search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானங்கள்"

    • திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.55மணி, பகல் 12மணி, இரவு 9 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம்

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு தினமும் காலை 6.20மணி, 9.25மணி, மதியம் 12.30மணி, மாலை 6.40 மணிக்கும், இதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு காலை 8.55மணி, பகல் 12மணி, மாலை 3மணி, இரவு 9 மணிக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இன்று, இந்த 8 விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்த பயணிகளுக்கு மாற்று ஏற்பாடாக, இன்று மாலை 3.30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சிக்கும், மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னைக்கும், சிறப்பு பெரிய ரக விமானத்தை விமான நிறுவனம் இயக்குவதாகவும், விருப்பப்படும் பயணிகள் தங்கள் பயண டிக்கெட்டுகளை, அந்த விமானங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.
    • மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கோவை 

    கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உட்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது.

    தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பூனே, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்னர் தினமும் 35-க்கும் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் விமானங்கள் இயக்கம் வெகுவாக குறைந்தது.

    பல நாட்களுக்குப் பின்னர் மெல்ல இயல்பு நிலையை மீண்டும் திரும்ப தொடங்கியது. சமீபத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்தது. தற்போது மீண்டும் விமான போக்குவரத்து குறைய தொடங்கியுள்ளது. தினமும் இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 24, 23 ஆக குறைந்துள்ளது.

    இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-கோவை விமான நிலையத்தில் தற்போது ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் நிரம்பி செல்கின்றன. ஆனால் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன.

    சில சேவைகள் தற்காலி கமாக நிறுத்தப்பட்டுள்ளன. போதிய எண்ணிக்கையில் பயணிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாகும். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மீண்டும் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமான சேவை மீண்டும் தொடங்கும் என்றும் புதிதாக சில நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×