search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress rally"

    • காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ப.சிதம்பரம் எம்.பி. பங்கேற்றார்.
    • சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    காரைக்குடி

    ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி நடத்தினர்.காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த பேரணியை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தனர். இதில் சிதம்பரம் எம்.பி. பேசுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் சிறப்பு வாய்ந்த தாகும். இந்த தேசத்தின் ஒற்றுமைக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் பாடுபடும்.இந்து முஸ்லீம், இந்து கிறிஸ்தவர் இடையே ஒற்றுமை ஓங்க வேண்டும் என்றார்.

    இதில் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சுப்புராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், மாநில மகிளா காங்கிரஸ் துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மாவட்ட மகளிரணி தலைவி இமய மடோனா, காரைக்குடி நகர தலைவர் பாண்டி, தேவகோட்டை நகர தலைவர் சஞ்சய், மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, நகர செயலாளர் குமரேசன்.

    மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரவீன், துணை தலைவர் பாலா, நகர்மன்ற உறுப்பினர்கள் ரத்தினம், அமுதா, அஞ்சலிதேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி மாங்குடி, அண்ணா துரை, காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் கோவிலூர் அழகப்பன், வட்டார தலைவர்கள் கருப்பையா, செல்வம், வர்த்தக அணி ஜெயப் பிரகாஷ் உள்பட நிர்வா கிகள், மகளி ரணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து ராஜீவ் காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.

    • சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
    • திடீரென மேடை சரிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக அரசு பங்களாவை காலி செய்யக்கூறி நோட்டீசும் அனுப்பப்பட்டது.

    ஆனாலும் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக கட்சிக்காரர்கள் அமரும் வகையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்த ஆண், பெண் உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • காங்கிரஸ் அறப்போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
    • சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    காரைக்குடி

    ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காரைக்குடி மகர்நோன்பு திடலில் உள்ள காந்தி சிலை அருகே மாங்குடி எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தினர்.

    முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம், மாவட்ட தலைவர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், காரைக்குடி நகரத்தலைவர் பாண்டி மெய்யப்பன், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேவி மாங்குடி, காமராஜ், கல்லல் ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன், வட்டாரத் தலைவர்கள் செல்வம், கருப்பையா, தேவகோட்டை அப்பச்சி சபாபதி, சஞ்சய், கவுன்சிலர்கள் அமுதா, அஞ்சலிதேவி.

    மானாமதுரை நகர்மன்ற கவுன்சிலர் புருஷோத்தமன், சிவகங்கை நகர்மன்ற கவுன்சிலர் விஜயகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் இமயமெடோனா, கண்டனூர் நகரத்தலைவர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ் நகர்செயலாளர் குமரேசன், வக்கீல் ராமநாதன், எஸ்.எஸ். ரமேஷ், புதுவயல் முத்துக்கண்ணன், ஜெயப்பிரகாஷ், முகமது மீரா, மானாமதுரை சஞ்சய், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செய லாளர்கள் ராஜீவ்கண்ணா, ஆதி. அருணா.

    மணச்சை பழனியப்பன், கருப்பையா, ராமசாமி, தட்சிணாமூர்த்தி, முகமது ஜின்னா, பழ.காந்தி, லோட்டஸ் சரவணன், கனிமுகமது, ராமசாமி, மீனாட்சிசுந்தரம், ரவி, திருப்பத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் சீனிவாசன் இளைஞர் காங்கிரஸ் பாலா, சசி, முத்து, அசார், மாஸ்மணி, மாணவர் காங்கிரஸ் தியோடர், வசந்தா தர்மராஜ், சூரியா, நாச்சம்மை, மாரியாயி, செல்வி, கலா உள்பட பலர் பங்கேற்றனர்.

    கோவையில் நாளை காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பேரணி தொடங்குகிறது. இதில் திருநாவுக்கரசர் - முகுல் வாஸ்னிக் பங்கேற்கிறார்கள். #congress #thirunavukkarasar

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சித்தாபுதூர் மகளிர் பாலிடெக்னிக்கில் இருந்து தொடங்குகிறது.

    பேரணி ஆர்.டி.ஓ. அலுவலகம் வழியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் சென்றடைகிறது.

    மத்திய பாரதீய ஜனதா அரசின் ரபேல் போர் விமான பேர ஊழலை நாட்டு மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் பொது செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆகியோர் பேசுகிறார்கள்.

    இதில் மாநில ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, மாநில பொது செயலாளர் வீனஸ் மணி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் வட்டார தலைவர்கள்உள்ளிட்ட பலர் பங்கேற்கிறார்கள். கோவை ராமநாதபுரம் வட்ட தலைவர் கணேசன் நன்றி கூறுகிறார்.

    ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கிறார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #congress #thirunavukkarasar

    ×