search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore airport"

    அரசு போக்குவரத்து கழக நஷ்டத்துக்கு ஊழல் தான் காரணம் என்று கோவை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்து உள்ளதை வரவேற்கிறோம்.

    நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகாலமாக ஊழல் நடைபெற்று உள்ளது என்று முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் தற்போதைய கவர்னர்பன்வாரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆர்.எஸ். பாரதி தொடர்ந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.

    இந்த சூழலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தானாக பதவி விலக வேண்டும் அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    பதவியில் உள்ள ஒரு முதல்-அமைச்சரை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அவமானம்.

    நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் குவிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3- வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது.


    கவர்னர் உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறி விட்டு மறுநாள் மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் இதனை விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

    ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ. 550 கோடி. இந்த ஆட்சியில் ரூ. 1,600 கோடிக்கு பேசி உள்ளார்கள்.

    போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போதிய ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு தேவையான ஊதியம் வழங்குங்கள்.

    தனியார் போக்குவரத்து கழகம் லாபத்தில் இயங்கி கொண்டு இருக்கிறது. ஆனால் அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல்.

    ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் விடுதலையில் 2 மாதம் ஆகியும் ஏன் கவர்னர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் ஊழல் நடப்பது பா.ஜனதா அரசுக்கு தெரியாதா? ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இது ஊழலை ஆதரிப்பது தானே அர்த்தம்.

    வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கார் மூலமாக சேலத்துக்கு புறப்பட்டு சென்றார். #PMK #AnbumaniRamadoss #EdappadiPalaniswami #Banwarilalpurohit
    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன் ஆகியோர் வரவேற்றனர். #VenkaiahNaidu
    கோவை:

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கலெக்டர் ஹரிஹரன், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எம்.பி., கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், கோட்ட பொறியாளர் ஜி.கே. செல்வகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் கார் மூலம் ரேஸ்கோர்சில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். மாலை 5 மணிக்கு அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபைக்கு செல்கிறார்.

    அங்கு கோவை வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இரவு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (புதன்கிழமை) பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி வைர விழாவில் பங்கேற்கிறார். இதற்காக காலை 9 மணிக்கு கோவை விமான நிலையம் செல்லும் வெங்கையாநாயுடு, அங்கிருந்து விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பொள்ளாச்சி செல்கிறார்.

    பொள்ளாச்சி கல்லூரியில் பாதுகாப்பு குறித்து சென்னை பாதுகாப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி. வீரபெருமாள் ஆய்வு செய்தார்.

    கோவையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே ஹெலிகாப்டர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு காரில் செல்வதற்காக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீசார் செய்துள்ளனர். இதற்கான ஒத்திகையும் நடத்தப்பட்டது.

    பொள்ளாச்சியில் விழா முடிந்ததும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஹெலிகாப்டரில் திண்டுக்கல் செல்கிறார்.

    துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை விமான நிலையம், தொழில் வர்த்தக சபைக்கு செல்லும் பாதைகள், சுற்றுலா மாளிகை மற்றும் பொள் ளாச்சி பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஐ.ஜி. பெரியய்யா உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமையில் பொள்ளாச்சியில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாநகரில் கமி‌ஷனர் சுமித்சரண் உத்தரவின்பேரில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  #VenkaiahNaidu
    யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருணாஸின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
    பீளமேடு:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசினார். மேலும் கல்லூரி மாணவர்கள், தொழில்துறையினருடன் கலந்துரையாடினார்.

    நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவையில் இருந்து இன்று சென்னை செல்வதற்காக பீளமேடு விமானநிலையத்துக்கு வந்த கமல்ஹாசனிடம் நடிகர் கருணாஸ் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நிருபர்கள் கேட்டனர்.


    அதற்கு பதில் அளித்து பேசிய கமல்ஹாசன், இன்னும் அந்த பேச்சை கேட்கவில்லை. அதற்கு முன்னர் அதுகுறித்து பேசுவது நியாயமாக இருக்காது. இருப்பினும் யாரும், யாரையும் அவமரியாதையாக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பதில் அளித்தார். #MakkalNeedhiMaiam #KamalHaasan #Karunas
    பதவி கொடுக்கவில்லை என்றால் காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளதாக துரைமுருகன் விமர்சித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK #Vijayabaskar
    பீளமேடு:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி : தமிழகத்தில் தற்போது மின்தடை அதிகமாக உள்ளதே?

    பதில் : மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்லி உள்ளார். மற்றொருவர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறுகிறார். முதலில் அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் மின்சார நிலைமையை பேசிய பின்னர் மக்களுக்கு தெளிவாக கூற வேண்டும்


    கே: குட்கா ஊழலில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதே?

    ப : பதவி கொடுக்கவில்லை என்றால் யார்- யாரை காட்டிக் கொடுப்பார் என்ற பயத்தால் தான் அமைச்சருக்கு இந்த பதவி வழங்கப்பட்டு இருக்கலாம்

    கே : இலங்கையில் இறுதிப் போரின் போது இந்திய அரசு உதவி செய்ததாக ராஜபக்சே கூறி இருக்கிறாரே?

    ப : அதுபற்றி எனக்கு தெரியாது.

    கே : 7 பேர் விடுதலையில் கவர்னர் காலதாமதம் செய்வதாக தகவல் வருகிறதே?

    ப : தமிழக கவர்னர் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவில்லை என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் கூறி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் துரைமுருகன் ஈரோட்டில் நடைபெறும் ம.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொள்ள சென்றார். #DMK #DuraiMurugan #TNMinister #Vijayabaskar
    கோவை விமான நிலையத்தில் எந்திரத்துக்குள் மறைத்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் கடத்தி வந்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    கோவை:

    சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய ஊழியர்கள் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு சூட்கேசில் இருந்த சிறிய ரக லேத் எந்திரத்திற்குள் தங்க கட்டிகள் இருப்பதாக ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர்.

    அதனை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் (டி.ஆர்.ஐ)‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, உதிரிபாகத்துக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 3 கிலோ 675 கிராம் எடையுள்ள தங்கம் கட்டிகளை சிறிய பிஸ்கட்டுகளாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 15 லட்சம் ஆகும்.

    இதனை கடத்தி வந்த கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமல்ராஜ் (வயது 25) என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகராஜன் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு அமல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் எஸ்.பாலசுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார். 
    மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்றக்கூடாது என்று கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    பீளமேடு:

    கோவை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது-

    18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருப்பது வரவேற்கத்தக்கது. இவர்கள் அந்தந்த தொகுதியில் வளர்ச்சி பணிகளை தொடர்ந்து 9 மாத காலத்துக்கு மேலாக செய்யாமல் இருப்பதால் அந்த பகுதியின் மக்கள் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்தி தீர்ப்பு அளிக்கும் என நம்புகிறோம். இந்த தீர்ப்பின் மூலம் சபாநாயகரின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பு வரும்பட்சத்தில் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். மேலும் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.

    நாடு முழுவதும் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு முடிவு செய்து உள்ள நிலையில் மத்தியில் ஆளும் கட்சி, எதிர்கட்சிகள், மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து அவர்களின் கருத்தை அறிந்து முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து நடத்த கூடாது என்ற எண்ணத்தில் தனி அலுவலர்களின் பணியை காலநீட்டிப்பு செய்துள்ளனர்.


    அரசுக்கு எதிர் கருத்து கூறுபவர்களை சிறையில் அடைத்தும், துப்பாக்கி சூடுநடத்தியும், மக்களின் போராட்டத்தை ஒடுக்கி விட முடியாது. மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிறைவேற்ற கூடாது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மக்களின் அன்றாட பயன்பாட்டு செலவுகள், கட்டுமான பொருட்கள் போன்றவை உயர்ந்துஉள்ளது. இது குறித்து மத்திய அரசு தொடர்ந்து விவாதம் செய்து வருகிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் மத்திய அரசு தோல்வி கண்டுள்ளது.

    நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் மற்றும் பிற மாநிலத்தவர்களை ஐ.ஏ.எஸ். அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு மருத்துவ வசதி மற்றும் பிற வசதிகளை செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Congress #Thirunavukkarasar
    கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து நோட்டீசு வினியோகித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கோவை:

    கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    முதற்கட்டமாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. விரிவாக்கத்துக்காக நிலம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டும், மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தினர்.

    இதுதொடர்பாக நில உரிமையாளர்களுடன் அரசு அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் குடியிருப்பு நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.1500, விவசாய நிலத்துக்கு சதுர அடிக்கு ரூ.900-ம் வழங்கப்படும் என்றும், குடியிருப்பு நிலம் வைத்திருப்பவர்களுக்கு 3 சென்ட் மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சி.கே.ஜெயபிரகாஷ் (வயது 40), இருகூரை சேர்ந்த செந்தில் என்ற செந்தில்ராஜ் (47) ஆகிய இருவரும் விமான நிலைய விரிவாக்க பகுதியில் நோட்டீஸ் வினியோகித்தனர்.

    மக்கள் நல கூட்டமைப்பு என்ற பெயரில் வினியோகிக்கப்பட்ட அந்த நோட்டீசுகளில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை போதாது, பணத்தை தராவிட்டால் நிலத்தை தர மாட்டோம், இந்த அரசு அடக்கு முறை அரசு, ஸ்டெர்லைட், பசுமை சாலை எதிர்ப்பு போராட்டங்களை போல இங்கும் போராட்டத்தை தொடங்குவோம் என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து சின்னியம்பாளையம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தேவராஜ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். அதில் ஜெயபிரகாஷ், செந்தில் ஆகியோர் வதந்தியை பரப்பி பொது மக்களிடம் மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து சி.கே.ஜெயபிரகாஷ், செந்தில் ஆகியேர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)- இரு பிரிவினர் இடையே பிரச்சினையை ஏற்படுத்துதல், 505(2) -வதந்தியை ஏற்படுத்துதல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இன்று இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தமிழக சட்டசபையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #SterlitePlant
    பீளமேடு:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    மத்திய அரசு கொண்டு வந்த நீட் என்ற மரண கயிறு தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை சுக்கு நூறாக்கி அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தள்ளி உள்ளது.

    திருச்சியில் பஸ் டிரைவர் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வு தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே அனிதாவும், பிரதீபாவும் இதே நீட் தேர்வால் உயிரிழந்து உள்ளனர்.

    நீட் தேர்வு மூலம் சிறந்த டாக்டர்களை உருவாக்க முடியும் என்ற வாதம் பொய்யானது. தமிழகத்தை சேர்ந்த தணிகாசலம் உள்ளிட்ட பல டாக்டர்கள் வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2வில் 91.9 சதவீதம் தேர்ச்சி அடைந்த மாணவர்கள் நீட் தேர்வில் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிளஸ்-2 வில் 65 சதவீதம் பெற்ற பல மாநிலங்கள் முன்னணி இடத்தில் உள்ளது.

    தமிழக மாணவர்களை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம். ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் ஆலையை அனுமதி வாங்கி கண்டிப்பாக நடத்துவோம் என கூறி உள்ளார். அவருக்கு என்ன ஆணவம்?

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த ஆணையை காட்டி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.


    தற்போதைய ஆணைப்படி இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விட வாய்ப்பு உள்ளது. எனவே சட்டசபையை கூட்டி ஆலையை மூடுவதற்கான காரணங்களை விரிவாக சொல்லி சட்டம் கொண்டு வந்து ஆலையை மூட வேண்டும். அப்போது தான் ஆலையை திறக்க முடியாது.

    மகாராஷ்டிராவில் ஆலையை உடைத்த போது அனில் அகர்வால் ஏன் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவில்லை. ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி ராமநாத் போராடுபவர்கள் சமூக விரோதிகள் என கூறி உள்ளார்.

    நானும் பல போராட்டங்கள் நடத்தி உள்ளேன. அப்படி என்றால் நானும் சமூக விரோதியா? அவர் நாவை அடக்கி பேச வேண்டும். போராட்டம் நடத்துபவர்கள் சில அமைப்புகள் மூலம் பணம் பெற்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று கூறி உள்ளார். இது போன்ற கருத்துக்களை கூற வேண்டாம்.

    ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஓட்டுவோம் என கூறி உள்ளார். அவ்வாறு ஓட்டினால் ஆலை இருக்காது.

    ஸ்டெர்லைட் ஆலை பாக்கெட்டில் தமிழக அரசு உள்ளது. மோடி பாக்கெட்டில் ஸ்டெர்லைட் முதலாளியா? பணமா என்பது தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #SterlitePlant
    கோவையில் இருந்து சார்ஜாவுக்கு விமானத்தில் கஞ்சா கடத்த முயன்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    கோவை:

    கோவையில் இருந்து வளைகுடா நாடான சார்ஜாவுக்கு தினசரி விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று அதிகாலை 3 மணிக்கு சார்ஜாவுக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது.

    பயணிகள் விமானத்தில் ஏற காத்து இருந்தனர். விமானம் ஏற வந்த வாலிபர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

    அப்போது அவர் ஒரு பையில் 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் விசாரித்த போது அவர் சூடான் நாட்டை சேர்ந்த முகம்மது தாரிக் சாலிக் சடோல் (22) என்பது தெரிய வந்தது.

    இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவரை விமான நிலைய அதிகாரிகள் பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    கோவை விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் வரிச்சலுகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    கோவை:

    கோவையில் போலீஸ் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது-

    வரலாற்று சிறப்பு மிக்க போலீஸ் அருங்காட்சியகம் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஆதிகாலம் முதல் தற்போதைய நவீன காலம் வரை உள்ள பல்வேறு ஆயுதங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

    140 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இங்கு காவல் துறை சார்பில் பல்வேறு ஆயுதங்கள் இடம் பெற்றுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள், மாணவர்கள் பார்த்து தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    கோவை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பல்வேறு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இங்கு இரவு நேரத்தில் தங்கும் விமானங்களுக்கு எரி பொருள் நிரப்ப வரிச்சலுகை தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கோவையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்க வசதியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #CoimbatoreAirport #TNCM #Edappadipalanisamy
    ×