search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM Modi"

    • பீகார் மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
    • மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள்.

    பிரதமர் மோடி இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் ராஷ்டிரிய கட்சி தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பதில் அளித்து கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி பீகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் டெல்லி மற்றும் பீகாரின் இளவரசர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் பிரதமர். அவரால் எதையும் சொல்ல முடியும். அவர் எங்களுடைய மூத்த நபர். நாங்கள் சிறிய மக்கள். அவர் என்ன விரும்புகிறாரோ, அதை பேச அவருக்கு உரிமை உண்டு.

    அவர் பிர்ஜாடா (pirzada). ஆனால் உண்மையை விட பொய்களைத்தான் நிறைய பேசுகிறார். அவர் தர்பங்காவிற்கு வந்திருக்கிறார். அதனால் பயனுள்ள விசயங்களை பேச வேண்டும். மித்திலா மக்கள் அறிவுஜீவிகள். அவர்கள் பயனுள்ள விசயங்களை கேட்க விரும்புவார்கள். பயனற்ற விசயங்களை கேட்க விரும்பமாட்டார்கள்.

    இங்குள்ள மக்களுக்காக அவர்கள் ஏதும் செய்யவில்லை. இந்த முறை பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மோடியின் பொய் வாக்குறுதிகளை கேட்டு மக்கள் சோர்ந்துவிட்டனர். அவர்கள் உண்மையை பேசுமாறு கேட்கிறார்கள். பீகாரை அவர்கள் மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்க்கிறார்கள். பீகாருக்காக எதையும் செய்யவில்லை. பா.ஜனதாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

    பெரிய பொய்யர் கட்சியைச் (Badka Jhootha Party) சேர்ந்தவர்களை தோற்கடித்து, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க பீகார் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

    இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

    • எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது.
    • பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது.

    குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பேசினார்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி கூறியதாவது:-

    எனது சகோதரரை இளவரசர் (Shehzada) என பாஜகவினர் அழைக்கின்றனர். இந்த 'இளவரசர்' குமரி முதல் காஷ்மீர் வரை 4000 கி.மீ. நடந்து, மக்களின் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். மறுபுறத்தில் (Shehanshah) 'ராஜாதிராஜா' நரேந்திர மோடி அரண்மனையில் வாழ்ந்து வருகிறார். தொலைக்காட்சியில் அவரை பார்த்திருக்கிறீர்களா? அவரது முகத்தில் ஒரு துளி தூசியைக் கூட பார்க்க முடியாது. அவரால் எப்படி மக்களின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும்?

    பெட்ரோல் மற்றும் டீசல் எவ்வளவு விலை உயர்ந்தது அல்லது விவசாயம் எவ்வளவு விலை உயர்ந்தது என்பதை அவர் எப்படி புரிந்துகொள்வார்?

    எல்லாப் பொருளுக்கும் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, எல்லாமே விலை உயர்ந்துவிட்டது. இதெல்லாம் மோடிக்கு புரியாது. அவர் கோட்டைக்குள் உள்ளார். அதிகாரத்தால் சூழப்பட்டிருக்கிறார். எல்லோரும் அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவரை யாரும் எதுவும் சொல்வதில்லை. யாரேனும் குரல் எழுப்பினால், அதை அடக்குவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
    • இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ராஞ்சி, மே. 4-

    பிரதமர் மோடி இன்று காலை ஜார்கண்ட் மாநிலம் பாலமுவில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    2014-ம் ஆண்டு உங்கள் வாக்கு மூலம் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை அகற்றினீர்கள். ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், பீகார், ஆந்திராவில் நக்சலைட்டுகள் பயங்கரவாதத்தை பரப்பி வந்தனர்.

    எனவே பல தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்தனர். அவர்களது மகன்கள் கெட்ட சகவாசத்தால் ஆயுதம் ஏந்திக் காடுகளை நோக்கி ஓடினார்கள். ஜார்கண்ட மாநிலம் நக்சலைட்டுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பா.ஜ.க. ஆட்சியால் உங்களது ஒவ்வொரு வாக்கும் இளம் பிள்ளைகளை காப்பாற்றியது. அவர்களின் தாய்மார்களின் நம்பிக்கையை நிறைவேற்றியது. இதுதான் ஒரு வாக்கின் பலம். உங்கள் ஒரு வாக்கின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள், அதன் விளைவாக ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. 500 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு ராமர் கோவில் கட்ட உங்கள் ஒரு வாக்கு பங்களித்தது.

    உங்களின் வாக்கு பயங்கரவாதத்தை தடுப்பதில் எங்களுக்கு உதவியது. பயங்கரவாதத்தை தடுப்பதில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதம் அதிகமாக இருந்தது. தற்போது இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் இல்லை.

    ஒரு காலத்தில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பலவீனமான காங்கிரஸ் அரசு உலகம் முழுவதும் சென்று கதறி அழுதது. இப்போது பாகிஸ்தான் உலகம் முழுவதும் கதறிக் கொண்டிருக்கிறது. சர்ஜிக்கல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் பாகிஸ்தானை உலுக்கியது.

    துல்லிய தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் தலைவர்கள், காங்கிரசின் இளவரசர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் வலுவான இந்தியா தற்போது வலுவான அரசாங்கத்தை மட்டுமே விரும்புகிறது.

    ஏழைகளுக்கு காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை. அவர்களது தலைமுறைக்காக ஏழைகளிடம் இருந்து கொள்ளையடித்தனர்.

    காங்கிரசும், ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சியும் அவர்களது பிள்ளைகளுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் நான் உங்களது பிள்ளைகளுக்காக உழைத்து கொண்டிருக்கிறேன். நான் மக்கள் பணி செய்வதற்காக பிறந்தவன்.

    கடந்த 25 ஆண்டுகளாக முதல்வராகவும், பிரதமராகவும் இருக்கும் என் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. எனக்கு சொந்தமாக வீடு இல்லை, சைக்கிள் கூட இல்லை. ஊழல் நிறைந்த ஜார்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாரிசுகளுக்காக பெரும் சொத்து குவித்துள்ளனர்.

    ஆனால் எனது வாரிசுகள் நீங்கள் அனைவரும்தான். உங்கள் பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் என் வாரிசுகள். வளர்ச்சியான பாரதத்தை உங்கள் குழந்தைகளுக்கு பாரம்பரியமாக கொடுக்க விரும்புகிறேன். என் குடும்பமும், கோடிக்கணக்கான குடும்பங்களும் சந்திக்க நேர்ந்ததை (வறுமை) நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை.

    வறுமையின் வலி பற்றி எனக்கு தெரியும். நான் ஏழ்மையில் வாழ்ந்தேன். ஒரு ஏழையின் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பதை அறிவேன். கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எனது வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டவை.

    நான் பயனாளிகளை சந்திக்கும் போது எனக்கு ஆனந்தக் கண்ணீர் வரும். ஏழ்மையையும், போராட்டத்தையும் கண்டவர்களால்தான் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியும். தனது தாய் அடுப்பில் புகையால் இருமுவதைக் காணாதவரால் இந்த கண்ணீரைப் புரிந்து கொள்ள முடியாது.

    மோடியின் கண்ணீரில் காங்கிரசின் இளவரசர் (ராகுல் காந்தி) தனது மகிழ்ச்சியைத் தேடுகிறார். வறுமை பற்றி காங்கிரசுக்கு என்றைக்குமே தெரியாது. காங்கிரஸ் இளவரசர் தான் பணக்காரராக இருப்பதற்காக பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.

    நீங்கள் வறுமையில் வாழ்வதை நான் விரும்பவில்லை. வறுமையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்.

    நான் உயிருடன் இருக்கும் வரை முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சட்டத்தை மாற்றுவதில் காங்கிரசின் எந்த வடிவமைப்பையும் வெற்றிபெற அனுமதிக்க மாட்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி- மரியம் ஆலம்.
    • மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலம் பர்தாமன்-துர்காபூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாங்கள் இங்கே அனுபவிப்பதற்கான வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன். மேற்கு வங்காளத்தில் இந்துக்களை திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாம் தர குடிமக்களாக்கியுள்ளது. காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்றி தலித் மற்றும் ஓபிசி இடஒதுக்கீடுகளை பறித்து ஜிஹாதி வாக்கு வங்கிக்கு வழங்க விரும்புகிறது.

    மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக அளிக்க முடியுமா? என காங்கிரஸ்க்கு சவால் விட்டிருந்தேன். ஆனால், அவர்கள் அமைதியாக உள்ளனர். காங்கிரசின் இளவரசர் பயந்து ரேபரேலியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்காள அரசுக்கு மனிதாபிமானத்தை விட சமரச அரசியல்தான் மிகவும் முக்கியமானது. இதனால் சந்தேஷ்காளி குற்றவாளி ஷேக் ஷாஜகானை பாதுகாத்து வருகிறது. மோடிக்கு எதிரான வாக்கு ஜிஹாத் அழைப்புக்கு காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அமைதி காப்பதன் மூலம் அவர்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

    காங்கிரஸ் கட்சி 2024 தேர்தலில் இதுவரை எந்த காலத்திலும் மிகவும் குறைவான எண்ணிக்கை என்ற வகையில் மக்களவை தேர்தலில் வெற்றி பெறும்.

    காங்கிரஸ் தலைவர் மக்களவை உறுப்பினர் பதவியை விட்டுவிட்டு மாநிலங்களை மூலும் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளார். இதன்மூலம் அக்கட்சியின் உடனடித் தோல்வியை முன்னதாகவே கண்டேன். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சமரச அரசியலுக்காக சிஏஏ-வை எதிர்க்கிறது. எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் சமரச அரசியலை மட்டுமே நம்புகின்றனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

    முன்னதாக உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மக்களவை தொகுதியில் போட்டியிடும் நாவல் கிஷோர் ஷக்யாவை ஆதரித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், சல்மான் குர்ஷித்தின் உறவினருமான (Niece- சகோதரர் மகள், அல்லது சகோதரி மகள்) மரியா ஆலம் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    அப்போது மரியா ஆலம் கூறியதாவது:-

    புத்திசாலிதனத்தோடு, உணர்ச்சிவசப்படாமல் அமைதியாக ஒன்றிணைந்து ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள். பா.ஜனதா அரசை வெளியேற்ற இது ஒன்றுதான் வழி. அரசியலமைப்பு, ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன். மனிதாபிமானம் (மனிதநேயம்) அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

    நாடு, அதன் அழகு மற்றும் கலாசாரம் ஆகியவற்றை பாதுகாக்க விரும்பினால், எந்தவிதமான உந்துதலையும் பெறாமல் புத்திசாலித்தனமாக வாக்களிக்களியுங்கள். பா.ஜனதாவுக்கு வாக்களிக்கும் முஸ்லிம்களை புறக்கணியுங்கள்.

    இவ்வாறு மரியம் ஆலம் பேசியிருந்தார்.

    இந்த வீடியோ வைரலாக பரவி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் மீதும், அவர் பேசியபோது அங்கிருந்து சல்மான் குர்ஷித் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டள்ளது.

    இது தொடர்பாக முன்னதாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி முஸ்லிம்கள் ஜிஹாத்துக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளது. இது மிகவும் கல்வியறிவு பெற்ற குடும்பத்தில் இருந்து வந்துள்ளது. மதராஸில் இருந்து வந்த சிறுவனிடம் இருந்து வரவில்லை. அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி கூறிக் கொண்டு வருகிறது. இதன்மூலம் இந்தியா கூட்டணி அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை இழிவுப்படுத்தியுள்ளது.

    ஒருபுறம் SC, ST, OBC மற்றும் பொது பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கூட்டணி மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற முழக்கத்தை எழுப்பி வருகிறது. அவர்களின் எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பதில் அளித்திருந்தார்.

    இந்த நிலையில்தான் ஜிஹாத் வாக்கு வங்கி எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோயில்- மசூதி, தாலி, பசு, எருமை.
    • 2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும்.

    பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டு ஆட்சி காலத்தில் அவர்களுடைய செயல்பாடுகளை சுட்டிக்காட்டி வாக்கு கேட்காமல் வெறுப்பு வார்த்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

    குறிப்பாக எஸ்.டி., எஸ்.சி., ஓபிசி-க்களின் இடஒதுக்கீடு இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்க காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். மேலும், நாட்டில் உள்ள தாய்மார்கள், சகோதரிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்து அளிக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடி பேச்சு குறித்து ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

    இந்தியில் கிட்டதட்ட 1.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. டெக்னிக்கல் மற்றும் படிப்பு தொடர்பான அனைத்து பிரிவுகள் உள்பட ஏறத்தாழ 6.5 லட்சம் வார்த்தைகள் உள்ளன. ஆனால் பிரதமர் மோடிக்கு தற்போது மிகவும் பிடித்த வார்த்தைகள்... பாகிஸ்தான், சுடுகாடு, இந்து- முஸ்லிம், கோவில்- மசூதி, தாலி, பசு, எருமை.

    2-வது கட்ட வாக்குப்பதிவு வரையே இந்த பட்டியல். இன்னும் ஏழு கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், போகப்போக இதில் புதிய வார்த்தைகள் சேரும். வேலைவாய்ப்பு, ஏழைகள், விவசாயிகள், விலைவாசி, வளர்ச்சி, இளைஞர்கள், அறிவியல், முதலீடு போன்ற வார்த்தைகளை அவர் மறந்துவிட்டார்.

    இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • நான் மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.
    • காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள்.

    மேற்குவங்கம்:

    உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 15 தொகுதி வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ் அமேதி, ரேபரேலி தொகுதி வேட்பாளர்களை மட்டும் அறிவிக்காமல் இருந்தது

    இதனிடையே அமேதியில் ராகுலும், ரேபரேலி தொகுதியில் பிரியங்காவும் களம் இறக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நீண்ட இழுபறிக்கு பிறகு ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலும், கே.எல். சர்மா அமேதி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதை மேற்குவங்கத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளால் வளர்ச்சியை கொண்டு வர முடியாது. வாக்குக்காக சமூகத்தை பிளவுபடுத்துவது மட்டுமே அவர்களுக்கு தெரியும். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஒருவர், பாகீரதியில் வெறும் 2 மணி நேரத்தில் இந்துக்களை மூழ்கடித்து விடுவார்கள் என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது என்ன பேச்சு மற்றும் அரசியல் கலாச்சாரம்? இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மேற்கு வங்கத்தில் இந்துக்களை இரண்டாம் குடிமக்களாக திரிணாமுல் காங்கிரஸ் ஆக்கியது போல் தெரிகிறது.

    சந்தேஷ்காலியில் எங்கள் தலித் சகோதரிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. ஆனால் குற்றவாளியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாதுகாத்தது.

    இதற்கு குற்றவாளியின் பெயர் ஷாஜகான் ஷேக் என்பதுதான் காரணமா? ஒரு வாக்கு வங்கி மனித நேயத்திற்கு மேல் இருக்க முடியுமா?

    காங்கிரஸ் வெளிப்படையாகவே ஓட்டு ஜிகாத்தை ஆதரிக்கிறது. அதை இந்தியா கூட்டணியும் ஆதரிக்கிறது.

    அரசியலமைப்பை மாற்றவும், தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டைப் பறிக்கவும், ஜிகாதி வாக்கு வங்கிக்கு இடஒதுக்கீடு வழங்கவும் காங்கிரஸ் விரும்புகிறது.

    இங்கு நான் தலித், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் சகோதரர்களுக்காக வந்துள்ளேன். எஸ்.சி, எஸ்.டி.யினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பிற்படுத்தப்பட்டோருக்கு எதிர்க்கட்சிகள் எதுவும் செய்யவில்லை. வாக்கு வங்கி அரசியலை எதிர்க்கட்சிகள் நிறுத்தி கொள்ள வேண்டும்.

    நான் மக்களுக்கு சேவை செய்ய எனது வாழ்க்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்.

    மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு காங்கிரசுக்கு நான் சவால் விடுத்தேன். ஆனால் அவர்கள் பதில் கூறாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

    காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மிகவும் பயந்து போய் இருக்கிறார். அவர் அமேதி தொகுதியை பார்த்து அங்கு போட்டியிடாமல் பயந்து ஓடி விட்டார். தற்போது அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். அமேதியில் போட்டியிட பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார்.

    ராகுல்காந்தி ஏற்கனவே தோல்வி பயத்தில் உள்ளார். அவர் வயநாடு தொகுதியில் தோல்வியை சந்திப்பார். ரேபரேலி தொகுதியில் அவருக்கு தோல்விதான் ஏற்படும்.

    வயநாட்டில் தோற்று விடுவோம் என அவருக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டது. இதனால் அவர் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கும் அவருக்கு தோல்வி காத்திருக்கிறது.

    அடுத்து அவர் மூன்றாவது தொகுதியை தேடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் தேர்தலுக்கு முன்பே தோல்வி பயத்தில் தொகுதிக்கு வராமல் இருக்கிறார்கள்.

    அச்சப்பட வேண்டாம் என அனைவரையும் பார்த்து கூறும் அவர்கள், அமேதி தொகுதியை பார்த்து அச்சப்படுகின்றனர்.

    நான் அவர்களை பார்த்து கூறுகிறேன் அச்சப்பட வேண்டாம். ஓடி, ஒளிய வேண்டாம்.

    சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட பயந்து மேல்சபை எம்.பி ஆகி உள்ளார். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? என்றார்.

    • 8-ந்தேதி ராஜம்பேட்டையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டிக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
    • அன்று மாலை 6 மணிக்கு இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பென்ஸ் சர்க்கிள் வரை பிரதமர் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் வருகிற 7-ந்தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அனக்காபள்ளியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அங்கிருந்து ராஜமுந்திரி செல்லும் பிரதமர் மோடி பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மாநில தலைவர் புரந்தேஸ்வரியை ஆதரித்து பேசுகிறார்.

    8-ந்தேதி ராஜம்பேட்டையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டிக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.

    அன்று மாலை 6 மணிக்கு இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பென்ஸ் சர்க்கிள் வரை பிரதமர் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.

    இதேபோல் வருகிற 7-ந்தேதி கடப்பாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவரும் கடப்பா பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஒய் எஸ் சர்மிளாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.
    • பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடைய சகோதரி சர்மிளா தாக்கி பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதனை கேட்டதும் ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்தால் போதும் அதனால் என்னுடைய சகோதரியை அரசியலுக்கு வர வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் கேட்காமல் தெலுங்கானா அரசியலில் இறங்கினார்.

    சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு எனது சகோதரியை ஆந்திர மாநிலத்தில் அரசியலில் களமிறக்கி உள்ளனர். இதனால் எனது குடும்ப உறவுகள் சீர்குலைந்துள்ளன. அரசியலில் இருந்தாலும் இருவரும் மக்களுக்கு நன்மையை செய்யுங்கள் எனக்கூறி எங்களுடைய தாயார் ஒதுங்கி இருக்கிறார்.

    ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறும். தனி மனிதர்களை பார்த்து ஆதரவு அளிப்பது எனது நோக்கம் அல்ல. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன்.

    பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சிறுபான்மையினர் மீதான அவரது கருத்துக்கள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.

    ராகுல் காந்திக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. ராகுல் குறித்து என்னுடைய கருத்து ஒருபோதும் பாரபட்சமற்றதாக இருக்க முடியாது. என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.

    எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி முயற்சி செய்தது. அதேபோல் ராகுல் காந்திக்கு ஒரு போதும் ஆதரவு இல்லை என்ற நிலையில் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இங்கு தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டி, ராகுல் காந்திக்கு ஆதரவு இல்லை என தெரிவித்திருப்பதன் மூலம் அவர் வெற்றி பெற்றாலும் பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     ஆந்திராவில் 25 தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் மோடிக்கு தான் ஆதரவு கிடைக்கும் என பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள்
    • தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மோடி அப்போது உறுதியளித்தார்

    நேற்று பீகார் மாநிலம் மதுபானியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கடந்த காலங்களில் மோடி பேசிய வாக்குறுதிகளை கையடக்க புளூடூத் ஸ்பீக்கரில் ஒலிபரப்பினார்.

    பீகாரில் 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போதைய குஜராத் முதல்வர் மோடி ஆற்றிய பல உரைகளின் தொகுப்பை தேஜஸ்வி ஒலிபரப்பினார்.

    மோடி பேசும் அந்த ஆடியோவில், "பணவீக்கம் இப்படியே உயர்ந்து கொண்டே போனால் ஏழைகள் என்ன சாப்பிடுவார்கள். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பணவீக்கம் என்ற வார்த்தையை உச்சரிக்க கூட தயாராக இல்லை.

    நாட்டின் தலைவர்கள் ஏழைகளைப் பற்றிக் கூட கவலைப்படுவதில்லை. நீங்கள் அவர்களுக்கு வாக்களிக்க விரும்பினால், உங்கள் வீட்டில் இருக்கும் கேஸ் சிலிண்டருக்கு நமஸ்காரம் செய்யுங்கள். ஏனெனில் அவர்கள் உங்கள் வீட்டிலிருக்கும் கேஸ் சிலிண்டர்களை பிரித்துள்ளனர்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால், பீகாரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ரூ.1.25 லட்சம் கோடி நிதி வழங்குவதாகவும், தேவைப்பட்டால் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்" என்று மோடி பேசியுள்ளார்.

    • உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் கடிதம் தோற்றமளிக்கிறது.
    • இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

    காங்கிரஸ் கட்சி எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி-யின் இடஒதுக்கீடுகளை பறித்து அவர்களுக்கு வாங்கி வங்கிக்கு கொடுக்க இருப்பதாகவும், மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருப்பதாகவும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது தொடர்ந்து கூறி வருகிறார்.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஏழை, விளிம்பு நிலையில் இருப்பவர்கள், பெண்கள், ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழிலாளர் வகுப்பை சேர்ந்தவர்கள், தலித் மற்றும் பழங்குடியினர் உள்ளிட்ட ஒவ்வொரு இந்தியனும் எங்களுடைய வாக்கு வங்கி. வெறுப்பு பேச்சில் ஈடுபடுவதற்குப் பதிலாக கடந்த 10 ஆண்டுகளில் உங்களுடைய அரசு செய்த செயல்பாட்டை மக்களிடம் தெரிவித்து வாக்கு கேளுங்கள்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தில், வேட்பாளர்களிடம் வாக்கு கேட்கும்போது என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து பார்த்தேன்.

    கடிதத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்கும்போது உங்களுக்குள் மிகுந்த விரக்தியும் கவலையும் இருப்பதாகத் தெரிகிறது. இது பிரதமரின் அலுவலகத்திற்குப் பொருந்தாத மொழியைப் பயன்படுத்த உங்களை வழி நடத்துகிறது.

    உங்கள் பேச்சுகளில் உள்ள பொய்கள் நீங்கள் நினைத்ததை கொண்டிருக்கவில்லை என்பதுபோல் அந்தக் கடிதம் தோற்றமளிக்கிறது. இப்போது உங்கள் வேட்பாளர்கள் உங்கள் பொய்களைப் பெரிதாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை சொன்னாலும் அது உண்மை ஆகாது.

    எங்கள் தேர்தல் அறிக்கை உத்தரவாதங்கள் மிகவும் எளிமையானவை மற்றும் தெளிவானவை, நாங்கள் அதை விளக்க வேண்டியதில்லை. உங்கள் நலனுக்காக, அவற்றை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன் (தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கியமான விசயங்களை குறிப்பிட்டுள்ளார்).

    காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியலை மேற்கொள்கிறது என்று நீங்களும் உள்துறை அமைச்சரும் சொல்வதை நாங்கள் கேட்டிருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் நாங்கள் கண்ட ஒரே திருப்திப்படுத்தும் கொள்கை, நீங்களும் உங்கள் அமைச்சர்களும் சீனர்களைத் திருப்திப்படுத்துவதுதான். இன்னும் நீங்கள் சீனாவை ஊடுருவிகள் என அழைக்க மறுக்கிறீர்கள். நீங்கள் ஒருவர் கூட ஊடுருவவில்லை எனக்கூறி கல்வான் பள்ளத்தாக்கில் வீர மரணம் அடைந்து 20 வீரர்களை இழிவு படுத்துகிறீர்கள்.

    சீனாவுக்கு க்ளின் சீட் வழங்கி, இந்தியாவின் வழக்கை பழவீனப்படுத்தி, மேலும் போர்க்குணமாக்கியுள்ளனர். ராணுவ கட்டமைப்புகளை அருணாச்சல பிரதேசம், லடாக், உத்தரகாண்ட் எல்லையில் உருவாக்கி தொடர்ந்து பதற்றம் அதிகரித்த நிலையில்தான் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் மதிப்பு 54.76 சதவீதம் அதிகரித்து, 2023-24-ல் 101 பில்லியன் அமெரிக்க டாலரை கடந்துள்ளது.

    மக்கள் தொகை அடிப்படையில் அரசியலமைப்பு 16-வது பிரிவின்படி எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து விளக்க வேண்டும்.

    உங்கள் கடிதத்தில் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிக்கப்பட்டு கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள். குஜராத்தில் ஏழை தலித் விவசாயிகளிடம் இருந்து மோசடி செய்து பாஜகவுக்கு தேர்தல் பத்திரமாக வழங்கப்பட்ட ரூ.10 கோடியை உங்கள் கட்சி திருப்பி கொடுக்குமாறு இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

    முதல் இரண்டு கட்டத் தேர்தல்களில் குறைந்த வாக்காளர்கள் வாக்களித்ததால் நீங்கள் கவலைப்படுகிறீர்கள். உங்கள் கொள்கைகள் அல்லது உங்கள் பிரச்சார உரைகளில் மக்கள் ஆர்வமாக இல்லை என்பதை இது காட்டுகிறது. இது கோடை வெயிலால் அல்ல, உங்களின் கொள்கைகளால் ஏழைகள் வாடுகிறார்கள்.

    உங்கள் தலைவர்களால் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருவதைப் பற்றி பேச உங்களுக்கு ஆர்வம் இல்லை.

    வெறுப்புப் பேச்சுக்களுக்குப் பதிலாக, கடந்த பத்து வருடங்களில் உங்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு வாக்குஅளிக்கும்படி கேட்பது சிறந்ததாக இருக்கும். தேர்தல் முடிந்ததும், தவிர்க்க முடியாத தோல்வியைத் தவிர்க்கும் வகையில் மக்களைப் பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதப் பேச்சுக்களில் ஈடுபட்ட பொய்கள் நிறைந்த பிரதமராக மட்டுமே மக்கள் உங்களை நினைவு கூர்வார்கள்.

    இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் திடீரென நீக்கப்பட்டது.
    • பிரதமர் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    புதுடெல்லி:

    உலகையே உலுக்கிய கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளில் கோவிஷீல்டு முக்கியமானது. இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பூசி உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வினியோகம் செய்தது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் கோடிக்கணக்கானோர் போட்டுக்கொண்டனர்.

    இந்த கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. அரிதான சந்தர்ப்பங்களில் ரத்தம் உறைதல் மற்றும் அது தொடர்பான விளைவுகளை உருவாக்கும் என இங்கிலாந்து கோர்ட்டில் அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் பெரும் அச்சத்தில் உறைந்து உள்ளனர்.

    இந்த மருந்தை இந்தியாவில் அனுமதித்ததற்காக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் சாடி வருகின்றனர்.

    கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான கோவின் சான்றிதழை மக்கள் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தச் சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக கோவின் எனப்படும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை சிலர் பதிவிறக்கம் செய்ய முயன்றனர். அப்போது அதில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை. கோவிஷீல்டு சர்ச்சையை ஒட்டி அவரது புகைப்படம் நீக்கப்பட்டதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி, இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டனர்.

    இந்நிலையில், கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்துவருகிறது. எனவே, பிரதமர் மோடியின் புகைப்படம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    மேலும், இப்படி நடப்பது முதல் முறை அல்ல. கடந்த 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில தேர்தலின் போதும் இதேபோன்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டது எனவும் தெரிவித்துது.

    • இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது.
    • இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத் மாநிலம் ஆனந்த் பகுதியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசியதாவது:-

    நான் குஜராத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்த தேர்தலில் நாம் புதிய சாதனை படைப்போம்.

    2014-ல் நீங்கள் என்னை நாட்டுக்கு சேவை செய்ய அனுப்பினீர்கள். குஜராத்தில் பணிபுரியும்போது குஜராத்தின் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று ஒரு மந்திரம் இருந்தது. நாட்டுக்கு என்ன நடந்தாலும் குஜராத் முன்னேற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை.

    2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 24 மணிநேரமும் (24x7) உழைப்பேன் என்பது எனது உத்தரவாதம். 10 ஆண்டுகளில் 14 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்தோம். காங்கிரஸ் கட்சியோ 60 ஆண்டுகளில் வெறும் 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே கொடுத்தது.

    இந்தியாவில் இன்று காங்கிரஸ் பலவீனம் அடைந்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் இங்கு காங்கிரஸ் அழிந்து கொண்டிருக்கிறது. அங்கே பாகிஸ்தான் அழுகிறது.

    தற்போது காங்கிரசுக்காக பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். இளவரசரை (ராகுல் காந்தி) பிரதமராக்க பாகிஸ்தான் துடிக்கிறது. இந்தியாவில் பலவீனமான அரசு வருவதை பாகிஸ்தான் விரும்புகிறது. 

    பாகிஸ்தானை பின்பற்றும் ரசிகனாக காங்கிரஸ் இருப்பது நமக்கு முன்பே தெரியும். பாகிஸ்தான் முன்னாள் மந்திரி காங்கிரசை பாராட்டுகிறார். பாகிஸ்தானுக்கும், காங்கிரசுக்கும் இடையேயான இந்த கூட்டு தற்போது முற்றிலும் அம்பலமாகி உள்ளது.

    2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிவாங்க பலவீனமான காங்கிரஸ் அரசு தவறிவிட்டது.

    இந்தியா கூட்டணி அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுகூடி வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்தியா கூட்டணி ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அவமதித்துவிட்டது.

    ஒருபுறம் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் பொதுப் பிரிவினரை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியா கூட்டணி, மறுபுறம் வாக்கு ஜிகாத் என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. அவர்களது எண்ணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை இது காட்டுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


    ×