search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைவிழா"

    • தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.
    • நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் இயக்குனர் கோபாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் இந்திய அரசு, கலாச்சாரதுறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மையமாகும். இந்தியாவின் கிராமப்புற பாரம்பரிய கலைகளையும் மற்றும் பாரம்பரிய பழங்குடி கலைகளையும் பாதுகாத்து வருகின்றன.

    இந்த நிலையில் தென்னகப் பண்பாட்டு மைய திறந்தவெளி கலையரங்கில் கோடை விழா-2023 முன்னிட்டு பல்வேறு மாநில கலைஞர்களின் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகள்,

    கைவினை கலைஞர்களின் பொருட்காட்சி விற்பனை மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா நாளை (புதன்கிழமை ) மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 25 ஆம் தேதி வரை நடைபெறும். தினமும் மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை கோடை விழா நடைபெற உள்ளது.

    இந்த விழாவை எஸ்.எஸ். பழனி மாணிக்கம் எம்.பி. தொடங்கி வைக்கிறார்.

    மேலும் இந்த கலை விழா தென்னகப் பண்பாட்டு மையம் மட்டுமல்லாமல் பாபநாசம், மயிலாடுதுறை மற்றும் திருச்சியிலும் நடைபெறும்.

    இவ்விழாவில் தமிழ்நாடு, ஆந்திரா ,கர்நாடகா, கேரளா, கோவா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்தக் கலை விழாவுக்கு முன்னோட்டமாக தென்னக பண்பாட்டு மைய வளாகத்தில் பிரதி வெள்ளிக்கிழமைகள் தோறும் மாலை 6.30 மணிக்கு வாராந்திர கலை விழா தஞ்சை மற்றும் தஞ்சைக்கு அருகில் உள்ள கலைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படு த்தவும், கிராமப்புற மக்களின் கலை ஆர்வத்திற்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு கலை நிகழ்ச்சிகள் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது.

    மேலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தவும் தீர்மானிக்கப்ப ட்டுள்ளது.

    நாளை சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் காலை 7 மணிக்கு உலக யோகா தினம் மற்றும் உலக இசை தின நிகழ்ச்சிநடைபெற உள்ளன.

    அனைவரும் கோடை விழாவுக்கு வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாக அலுவலர் சீனிவாசன் ஐயர், அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
    • ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள வண்ண மயமான மலர்களையும், மலர்கள், காய்கறிகள் பழங்க ளால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் மலர்களால் ஆன சின்சான் பொம்மை குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இதேபோல், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.

    இவ்விழாவை முன்னிட்டு வரும் 28-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டி கள், விளை யாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.

    2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியும், கலைய ரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கரகம், மான், மயில், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்பில் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.

    கோடை விழாவின் 3-ம் நாளான இன்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணி களுக்கும், இளைஞர்க ளுக்கும், அரசு ஊழியர்க ளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த விழாவையொட்டி ஏற்காட்டில் தங்கும் விடுதி, ஓட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

    இதனிடையே நேற்று மதியம் ஏற்காட்டில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீரோட்டங்களில் மழைநீர் ஓடியதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

    ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×