search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் வெப்ப அலை வீச தொடங்கியதால் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100 டிகிரி வரை வெயில் அடித்து சதம் அடித்தது.

    இதைத்தொடர்ந்து வெப்பசலன காற்று வீசி கடந்த 5 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தியது. இதில் தருமபுரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை 45 வருடங்களுக்கு பிறகு 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது. இதனால் கடுமையான வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் சிலர் குடைபிடித்தப்படி சாலைகளில் நடமாடினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று வெப்ப சலன காற்று குறைய தொடங்கி வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இரவு திடீரென்று கோடை மழை பெய்தது. இதனால் தருமபுரி, பாலக்கோடு, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சில இடங்களில ஆலங்கட்டியுடன் மழையும் பெய்தது. இதனால் கடுமையான வெயிலால் வாட்டி வதைந்து வந்த பொதுமக்களுக்கு இந்த கோடை மழை சற்று ஆறுதலாக குளிர்ச்சியை தந்தது. இதனால் அவர்கள் இரவில் நிம்மதியாக தூங்க சென்றனர்.

    இந்த நிலையில் இன்றும் வடமாவட்டங்களில் உள்பகுதிகளில் சில இடங்களில் கடுமையான வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை விடுத்து இருந்தது. ஆனால், மாறாக தருமபுரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை வெப்பம் தணிந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இன்று 100 டிகிரி கீழ் சென்று 96 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் தலைகாட்ட தொடங்கியது.

    கடந்த ஒரு வாரமாக வெப்பஅலையால் பொது மக்கள் வெளியில் தலை காட்ட முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில் இன்று காலை குளிர்ந்த சீதோஷ்ண நிலையுடன் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் சற்று நிம்மதியடைந்தனர்.

    இதேபோன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை காரணமாக கடுமையான வெயிலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காவேரிப்பட்டணம், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், பாரூர் ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது. இதில் சூளகிரி, ஓசூர், காவேரிப்பட்டணம், பாரூர் ஆகிய பகுதிகளில் ஆலங்கட்டியுடன் மழை பெய்தது.

    இதனால் கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், ஓசூர், சூளகிரி பகுதிகளில் வெயில் தாக்கம் இல்லாமல் குளிர்ந்த சீதோஷ்ண சூழ்நிலை நிலவியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 96 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகி இருந்தது.

    இதனால் காலை வேளையில் வேலைக்கு செல்பவர்கள், விவசாயி கூலி தொழிலாளிகள் சற்று நிம்மதியடைந்தனர்.

    • தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.
    • விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை மோடி அள்ளி வீசி வருகிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.

    இந்த பிரசாரத்தை செய்வதற்கு காரணம் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை தான். அதன் காரணமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரசாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

    காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சி வெறும் ஆட்சியே. ஆனால், தமது 10 ஆண்டுகால ஆட்சி தேசத்திற்கான சேவை என்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி உலக அரங்கில் ஏழாவது நாடாக கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

    ஆனால், கடந்த 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2014-ல் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் டாக்டர் மன்மோ கன்சிங் ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி எட்டப்பட்டது.

    ஆனால், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் ரூபாய் 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.

    ஆனால், 2024-ல் அடைந்ததோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். மோடி கொடுத்த அறிவிப்பின்படி இருமடங்கு வளர்ச்சி எட்டப்படவில்லை.

    5 லட்சம் டிரில்லியன் டாலர் என்று சொன்னால் ரூபாய் 390 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2024 இல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சி பெற்றதோ ரூபாய் 173 லட்சம் கோடி தான்.

    இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வளர்ச்சியை காட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத பிரதமர் மோடியின் பொருளாதார தோல்வி இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.

    காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பிரதமர் மோடி, நாள்தோறும் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசி, பேசி நாட்டு மக்களிடையே பேசு பொருளாக மாற்றி விட்டார்.

    கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீப காலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.

    இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.

    இத்தகைய பேச்சுகள் பா.ஜ.க.வின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயமாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

    சென்னை:

    அரசு போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு, சாலை மார்க்கமான பொதுப் போக்குவரத்தை, எட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் 20,260 பேருந்துகள் மூலம் 10,125 வழித்தடங்களில் இயக்கி வருகிறது. தினசரி 18,728 பேருந்துகளும், வார இறுதி நாட்களில் பொது மக்களின் தேவையின் அடிப்படையில் அதிகப்படியான சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு, நாளொன்றுக்கு 1.76 கோடி பயணிகள் பயன்பெறுகின்றனர்.

    இதில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் மகளிர் நலனுக்காக பயணக் கட்டணமில்லாமல் இயக்கப்படும் 7,179 பேருந்துகளின் மூலம் 51.47 லட்சம் மகளிர் தினசரி பயணிக்கின்றனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் தடத்தில் பழுதடைதல் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகபட்சமாக 10,000 கிலோமீட்டருக்கு 0.10 என்ற அளவில் இருந்த எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் பேருந்துகளின் பராமரிப்பதில் தனி கவனம் செலுத்தியதின் காரணமாக 2022-23 மற்றும் 2023-24 ஆண்டுகளில் முறையே 0.002 மற்றும் 0.001 ஆக குறைந்துள்ளது.

    ஊடகங்கள் மூலம் அரசின் கவனத்திற்கு வரும் பழுதுகள் உட்பட, அனைத்து பழுதுகளும் முழுமையாக களையப்படவேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வுக்கு உட்படுத்தி சரி செய்யவேண்டும் என 26.4.2024 தேதியில் உத்தரவிடப்பட்டதனை தொடர்ந்து தற்போது அனைத்து பஸ்களையும் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில் 1000 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு, முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள பஸ்களின் கூண்டினை புதுப்பிக்க 2022-23 ல் 1000 பஸ்களும் 2023-24 ல் 500 பஸ்களும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரையில் 839 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதுப்பிக்கப்பட்டு தடத்தில் இயக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும், அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதில் தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக 2022-23-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-24 ல் 29 உயிரிழப்புகள் குறைந்து உள்ளது.

    பொது மக்களுக்கு தட பழுதுகள் மற்றும் விபத்து இல்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செல்போன் செயலி மூலம் மோசடி.
    • உடந்தையாக இருந்த மேலும் ஒருவர் கைது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் மதம் மாறினால் ரூ.10 கோடி தருவதாக அவரிடம் கூறினார். மேலும் இதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்கி வருமான வரி செலுத்துவது உள்ளிட்ட காரணங்களுக்காக கோவில்பட்டி வாலிபரிடம் பணம் கேட்டுள்ளார்.

    இதை நம்பிய அவர் ரூ.4 லட்சத்து 88 ஆயிரத்து 159-ஐ ஜி.பே மூலம் கொடுத்துள்ளார். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் மோசடியில் ஈடுபட்டது தஞ்சாவூர் ரெட்டி பாளையம் ரோடு ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜவேல் (வயது 31) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், இவருக்கு உடந்தையாக கர்நாடக மாநிலம் பெங்களூரு சிங்கசந்தரா பகுதியை சேர்ந்த கணேசன் (31) என்பரும் இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
    • பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    துணைவேந்தர்களை ராஜினாமா செய்யத் தூண்டும் அளவிற்கு பல்கலைக்கழகங்களில் நிலவும் கடும் நிதி நெருக்கடிகள்-இளைய சமுதாயத்தின் எதிர் காலத்தை வளப்படுத்தும் பல்கலைக் கழகங்களை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில் அப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் குமார், அண்மையில் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மட்டுமல்லாது, சென்னைப் பல்கலைக்கழகம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தமிழகத்தில் இருக்கும் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் கடும் நிதி நெருக்கடி நிலவிவருவதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் என அனைவருக்கும் மாத ஊதியம் கூட வழங்க இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அதற்கு உரிய தீர்வு காண வேண்டிய அரசு, கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது கடும் கண்டனத்திற்குரியது.

    மாநிலப் பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளை களைய உயர்கல்வித்துறையால் அமைக்கப்பட்ட உயர் மட்டக்குழுவும் மாநில அரசைப் போலவே உறங்கிக் கொண்டிருப்பதன் விளைவாக, பல்கலைக் கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் துணைவேந்தர் ஒருவரே ராஜினாமா செய்யும் அளவிற்கான அவலநிலை உருவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது.
    • ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    திருவண்ணாமலை:

    சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி பாஸ்ட் லோக்கல் மின்சார ரெயில் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும்.

    வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரெயிலைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ரெயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரெயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி மே 2-ம் தேதி முதல் வண்டி எண் 06033 சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று வேலூர் ரெயில் நிலையத்துக்கு 9 மணி 35 நிமிடங்களுக்குச் சென்றடையும். அதன்பின், அங்கிருந்து பெண்ணத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மடிமங்கலம், போளூர் வழியாக திருவண்ணாமலைக்கு இரவு 12 மணி 5 நிமிடங்களுக்குச் செல்லும்.

    திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேதாரம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரெயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்துக்கு 5.40 மணிக்கு வந்து சேரும்.

    அதனைத்தொடர்ந்து வேலூர் ரெயில் நிலையத்தில் இருந்து அனைத்து ரெயில் நிலையங்கள் வழியாக 9 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தைச் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்த நீட்டிப்பு ரெயில் சேவை மே 2-ந்தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது. பின்னர் நிர்வாக காரணங்களுக்காக இந்த ரெயில் சேவை நீட்டிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரெயில் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

    இந்நிலையில் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை நீட்டிப்பு சேவை இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு ரெயில் சேவை தொடங்கியது. ரெயில் சேவை மீண்டும் தொடங்கியதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

    • வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
    • இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    ஊட்டி:

    நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

     மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.

    • உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு.
    • உள்ளூர் சந்தை மட்டுமின்றி வெளியூர்களுக்கும் ஏற்றுமதியாகிறது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டுள்ள பகுதியாக திகழ்கிறது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருக்கும் தொழில் மீன்பிடி தொழில் உள்ளது. சுமார் 1,650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலாளர்களாக உள்ளனர். இந்த பகுதியில் கிடைக்கும் இறால்மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட பல்வேறு வகையாக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் அன்னிய செலாவணியும் அதிக அளவில் கிடைக்கிறது. ஆனால் மீன்களை காய வைத்து கருவாடு ஆக்கினால் அதன் சுவையே தனித்தன்மை கொண்டது.

    தமிழர்களின் உணவில், கருவாடுக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. ஆனால் ஏனோ, மீனை உணவில் சேர்த்து கொள்ளும் அளவுக்கு கருவாடை சேர்த்து கொள்வதில்லை. ஒருவேளை அதன் வாடை காரணமாகவும் இருக்கலாம் என்ற கருத்தும், அல்லது அதன் சுவை சிலருக்கு பிடிக்காமல் இருப்பதும் காரணமாக கூறப்படுகிறது. எனினும், நிறைய மருத்துவ குணங்களை இந்த கருவாடுகள் ஒளித்து வைத்து இருக்கிறது.

    கோடை வெயில் கொளுத்தும் நிலையில் பாம்பனில் மீன்களைக் கருவாடாக்கும் பணியில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    அரியவகை மீன்கள் கிடைக்கும் பாம்பன் பகுதியில் விற்பனைக்குப் போக மிஞ்சும் மீன்கள் மற்றும் கருவாட்டுக்கு நல்ல சுவையுள்ள மீன்களைத் தேர்ந்தெடுத்து கருவாடாக்கி வெளி மாவட்டம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இங்கு தயார் செய்யப்படும் கருவாடு உள்ளூர் சந்தைகள் மட்டுமில்லாமல் வெளியூர்களுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. மீன்பிடி தடைக்காலம் என்பதால் மீன்களைக் கருவாடாக்கும் பணி பாம்பனில் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் தொடங்கிய நிலையில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டுமே மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் டன் கணக்கிலான மீன்களைக் கருவாடாக காய வைக்கும் பணியில் மீனவ பெண்கள் பாம்பன் பாலத்தின் கீழ் ஈடுபட்டு வருகின்றனர்.

     இதில், மருத்துவ குணம் கொண்டுள்ள நெத்திலி, திருக்கை, சாவாளை, வாழை, நகரை, கட்டா, மாசி, கனவாய், பால்சுறா போன்ற மீன்களை அதிகளவில் கருவாடாக்கி வருகின்றனர். தற்போது மீன் வரத்தினை பொறுத்து விலை இருக்கும் நிலையில், தடைக்காலம் என்பதால் கருவாடு விலை அதிகரித்துள்ளது.

    அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதான். 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் உள்ளது. கருவாட்டினை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.

    கருவாடுகளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுவதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும். உடல் நலம் குன்றியவர்கள் கருவாட்டுக் குழம்பினை எடுத்துக் கொண்டால், உடல் நலம் தேறுவார்கள் என்பது நம்பிக்கையுடன் கூடிய மருத்துவ முறையாக இன்றும் கருதப்படுகிறது.

    சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டுச்சாறு எடுத்துக்கொள்வது சிறந்த மருந்தாக இருக்கும் என்று கருத்து நிலவுகிறது. கருவாடு சாப்பிடுவதால் பூச்சிகளை அகற்றும். பித்தம், வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருவாடுக்கு உண்டு. மாதவிலக்கு பலவீனம், சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.

    கொடுவா கருவாடு வாங்கி குழம்பு வைத்தால், அதுவே பலருக்கு மருந்தாகிவிடும். காரணம், கொடுவாமீனை விட கொடுவா கருவாடில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளது. 100 கிராம் கொடுவா மீன், நமக்கு 79 கலோரி ஆற்றலை தருகிறது என்றால், 100கிராம் கொடுவா கருவாடு, 266 கலோரி ஆற்றலை நமக்கு தருகிறதாம்.

    அதாவது, கொடுவாமீனுடன் ஒப்பிடும்போது, புரதச்சத்து 4 மடங்கும், தாதுப்புக்களின் செறிவு 10 மடங்கும், இரும்புச் சத்து 5 மடங்கும், சுண்ணாம்புச்சத்து 2 மடங்கும் அதிகமாக இருக்கிறதாம்.

    இந்த கருவாடை சாப்பிட்டால், உடல்பலவீனம் மறைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ரத்த சோகை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வு இந்த கருவாடு. அதுபோலவே, கெளுத்தி மீனைவிட, உப்பங்கெளுத்தி கருவாட்டில்தான் சத்து அதிகம்.

    சீலா மீனைவிட, சீலா கருவாட்டில்தான் சத்து அதிகம். இறால் கருவாடை அடிக்கடி உணவில் பயன்படுத்தினால், ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. வாய்வுப் பிடிப்பு, பசிமந்தம், மூட்டுவலி, அரிப்பு, வயிறு உப்புசம் போன்றவற்றிலிருந்தும் விடுபடலாம். இன்னும் ஏராளமான கருவாடுகள் இருக்கின்றன. ஆனால், எல்லா கருவாடுமே நன்மை தரக்கூடியதுதான்.

    • பிளஸ்-2 முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம்.
    • தேர்வுத்துறை அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற்றது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித் தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் நடைபெற்றது.

    இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ந்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    பிளஸ்-2 முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

    • பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்.
    • கைது செய்து சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கேசர்குளி சாலை கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். இவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம், தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். இவரும், இவரது மனைவி புனிதாவும் சேர்ந்து தனியார் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

    அதில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். அதில் முதலீடு செய்தால் அதிகலாபம் கிடைக்கும் என்று ஆசைவார்ததை கூறினர். அதனை நம்பி, 3.10.2015-ம் தேதி வங்கி மூலம் ரூ.2 லட்சமும் , பணமாக ரூ.2 லட்சமும் என ரூ.4 லட்சம் டெபாசிட் செய்தேன்.

    மேலும் இரண்டு ஏலச்சீட்டில் சேர்ந்து அதன் மூலம் பணத்தை கட்டி வந்ததாகவும், இவ்வாறாக டெபாசிட் செய்த தொகை மற்றும் ஏலச்சீட்டில் கட்டிய தொகை என மொத்தம் ரூ.13 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தனர்.

    இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும். என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இவ்வழக்கானது விசாரணைக்காக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் இருந்து தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாறுதல் செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    விசாரணையில் சாம்ராஜ் ரூ.36 லட்சத்து 83 ஆயிரத்து 40 பணத்தை 4 நபர்களிடமிருந்து டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டுக்காக பெற்றுக்கொண்டு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    இவ்வழக்கில் சாம்ராஜ் என்பவரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்த நிலையில் 25.03.2024 -ம் தேதி அவரை கைது செய்து கோவை முதலீட்டாளர்கள் நலன் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார்.

    எனவே தனியார் பைனான்ஸ் - இன்வெஸ்மெண்ட் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தில் டெபாசிட் மற்றும் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து, பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கற்பகம், தெரிவித்துள்ளார்.

    • தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது.
    • கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகளவில் மஞ்சள் பயிரிடப்பட்டு வருகிறது. ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடங்கள் ஆகிய 4 இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

    இங்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் வரை மஞ்சள் விற்பனையாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் மஞ்சள் தேவை அதிகரித்ததன் காரணமாகவும் தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளிலும் புதிய மஞ்சள் அறுவடை நடந்ததாலும் மஞ்சள் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

    இந்த நிலையில் கடந்த மார்ச் 13-ம் தேதி கோபி வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 557 முதல் 21 ஆயிரத்து 369 வரை என விலை உயர்ந்தது. அதற்கு இணையாக பிற இடங்களிலும் தரமான மஞ்சள் ரூ.20 ஆயிரத்திற்கு மேலாக விற்பனையானது. அதன் பின் மீண்டும் விலை குறைய தொடங்கியது.

    பின்னர் மார்ச் 27-ம் தேதியில் குவிண்டால் ரூ.17 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் பல்வேறு காரணங்களால் மஞ்சள் மார்க்கெட்டுக்கு 10 நாட்களுக்கு மேலாக விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏலம் தொடங்கியதும் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.17 ஆயிரமாக நீடித்தது. தேர்தலுக்குப் பின் கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் உயர்ந்து ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது.

    இதுகுறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் கூறியதாவது:-

    கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் சீசன் தொடங்கி புதிய மஞ்சள் வரத்தால் குவிண்டால் ரூ.21 ஆயிரத்தை கடந்தது. அதே நேரம் பஸ்மத், நாம்டேட் உட்பட பல மாநிலங்களில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கியதால் மஞ்சள் வரத்து அதிகரித்தது.

    இதனால் விலை குறைய தொடங்கியது. தற்போது சில வாரங்களாக ஈரோடு பகுதியில் புதிய மஞ்சள் அறுவடை தொடங்கினாலும் வரத்து சீராக உள்ளது. கர்நாடகா, தர்மபுரி பகுதிகளில் அறுவடை செய்த தரமான மஞ்சளுக்கு ஈரோடு பகுதியில் விலை கிடைப்பதால் அவற்றை விற்பனை செய்ய இங்கு கொண்டு வருகின்றனர்.

    அதன் காரணமாக கடந்த 12 நாட்களில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் வரை உயர்ந்து நேற்று அதிகபட்சமாக குவிண்டால் ரூ.18 ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 29 முதல் ரூ.18 ஆயிரத்து 599 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.9 ஆயிரத்து 600 முதல் ரூ.16 ஆயிரத்து 719 வரையிலும் விற்பனையானது.

    அதேபோல ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 900 முதல் ரூ.18 ஆயிரத்து 810-க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 9 முதல் ரூ.17 ஆயிரத்து 99-க்கும் விற்பனையானது.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 4 மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கும் மொத்தம் 445 மூட்டைகளில் மஞ்சள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 623 மூட்டை மஞ்சள் ஏலம் போனது. தொடர்ந்து மஞ்சள் விலை உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
    • விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார்.

    சென்னை:

    நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிச. 28-ந்தேதி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

    வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பொதுமக்கள் தே.மு.தி.க. அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

    விஜயகாந்தை பொருத்தவரையில் எல்லோருக்கும் உதவும் எண்ணம் கொண்டவராகவும் தன்னை தேடி வந்தவர்களை சாப்பாடு போட்டு அனுப்பும் பழக்கம் உள்ளவராகவே இருந்து வந்துள்ளார். மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் செய்துள்ளார்.

    இதுபோன்ற நல்ல உள்ளம் கொண்டவராக அவர் திகழ்ந்ததன் காரணமாகவே விஜயகாந்த் மீது பொதுமக்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர் உயிரிழந்த பிறகும் அவரது நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் அவருக்கு தொடர்ச்சியாக மரியாதை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர். மேலும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவிடமாக இது போற்றப்படுகிறது.

    ×