search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிபொருள்"

    • விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது.
    • மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆலந்தூர்:

    சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் உள் நாட்டு விமான சேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலானோர் தற்போது விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.

    விமான நிறுவனங்கள் தன்னுடைய வருமானத்தில் 45 சதவீதத்தை எரிபொருளுக்காகவே செலவு செய்யப்படுகிறது. மேலும் எரிபொருளின் விலை கடந்த மூன்று மாதங்களாக உயர்வை சந்தித்து வருகிறது.

    இந்நிலையில் எரி பொருள் விலை உயர்வு காரணமாக முன்னணி விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் விமான கட்டணத்தை ரூ.300 முதல் ரூ.1000 வரை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கட்டண உயர்வு முதல் 500 கிலோ மீட்டர் வரை ரூ.300 ,501 கி.மீ - 1000 கிலோமீட்டர் வரை ரூ.400, 1001- 1500 கி.மீட்டர் வரைரூ.550, 1501 -2500 கி.மீட்டர் வரை ரூ.650, 2501-3500 கி.மீட்டர் வரை ரூ.800, 3500 கிலோமீட்டருக்கு மேல் ரூ.1000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான டிக்கெட் கூடுதல் கட்டணம் உயர்வை முன்னிட்டு, மற்ற விமான நிறுவனங்களும் தங்களுடைய விமான டிக்கெட் கட்டணத்தை விரைவில் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • ஒரு மாத கால எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு.
    • நமது வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டி பிரச்சாரம்.

    பூதலூர்:

    பூதலூர் தாலூகா செங்கிப்பட்டி -கந்தர்வ கோட்டை சாலையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் எரிபொருள் சேமிப்பு விழிப்புணவு கூட்டம் மற்றும் பிரச்சார பேரணியை நடத்தியது.

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்ச கத்தின் கீழ், இந்தியாவில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு மாத கால எரிபொருள் சேமிப்பு விழிப்புணர்வு, பெட்ரோ லிய பொருட்களை

    வீணாகப்பயன்படுத்து வதைத் தவிர்த்து இவ்வ ளங்களை நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும், நமது வருங்கால சந்ததியினருக்கு

    ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இவ்விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பேரணி நடை பெற்றது.

    இதில் பாரத் பெட்ரோலிய அதிகாரிகள், டீலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது.
    • தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பேரவை கூட்டம் கொரடாச்–சேரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார்.

    பேரவை கூட்டத்தை தொடங்கி வைத்து மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்ட சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.

    நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.தம்புசாமி, கே.சீனிவாசன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் சிபிஎம் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது,

    தஞ்சாவூர் முதல் நாகை வரையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணி நீண்ட வருடங்களுக்கு பின் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

    இதனால் வேளாங்கண்ணி மற்றும் நாகப்பட்டினம், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி மற்றும் பல நகரங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது திருவாரூரில் இருந்து மன்னார்குடி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இதனால் கால நேரமும், கூடுதல் எரிபொருள் செலவு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. மேலும் தற்போது பெய்த மழையில் பல இடங்களில் சாலை சீர் குலைந்து, குண்டும், குழியுமாக மாறி அபாயகரமான சாலையாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.

    ஆகவே தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி இந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து மேற்கோண்டு மக்கள் பயன்பாட்டு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையிலிருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
    • எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்துள்ள ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறனின் மகன் ஹரிஹரமாதவன். தனியார் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் படித்து வரும் இவர் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் இருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இவரது சைக்கிள் பயணத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவன் ஹரிஹர மாதவன் நாகையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி அங்கிருந்து கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2000 கிலோமீட்டர் சைக்கிளிலேயே தனது பயணத்தை தொடர்கிறார்.

    இதன் மூலம் வழி நெடுகிலும் சந்திக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

    • எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    • கூட்டத்தில் ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் எரிபொருள் சிக்கனம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    கருத்தரங்கிற்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி நெடுஞ்செழிய பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தனியார் மினிபஸ் ஓட்டுநர்கள், பயிற்சி பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை மத்திய பெட்ரோலிய சேமிப்பு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு எரிபொருள் சிக்கனம், சாலை பாதுகாப்பு, மாசு கட்டுப்பாடு குறித்து பேசினார்.

    கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×