என் மலர்
நீங்கள் தேடியது "parole"
கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிக்கு இல்லற வாழ்வுக்காக 15 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #MadrasHC
சென்னை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 28). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, என் கணவர் சிறையில் இருந்து வருகிறார். எனது இல்லற வாழ்வுக்காக அவருக்கு 2 வார காலம் பரோல் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அனைத்து குற்றவாளிகளுக்கும் தங்களது இல்லற வாழ்வை தொடர உரிமை இருப்பதாக ஐகோர்ட்டு மதுரை கிளை ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதை மனுதாரர் வக்கீல் சுட்டிக்காட்டி வாதிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
பெருமாளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அந்த உத்தரவில், ‘பெருமாள் பரோலில் செல்லும்போது, சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் பெருமாள் வெளியில் செல்வதால் அவரது பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு வருகிற ஜனவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை சிறை துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #MadrasHC
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 28). இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பெருமாளின் மனைவி முத்துமாரி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, என் கணவர் சிறையில் இருந்து வருகிறார். எனது இல்லற வாழ்வுக்காக அவருக்கு 2 வார காலம் பரோல் வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் சி.டி.செல்வம், எஸ்.ராமதிலகம் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அனைத்து குற்றவாளிகளுக்கும் தங்களது இல்லற வாழ்வை தொடர உரிமை இருப்பதாக ஐகோர்ட்டு மதுரை கிளை ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளதை மனுதாரர் வக்கீல் சுட்டிக்காட்டி வாதிட்டார். இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.
பெருமாளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அந்த உத்தரவில், ‘பெருமாள் பரோலில் செல்லும்போது, சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் பெருமாள் வெளியில் செல்வதால் அவரது பாதுகாப்பை போலீசார் உறுதி செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கு வருகிற ஜனவரி 2-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அன்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கையை சிறை துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #MadrasHC
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள இளவரசி 15 நாட்கள் ‘பரோல்’ காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 மாதங்கள் ஆகின்றன.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு இளவரசி முதல் முறையாக சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார்.
அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம், இளவரசிக்கு நிபந்தனையுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து இளவரசி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்தார்.
15 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து இளவரசி நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு சுமார் 20 மாதங்கள் ஆகின்றன.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்க்க 15 நாட்கள் பரோல் வழங்குமாறு இளவரசி முதல் முறையாக சிறை நிர்வாகத்திடம் மனு வழங்கினார்.
அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட சிறை நிர்வாகம், இளவரசிக்கு நிபந்தனையுடன் 15 நாட்கள் பரோல் வழங்கியது. இதையடுத்து இளவரசி கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி பரோலில் விடுவிக்கப்பட்டார். அவர் சென்னையில் தங்கியிருந்தார்.
15 நாட்கள் பரோல் காலம் முடிவடைந்ததை அடுத்து இளவரசி நேற்று பெங்களூரு சிறைக்கு திரும்பினார். #Ilavarasi #BangaloreJail
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையில் உள்ள இளவரசிக்கு 15 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #Ilavarasi
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சசிகலா 2 முறை பரோல் மூலம் சென்னை சென்று வந்தார்.
ஆனால் இளவரசி சிறைக்கு சென்ற பிறகு இதுவரை பரோல் கேட்கவில்லை. இதற்கிடையே சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலா, இளவரசிக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதில் லஞ்சம் கைமாறப்பட்டதாக எழுந்த புகாரை கர்நாடக ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது சகோதரரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை பார்க்க பரோல் வழங்க கோரி சிறை நிர்வாகத்திடம் இளவரசி மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில், கர்நாடக சிறைத்துறை இளவரசிக்கு பரோல் வழங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இன்று மாலை சிறையில் இருந்து இளவரசி வெளியே வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ, ஊடகங்களை சந்திக்கவோ கூடாது போன்ற நிபந்தனைகளுடன் இளவரசிக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 8-ம் தேதி மாலை 6 மணிக்குள் மீண்டும் சிறைக்கு திரும்புமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு 21 மாதங்கள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Ilavarasi
ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் அஜய் சிங் சவுதாலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வர டெல்லி ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளது. #AjayChautala
புதுடெல்லி:
அரியானா மாநிலத்தில் கடந்த 2000ம் ஆண்டு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் ஊழல் செய்தது தொடர்பாக இந்திய தேசிய லோக் தள் தலைவர் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 53 பேர் மீது குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இதில், அஜய் சிங் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், சிறையில் இருந்தபடியே தொலைதூரக் கல்வி மூலம் முதுநிலை டிப்ளமோ படித்து வரும் அஜய் சிங் சவுதலா தேர்வு எழுதுவதற்காக பரோலில் சென்று வருகிறார்.

அவ்வகையில், நாளை நடைபெற உள்ள தேர்வை எழுதுவதற்காக பரோலில் அரியானா செல்ல அனுமதி கேட்டு அஜய் சிங் சவுதாலா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரியானா மாநிலம் சிர்சாவில், நாளை பிற்பகல் பி.ஜி. டிப்ளமோ தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வினோத் கோயல், தேர்வு எழுதுவதற்காக அஜய் சவுதாலாவுக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டார். இன்று சவுதாலாவை சிறையில் இருந்து பரோலில் விடுவிக்க வேண்டும் என்றும், ஜூலை 1-ம் தேதி அவர் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். #AjayChautala
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று வரும் லாலு பிரசாத், தனது மகன் திருமணத்துக்கு வழங்கப்பட்ட 3 நாட்கள் பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்பினார். #LaluPrasadYadav
ராஞ்சி:
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டு தண்டனையும் லாலுவுக்கு வழங்கப்பட்டது.
ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட லாலு, உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது மகனின் திருமணத்துக்காக 5 நாள் பரோல் கேட்டிருந்தார். ஆனால், 3 நாள் பரோல் மட்டுமே கிடைத்திருந்தது.

இந்நிலையில், மகனின் திருமணத்தில் பங்கேற்ற லாலு பிரசாத், தனது பரோல் முடிந்து இன்று ராஞ்சி சிறைக்கு திரும்பினார். முன்னதாக, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரியிருந்த லாலுவுக்கு, 6 வார காலம் ஜாமின் அளிக்கப்பட்டது. எனவே ஜாமீனுக்கான நடைமுறைகளை முடித்துவிட்டு, மீண்டும் 6 வார கால ஜாமினில் லாலு பிரசாத் யாதவ் வீடு திரும்பவுள்ளார். #LaluPrasadYadav
மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு தற்போது மகன் திருமணத்துக்கான பரோலில் வந்துள்ள லாலு பிரசாத் யாதவுக்கு 6 வாரம் ஜாமின் வழங்கி ராஞ்சி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluPrasadYadav
ராஞ்சி:
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.
இதனை அடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி அவர் ராஞ்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று பரிசீலித்த நீதிபதிகள் 6 வார காலம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, அவரது மகன் திருமணத்தை ஒட்டி அவருக்கு சிறைத்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav
பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் சிக்கினார். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் லாலு பிரசாத் யாதவ் மீது தொடரப்பட்டது. இதில் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
முதல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், 2-வது வழக்கில் 3½ ஆண்டுகளும், 3-வது வழக்கில் 5 ஆண்டும் லாலுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் ராஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கால்நடை தீவன முறைகேடு தொடர்பான நான்காவது வழக்கில் அவருக்கு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பாட்னா திரும்பிய போது
அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அடுத்து, டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து மீண்டும் பாட்னா ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மருத்துவர்களின் கண்கானிப்பில் உள்ளார்.
இதனை அடுத்து, உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கோரி அவர் ராஞ்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை இன்று பரிசீலித்த நீதிபதிகள் 6 வார காலம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
ஏற்கனவே, அவரது மகன் திருமணத்தை ஒட்டி அவருக்கு சிறைத்துறை 3 நாட்கள் பரோல் வழங்கியதை அடுத்து நேற்று சிறையில் இருந்து வீட்டுக்கு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. #LaluPrasadYadav
கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைதாகி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு, தனது மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. #laluseekingparol
ராஞ்சி:
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜார்கண்ட்டில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு வருகிற 12-ம் தேதி பாட்னாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மே 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாள் பரோல் வேண்டி லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை ஐ.ஜி ஹர்ஷ் மங்கலா தெரிவித்துள்ளார். மேலும், பயணத்துக்கான நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலையே விமானம் மூலம் லாலு பிரசாத் கிளம்ப உள்ளதாக, லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பொதுச்செயலாளருமான போலா யாதவ் தெரிவித்துள்ளார். #laluseekingparol
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜார்கண்ட்டில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கு வருகிற 12-ம் தேதி பாட்னாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மே 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 5 நாள் பரோல் வேண்டி லாலுவின் வழக்கறிஞர் பிரபாத் குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு 3 நாள் பரோல் அளிக்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை ஐ.ஜி ஹர்ஷ் மங்கலா தெரிவித்துள்ளார். மேலும், பயணத்துக்கான நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலையே விமானம் மூலம் லாலு பிரசாத் கிளம்ப உள்ளதாக, லாலு பிரசாத்தின் நெருங்கிய நண்பரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பொதுச்செயலாளருமான போலா யாதவ் தெரிவித்துள்ளார். #laluseekingparol