என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே தந்தையை தாக்கிய மகன் கைது
    X

    களக்காடு அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

    • ஆண்டியின் மனைவி இசக்கியம்மாளை கணேசன் ஆபாசமாக பேசியுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த கணேசன், நாராயணனை தாக்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலசடையமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 72).விவசாயி. இவரது மூத்த மகன் கணேசன் (40). இவர் கடந்த ஆண்டு தனது தம்பி ஆண்டியின் மனைவி இசக்கியம்மாளை ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று கணேசன் இசக்கியம்மாளிடம் மீண்டும் தகராறு செய்தார். இதைப்பார்த்த நாராயணன் மருமகளிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்டார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த கணேசன், தந்தை நாராயணனை தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக கணேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×