எரிபொருள் நெருக்கடியில் ஆஸ்திரேலியா.. பயணங்களை ரத்து செய்த பிரதமர் - பொதுப் போக்குவரத்துக்கு மாற மக்களுக்கு வேண்டுகோள் | Iran war

மார்ச் மாதம் முடிந்துவிட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் பிரச்சனைகள் மோசமடையக்கூடும். ஹார்முஸ் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது.
எரிபொருள் நெருக்கடியில் ஆஸ்திரேலியா.. பயணங்களை ரத்து செய்த பிரதமர் - பொதுப் போக்குவரத்துக்கு மாற மக்களுக்கு வேண்டுகோள் | Iran war
Published on

ஈரான் போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இன்று (ஏப்ரல் 1) அன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் தனது சமீபத்திய உள்நாட்டுப் பயணங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

தனது உரையில் அல்பானீஸ், "அன்சாக் தினத்திற்காக காலிபோலிக்கு நான் திட்டமிட்டிருந்த பயணத்தை ரத்து செய்துள்ளேன். அங்கு நான் காணொளி மூலம் உரையாற்றுவேன்.

அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன். சர்வதேசப் பயணங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன" என்று கூறினார்.

உள்ளூர் ஊடகங்களின்படி, அவசரக் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர, அல்பானீஸ் மே மாதம் வரை அத்தியாவசியமற்ற எந்த உள்நாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ள மாட்டார்.

அல்பானீஸ் பொதுமக்களிடம் மூன்று வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

அதில்,

"குடிமக்கள் தங்கள் சொந்த வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாறினால், அவர்களால் எரிபொருளைச் சேமிக்க முடியும்.

எண்ணெய் மற்றும் எரிவாயுவை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்வது எதிர்காலத்தில் பிரச்சனையை மேலும் மோசமாக்கக்கூடும்.

பொருளாதாரம் சீராக இயங்குவதற்கு, விவசாயிகளுக்கும் சிறு வணிகங்களுக்கும் முன்னுரிமை அளிக்க முயலுங்கள். உணவு மற்றும் விதைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாமல் நாம் உறுதி செய்ய வேண்டும்.

மார்ச் மாதம் முடிந்துவிட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் பிரச்சனைகள் மோசமடையக்கூடும். ஹார்முஸ் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமுடக்கத்தை விதிக்கப் போவதில்லை. பொருளாதாரத்தை சீராக இயங்க வைப்பதே எங்கள் நோக்கம்" என்று அல்பானீஸ் மேலும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com