search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சத்தீஸ்கரில் திடீரென சரிந்த மேடை- காங்கிரஸ் பேரணியில் பரபரப்பு
    X

    சரிந்த மேடை

    சத்தீஸ்கரில் திடீரென சரிந்த மேடை- காங்கிரஸ் பேரணியில் பரபரப்பு

    • சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
    • திடீரென மேடை சரிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ராய்ப்பூர்:

    பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாகப் பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. இதன் தொடர்ச்சியாக அரசு பங்களாவை காலி செய்யக்கூறி நோட்டீசும் அனுப்பப்பட்டது.

    ஆனாலும் கோர்ட்டின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 21-ம் நூற்றாண்டின் கவுரவர்கள் என பேசியதற்காக ராகுல் காந்தி மீது மற்றொரு அவதூறு வழக்கு பாய்ந்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக பேசியதற்காக மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்தி மீது பதிவாகி உள்ளது.

    இதற்கிடையே, ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு விவகாரம் தொடர்பாக, சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று நடத்தப்பட்டது. இதற்காக கட்சிக்காரர்கள் அமரும் வகையில் மேடை ஒன்று அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், திடீரென மேடை சரிந்து விழுந்தது. மேடையில் இருந்த ஆண், பெண் உறுப்பினர்கள் கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×