு சார்ந்த மாடல் ஆகும்.


    டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்த 2022 டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் இரண்டு வேரியண்ட் மற்றும் நான்கு ட்ரிம்களில் கிடைக்கிறது. 

    2022 டிரையம்ப் டைகர் 1200 மாடல் விலை ரூ. 19.19 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    2022 டிரையம்ப் டைகர் 1200

    புதிய 2022 டிரையம்ப் டைகர் 1200 மாடலில் 1160சிசி, இன்லைன், 3 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 147 பி.ஹெச்.பி. பவர், 130 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஷாப்ட் டிரைவ் சிஸ்டம், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டிரையம்ப் டைகர் 1200 மாடல் டிரையம்ப் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் ரக மோட்டார்சசைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் மோட்டார்சைக்கிள் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் டுகாட்டி மல்டிஸ்டிராடா V4 மோட்டாரைச்கிள் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய டிரையம்ப் டைகர் 1200 மோட்டார்சைக்கிள் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. 

    விலை விவரங்கள்:

    2022 டிரையம்ப் டைகர் 1200 GT ப்ரோ ரூ. 19 லட்சத்து 19 ஆயிரம்
    2022 டிரையம்ப் டைகர் 1200 GT எக்ஸ்ப்ளோரர் ரூ. 20 லட்சத்து 69 ஆயிரம்
    2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி ப்ரோ ரூ. 20 லட்சத்து 19 ஆயிரம்
    2022 டிரையம்ப் டைகர் 1200 ரேலி எக்ஸ்ப்ளோரர் ரூ. 21 லட்சத்து 69 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
    கே.டி.எம். நிறுவனம் இந்திய சந்தையில் தனது 2022 கே.டி.எம். RC 390 மோட்டார்சைக்கிளை இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.


    கே.டி.எம். இந்தியா நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் 2022 கே.டி.எம். RC 390 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய 2022 கே.டி.எம். RC 390 மாடல் விலை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய கே.டி.எம். RC  390 மாடலை விட ரூ. 36 ஆயிரம் விலை அதிகம் ஆகும். 2022 கே.டி.எம். RC  390 மாடல் இரண்டு முற்றிலும் புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    இவை கே.டி.எம். ஃபேக்டரி ரேசிங் புளூ மற்றும் போல்டு டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்ட கே.டி.எம். ஆரஞ்சு என அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஃபேக்டரி ரேசிங் புளூ நிற வேரியண்டில் ஃபேரிங், பியூவல் டேன்க் மற்றும் டெயில் பகுதிகளில் ஆரஞ்சு மற்றும் புளூ ஷேட்களில் கிடைக்கின்றன. கே.டி.எம். ஆரஞ்சு நிற வேரியண்டின் பியூவல் டேன்க் மீது ஆரஞ்சு நிறமும், பியூவல் டேன்க் மீது பெரிய கருப்பு நிறத்தாலான கே.டி.எம். ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.

     2022 கே.டி.எம். RC 390

    புது மாடலில் ஏராளமான அப்டேட்கள் மற்றும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மோட்டார்சைக்கிளில் ப்ளூடூத் வசதி கொண்ட ஃபுல் கலர் TFT கன்சோல், ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னெரிங் ஏ.பி.எஸ். மற்றும் குயிக் ஷிஃப்டர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.  இந்த மாடலில் 13.7 லிட்டர் கொள்ளளவு கொண்ட பியூவல் டேன்க் உள்ளது.

    2022 கே.டி.எம். RC 390 மாடலில் 373சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 42.9 ஹெச்.பி. பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 
    கே.டி.எம். நிறுவனத்தின் 250 டியூக் மோட்டார்சைக்கிள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் USD ஃபோர்க், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.



    கே.டி.எம். இந்தியா நிறுவனம் 200 டியூக் மற்றும் 390 டியூக் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இரு மாடல்களிடையே நிலவும் இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் கே.டி.எம். 250 டியூக் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. கே.டி.எம். 250 டியூக் மாடல் விலை ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் இரண்டு அசத்தலான நிறங்களில் கிடைக்கிறது.

    அதன்படி கே.டி.எம். 250 டியூக் மாடல் டார்க் கல்வேனோ நிறத்தில் கிடைக்கிறது. இதில் எலெகெட்ரிக் ஆரஞ்சு மற்றும் மேட் பிளாக் நிறங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஆரஞ்சு நிற கிராஃபிக்ஸ், ஆரஞ்சு வீல்கள் மற்றும் ஃபிரேம்களில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டு உள்ளது. இத்துடன் சில்வர் மெட்டாலிக் நிறத்திலும் இந்த மாடல் கிடைக்கிறது. இந்த மாடலின் பியூவல் டேன்க் மீது 250 ஸ்டிக்கரிங் செய்யபர்பட்டு உள்ளது. 

    கே.டி.எம். 250 டியூக்

    மேலும் இதன் ஹெட்லேம்ப் கவுல், பின்பகுதிகளில் ஆரஞ்சு நிற ஹீண்ட் செய்யப்பட்டு உள்ளது. பிளாக்டு-அவுட் வீல்களில் ஆரஞ்சு நிற டேப் வழங்கப்பட்டு இருக்கிறது. டார்க் கல்வேனோ வேரியண்டை போன்றே இந்த நிற வேரியண்டிலும் ஆர்ஞ்சு நிற ஃபிரேம் உள்ளது. 

    கே.டி.எம். 250 டியூக் மாடலில் 249சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 29.6 பி.ஹெச்.பி. பவர், 24 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப், யு.எஸ்.டி. ஃபோர்க், எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏ.பி.எஸ். உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. 

    இந்திய சந்தையில் கே.டி.எம். 250 டியூக் மாடல் சுசுகி ஜிக்சர் 250 மற்றும் ஹஸ்க்வர்னா 250 ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 
    ×