search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lalu Yadav"

    • யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    • விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.

    அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.

    இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

    • பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    பீகார் முதல்வரம், ஐக்கிய ஜனதா தளம் கட்சித்தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தி.மு.க. சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவால், ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பேனர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 6 மாநில முதல் மந்திரிகள் பங்கேற்றனர்.

    இந்நிலையில், கூட்டம் முடிந்ததும் முதல் மந்திரி நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

    அப்போது லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

    இப்போது நான் முழு உடல் தகுதியுடன் உள்ளேன், மேலும்  நரேந்திர மோடியை எதிர்கொள்ளவும் உடல் தகுதியுடன் இருக்கிறேன். நாட்டின் நிலைமை தற்போது மோசமாக உள்ளது. ஜூலை மாதம் சிம்லாவில் மீண்டும் ஒரு கூட்ட நிரலை தயார் செய்வோம். 2024ல் பாஜகவை எதிர்த்துப் போராட அந்தந்த மாநிலங்களில் பணியாற்றும்போது ஒன்றிணைந்து முன்னேறுவோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    லாலு பிரசாத் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். #LaluPrasad #TejPratap
    பாட்னா:

    பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும், பாரதீய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் ‘சீட்’ வழங்குவதில் மோதல் வெடித்துள்ளது. லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதேபோன்று கூட்டணி கட்சித்தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் லாலு பிரசாத்தின் இளையமகன் தேஜஸ்வி பிரசாத் யாதவை ஈடுபடுத்தி விட்டு, தேஜ் பிரதாப் யாதவை ஓரங்கட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதில் கடும் அதிருப்தி அடைந்த தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மாணவர் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நேற்று விலகினார். இதை ‘பேஸ்புக்’ பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார். 
    பீகாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. #Bihar #LaluYadav #Congress
    பாட்னா:

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கொண்டுள்ள பீகார் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு ஆளும் கட்சியாக உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், பாரதீய ஜனதா கட்சியும், ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கூட்டணிக்கு சரியான போட்டியை ஏற்படுத்துகிற விதத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய லோக்சமதா, இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது), விகாஷீல் இன்சான் கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கட்சிகள் இடையே நேற்று தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.

    மொத்தம் உள்ள 40 இடங்களில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் தரப்பட்டுள்ளன.

    உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக்சமதா கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜித்தன் ராம்மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மத சார்பற்றது) கட்சிக்கு 3 தொகுதிகளும், முகேஷ் சானியின் விகாஷீல் இன்சான் கட்சிக்கு 3 இடங்களும் தரப்பட்டுள்ளன.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்டு) கட்சிக்கு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தனது தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியை ஒதுக்கித்தருகிறது.

    காங்கிரசுக்கு மாநிலங்களவை இடம் ஒன்றும் தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் மத்திய மந்திரி சரத் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி சின்னத்தில் போட்டியிடுவார். தேர்தலுக்கு பின்னர் அவர் தனது லோக்தந்திரிக் ஜனதாதளம் கட்சியை ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் இணைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

    இடது சாரி கட்சிகளுக்கு இந்த கூட்டணியில் இடம் தரப்படவில்லை. இது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி கூறி உள்ளார்.
    மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் லாலு பிரசாத், தனது மகன் திருமணத்துக்கு வழங்கப்பட்ட 3 நாட்கள் பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    ராஞ்சி:

    பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. 

    முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டு தண்டனையும் லாலுவுக்கு வழங்கப்பட்டது. 

    ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மகனின் திருமணத்துக்காக 5 நாள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 3 நாள் பரோல் மட்டுமே கிடைத்திருந்தது.

    இந்நிலையில், மகனின் திருமணத்தில் பங்கேற்ற லாலு பிரசாத், தனது பரோல் முடிந்து இன்று ராஞ்சி சிறைக்கு திரும்பினார். முன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரியிருந்த லாலுவுக்கு, 6 வார காலம் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே ஜாமீனுக்கான நடைமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் 6 வார கால ஜாமினில் லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பவுள்ளார். #LaluPrasadYadav
    ×